தீவிகை அவள் வரையனல் அவன்-29

தீவிகை வரையனல்-29

        ஒரு வாரம் முடிந்திருக்க அன்றிரவு உணவு முடித்து படுக்கும் பொழுது எப்பவும் போல அசைந்து கொடுக்கும் சம்யுவின் உயிர் அன்று அசைவதாக இல்லை. அவளும் இரவு குளித்து முடித்து இருக்க அதன் சுகத்திலும் அசதியிலும் விரைவில் உறங்கிட செய்தாள். 

    அடுத்த நாள் காலையில் என்றும் ஏழு மணிக்கு அசைந்து கொடுத்து தன்னிருப்பை சொல்லும் அந்த குட்டி உயிர் அசையாது இருக்க பணிக்கு செல்லும் மும்முரத்தில் இருந்தாள். 

     நூலக அலுவலகத்தில் வந்த பிறகு ஒன்பது மணி முதல் பத்து மணிவரையும் அசைந்து கொடுக்கும் தன் கரு அப்படியே இருக்க, அதன் பின்னே சம்யுக்தாவுக்கு நேற்று இரவிலிருந்து தன் சிசு அசைந்து கொடுக்காததை உணர்ந்தாள். 

       தன் வயிற்றை தொட்டுப் பார்த்தவள் அசைவு இல்லாமல் போக, பயந்து போனாள். தனக்கென இருக்கும் ஒருயிர் அதன் இருப்பும் தன்னால் அறியாது போவதால் பதினொன்று மணிக்கு வீட்டுக்கு சென்று முருகேஸ்வரி பாட்டியிடம் தெரிவித்தாள். 

    பாட்டியும் பயந்து போக அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்க, அங்கே அன்று பார்த்து கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பவும் க்யூவில் நின்று பார்க்கும் சம்யுவுக்கு இன்று அந்த வரிசை மலைப்பாக தெரிந்தது. 

   தனக்கு முன்னால் சென்று பார்க்கவும் இயலாது. எல்லோருமே நிறைமாத கர்ப்பிணிகள். தன்னிலை சொல்லியும் தங்களுக்கு முன் செல்ல துடிக்கும் ஒரு காரணமாக தான் அதை எண்ணினார்கள். 

     சம்யுவோ நேரம் தவறுவதை எண்ணி பயந்து விட்டாள். 

     "பாட்டி உடனே ஒரு ஸ்கேன் எடுக்கணும் பாட்டி. என்னால என் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது. எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்லை. தனியார் ஹாஸ்பிடலில் ஒரு ஸ்கேன் பார்த்துட்டு வருவோம்" என்றதும் கையில் மாத சம்பளம் சேர்த்து வைத்து இருக்க அதனை எடுத்துக்கொண்டு அருகேயிருக்கும் அந்த பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்றாள். 

     தன்னிலை கூறி விளக்கி பயத்தில் பேச, ஒரு மணிக்கு வந்த டாக்டரோ முதலில் ஸ்கேன் எடுக்க அழைத்து வர சொன்னார். 

    ஸ்கேனில் குழந்தை கையை கன்னத்தில் வைத்து நன்றாக உறங்குவதாக சொல்லவும் அதை தனக்கு காட்டுங்கள் என்று சம்யு கண்ணீரோட கேட்க, ஸ்கேன் மிஷின் திருப்பி காட்டவும் அதனை தடவி பார்த்து மகிழ்ந்தாள். 

      அவள் காணும் நேரத்தில் சின்னதாய் கொட்டாவி விட்டு உருள தன் வயிற்றிலும் அசைவு உணர்ந்த பிறகே நிம்மதியாய் மூச்சை வெளியிட்டாள். 

     "அம்மாவை பயமுறுத்திட்டியே குட்டி..." என்று "இந்தாங்க" கையில் டிசு பேப்பரை தர அதனை வாங்கி துடைத்தாள். 

      அரசு மருத்துவமனையில் சேலை துணியில் துடித்த நினைவு வர டிசு பேப்பரை துடைத்தபடி வெளியே வந்தாள். 

    அக்கணம் பேசியபடி வைஷ்ணவி செல்வதை கண்டார். போகும் பொழுது நர்ஸ் பெண்ணிடம், ஒரு அரை மணிநேரம் பார்த்துக்கோங்க வெளியே போய் சாப்பிட்டு வந்திடுறேன். எனக்கு சுகர். சுகர் மாத்திரை போட்டுட்டேன். மருமக தூக்கத்துல இருக்கா. குழந்தையும் பக்கத்தில தூங்கிட்டு இருக்கு." என கூறவும் "தாரளமா போயிட்டு வாங்க நாங்க குழந்தை அழுதா பார்த்து கொள்கிறோம்" என்று சொல்லவும் நன்றி கூறி வைஷ்ணவி அத்தை வெளியே செல்ல அவர்கள் எட்டி பார்த்த அறையில் வைஷ்ணவி அசதியில் உறங்குவது கண்டாள் சம்யுக்தா. 

     "பாட்டி இங்க இருங்க. நான் தெரிந்தவங்க பார்த்துட்டு வர்றேன்." என்று செல்லவும் முருகேஸ்வரி வெளியே இருக்கும் வரிசையில் அமர்ந்திருந்தார். 

      வைஷ்ணவி அருகே இருக்கும் குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். 

     வைஷ்ணவி பாதி இமை திறக்க "அண்ணி... வந்துட்டீங்களா..." என்று அவள் சேலையை பிடித்து கொண்டு கேட்க, சட்டென பயந்த சம்யு, பின்னர் பயம் களைந்து, "எப்படி இருக்கு வைஷ்ணவி.... இப்ப பரவாயில்லையா... குழந்தை அழகா இருக்கு..." என்று பேசவும். 

     நார்மல் பிரசவம் என்பதால் சற்றே பேச இயன்றது. 

     "அண்ணி... கருவுற்று இருக்கீங்களா.... ஏன் அண்ணி அண்ணாவை விட்டுட்டு போனிங்க.. இதை பார்த்தா அண்ணா சந்தோஷப்படுவார் தெரியுமா." என்றதும் 

    "மாட்டார்.... இந்த குழந்தை யாரோடதுனு கேள்வி கேட்பார். டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து கேட்டு ஜீவனாம்சம் தரலாம்." என்று சொன்னாள். 

    "அண்ணி... நீங்களா இப்படி பேசறது. அண்ணா அப்படி கிடையாது. அம்மா... அண்ணி மா..." என்றதும் சுபாங்கினி வர அங்கே சம்யுவை கண்டவர் ஓங்கி அறைந்தார். 

     "அம்மா என்ன பண்ற" என்று வைஷ்ணவி பதற, சம்யுக்தாவை ஒரு பெண் அறைவதை கண்டு முருகேஸ்வரி ஓடி வந்தார்.

    "என்னமா இது பிள்ளைதாச்சி பிள்ளையை அடிக்கிற யாரு நீ..." என்றதும் சம்யு முருகேஸ்வரி பாட்டியிடம் "பாட்டி இது என் அத்தை இவங்க நாத்தனார் வைஷ்ணவி" என்றதும் முருகேஸ்வரி அமைதி அடைந்து சில நிமிடமே.

      "ஏம்மா.... வூட்டை விட்டு ஒரு பொண்ணு வந்தா காணோம்னு தேட நினைச்சியா நீ... இந்த குழந்தை சாவு வர போயிட்டு திரும்பி வந்துருக்கு." என்று ஒரு மாதமாக மருத்துவமனையில் இருப்பதை கூறி முடித்து நின்றார். 

     மயக்கம் தெளிந்து நேர உன் வூட்டுக்கு தான் வந்துச்சு.  யாரது... சனனினு பொண்ணோட உன் பையன் போனதும் அந்த சனனி அம்மா அப்பா இவளை விரட்டாத குறையா அவங்க பொண்ணுக்கு உன் பையனை கட்டிக்க போது வந்து அதை தடுக்க வந்ததா ஏசிப்புட்டாங்க." 

     "வீட்டுக்கு வந்தியா சம்யு?" என்று கன்னம் ஏந்தி கேட்க, ஆம் என்பதாய் தலையசைத்தாள். சுபாங்கினி வயிற்றை கண்டு 

    "இந்த நிலைமையில் மீண்டும் வந்து பார்க்க என்ன.?" என்று அதட்ட, 

     "வந்து பார்த்துச்சே மா. அந்த சனனி பொண்ணு கண்ணாலம் சொன்ன தேதில. அப்போ அதுக்கு கல்யாணம் நடந்தது கேட்டுச்சு. இவங்க அப்பா வூட்டுக்குபோச்சு... வூடு பூட்டியிருந்ததாம் சோகமா வந்துச்சு. நீ வேற கவுர்மெண்ட் ஹாஸ்பத்திரியில ஒருத்தங்ககிட்ட என் பையன் நல்லா இருக்கான் இப்ப தானே கல்யாணம் ஆகிருக்கு பேசியிருக்கியாமே.அப்பறம் எப்படி உன் வூட்டுக்கு வரும். யாரும் என்னை தேடலை. என் ஆரவ் சந்தோஷமா இருக்கான் எனக்கு அது போதும்னு சொல்லிட்டு தனியா கஷ்டப்படுது." என்று முருகேஸ்வரி பாட்டி கூறவும். சுபாங்கினி சம்யுவை பார்த்து, 

    "அடிப்பாவி... அந்த நர்ஸ் ஏதாவது துருவி துருவி பேசும். அதுக்கு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆகி நல்லா இருக்கான் சொல்லிட்டு நழுவிட்டேன். இந்த ஜனனி அம்மா அப்பா... உன் மேல கோபம். அவங்க பொண்ணுக்கு வாழ கொடுத்து வைக்காத இடம். நீ பறிச்சுக்கிட்டதா எத்தனை முறை புலம்பினாங்க தெரியுமா. அந்த கோபம்... நீ நேர என்னிடமோ ஆரவிடமோ வந்து நிற்க வேண்டியது தானே. என் மகன் முன்னவே உன்னை தான் அதிகமா விரும்பினான். இப்ப கணவன் மனைவினு பந்தமான பிறகு உன்னை விடுத்து வேற எவளையாவது கட்டிக்க சம்மதிப்பானா?" என்று தெளிவுப்படுத்தினார். 

     "அப்போ ஆரு..." என்றாள் சம்யுக்தா.

      "கூட தானே வந்துட்டு இருந்தான்" என திரும்ப அனைத்தும் கேட்டு கொண்டு இருந்தவன் பார்வை சம்யுக்தா மணிவயிற்றில் பார்த்திருந்தான்.

    அதே நேரம் "என்ன இங்க கூட்டம். ஒருத்தர் தான் இருக்கணும். மற்றவங்க பார்த்துட்டு உடனே கிளம்புங்க." என்று கூறி செல்லவும். 

    "ஆரவ்... சம்யுக்தாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போடா." என்றதும் "இல்லை...நான்.." என்று சம்யு கூற வர ஆரவ் பார்வை கண்டு அமைதியானாள். 

     "அம்மா.. இது என் அட்ரஸ்... இப்ப நான் அவளை கூட்டிட்டு போறேன். நீங்க நாளைக்கு வாங்க." என்று ஆரவ் முருகேஸ்வரியிடம் கார்டை கொடுத்து தாயிடம் சொல்லிவிட்டு, 

     "நான் போயிட்டு வர்றேன் வைஷ்ணவி... குழந்தை பார்த்துக்கோ... சந்துருவிடம் சொல்லிடு." என்று புறப்பட்டான். 

    கூடவே ஏந்திழையாக நின்றியிருந்தவளை கைப்பிடித்து அழைத்து சென்றான். 

     சம்யு அவனின் உரிமையான தீண்டலில் அவன் பின்னே சென்றாள். முருகேஸ்வரி பாட்டியிடம் மட்டும் தலையசைத்து கண்களில் செல்வதாக கூறினாள். அந்த முதியவளும் அதீத சந்தோஷத்தோடு வழியனுப்பினார். 

     காரில் ஏறியதும் அதீத அமைதி தாக்க, ஆரு பேசுவானா... புரிந்துக் கொள்வானா... தன் கருவை என்னவென்று ஏற்பான். அய்யோ... தவறாக எண்ணிவிட்டால்... என்ற மனம் குதிரைவிட வேகமாக பயணித்தது. 

     ஆனால் ஜனனியை திருமணம் செய்யவில்லை என்றதும் தனக்காக எல்லோரும் தேடிக் கொண்டியிருப்பதை ஒரளவு அவர்கள் பேச்சின் வலியில் உணர முடிந்தது. அதனால் இனி எந்த கிறுக்குத்தனமும் வேண்டாம் ஆரவ் பேசட்டும். அதுவரை எதையும் பேசி குழப்பப்படுத்த வேண்டாமென இருந்து கொண்டாள். 

    வீட்டுக்கு வந்து கார் கதவை திறந்து நின்றான். சம்யு அதன் பிறகே வீடு வந்தவுணர்வை அடைந்து இறங்கினாள். 

    வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல, சம்யுக்தா ஒவ்வொரு அடியாக எடுத்து ஹாலுக்கு வந்தாள். 

    ஆரவ் கிச்சனுக்கு சென்றான். வேகமாக மாதுளை பழச்சாறு கலந்து எடுத்து வந்து நீட்டினான். 

   பயணக்களைப்பிற்கும் இங்கு வந்த சேர்ந்த நிம்மதியும் அதை பருகியதும் இதமும் தந்தது. 

   ஆரவ் கண்கள் தன்னை தான் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவுகிறதென அறிந்து அசவுகரியம் அடைந்தாள். 

    மெல்ல அவன் பார்க்க அவனோ அவள் கையை பிடித்து எழுப்பி தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான். 

    மெத்தையில் அமர வைத்து கைகட்டி நின்றான். 

     சம்யுக்தாவுக்கு பழச்சாறு அருந்தியும் நாவறண்டது போன்ற உணர்வு. கண்கள் அவனை காணவும் அஞ்சியது. 

    எல்லாம் அவள் தங்கள் மெத்தையில் அமரும் வரை தான், முட்டியிட்டு அவள் மடியில் தலைவைத்தவன் கைகள் அவள் இடையில் கோர்த்து இருந்தன. 

     அவன் வலிய தோள்கள் மெல்ல குலுங்க அதன் பிறகே அவன் அழுவதை கண்டாள். 

     "ஆரு... அழுவறியா... ஆரு...." என்றவள் மனமும் உடைந்து விட்டது. 

    அவன் சிகையினை கோதி கொண்டு, "ஐ அம் சாரி டா... நான் உன்னை நேர்ல பார்த்துட்டு முடிவு பண்ணியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்." என்று கதறி அழவும், அவள் வயிற்றில் முத்தமிட்டு, "ஐ அம் சாரி டி... உன்னை என்ன என்ன பேசிட்டேன். தப்பு என் பேர்லயும் தான். இப்பவாது வந்தியே..." என்று அவள் வயிற்றில் முத்தமிட்டு அணைத்தான். 

      "ஆறு மாதம்..." என்று கேட்டு முடிக்க, 

      "ம்ம்ம்... ஆறு மாதம்" என்று சம்யுவும் கூறி ஆரவ் நெற்றியில் முத்தமிட்டு கண்களை கண்டாள். 

   அதில் இந்நாள் வரை தான் இல்லாத காரணத்தால் அவன் அடைந்த சோர்வு, வலியை கண்டாள். 

      தான் இங்கிருந்து சென்ற நாள் முதல் இன்றைய நாட்கள் வரை கூறி முடிக்க, ஆரவிற்கு சில பேர் மீது நல்ல எண்ணமும். சிலரை பழி வாங்கும் வெறியும் சேர்ந்தது. 

  அனைத்தையும் எண்ணி கொண்டு கோபமாக மாறியவனை அவன் சிசு ஒர் உதை கொடுத்து அதன் அசைவை அவனுக்கு உணர்த்தியது. 

    மற்றவை மறந்து அதன் அசைவை தொட்டு உணர்ந்து ஆனந்த பரவசம் கொண்டவன். தன் யுக்தாவை அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். 

    யுக்தா இத்தனை நாளின் வலியை ஒரே மருந்து கொடுத்து சரிபடுத்திய மருத்துவனாக ஆரவ் கண்டாள். 

  தன் வாழ்வின் முழுமை எல்லாம் ஆரவ் என்று யுக்தா எண்ண, அதையே வாய் வார்த்தையாக ஆரவ் கூறியிருந்தான். 
    
     "என்னோட வாழ்வோட முழுமை நீ தான் யுக்தா. என்னை விட்டு எங்கேயும் போகாதே." என்று அவள் தாமரை முகத்தை தன் நெஞ்சில் சாய்த்து கூறினான். 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

  - பிரவீணா தங்கராஜ்.

     
     

   

Comments

  1. Super sis aaru and yuktha ah sethu vachutinga.....😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1