இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

பஞ்ச தந்திரம்-10

பஞ்ச தந்திரம்-10      வேதாந்த் நைனிகாவை பார்த்து விட்டு, திரிஷ்யா கூட வந்த மற்றவர்களை பார்வையால் அலசினான்.           ரஞ்சனா மாடர்ன் உடையில் வந்திருந்தாள். அதனால் அவளை அளவிட்டவன் மஞ்சரியை பார்த்து சிரித்தான். நைனிகாவை பார்த்து மஞ்சரியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.     "என்னடா மாதர் சங்கத்துக்கு போய் நாலு நல்ல மனுஷங்களை கூட்டிட்டு வந்து முன்ன நிற்கறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். பிகாஸ் மாதர் சங்கத்து ஆட்களோட வந்தேன்னு தான் லேசா பயந்துட்டேன்.    கடைசில பார்த்தா போயும் போயும் இவங்களோட..." என்று ஏளனமாய் பேசினான்.        "இந்த பொண்ணு ஓகே... இவங்க இரண்டு பேரை எதுக்கு கூட்டிட்டு வந்த? இவங்களுக்கு என்ன தகுதியிருக்கு என்ன பத்தி பேச." என்று திரிஷ்யாவிடம் கேள்வி துளைத்தான்.          திரிஷ்யா வேதாந்த் அள்ளி வீசுப்போகும் நெருப்புகளை அறியாமல், "ஏன் இவங்களுக்கு தகுதி இல்லைன் சொல்லற" என்று கோபமாய் நின்றாள். தான் நியாயம் கேட்க அழைத்து வந்தவர்களையும் இகழ்கின்றானே என்ற கோபம்.     "ஓ... நீ நாலு சுவத்துக்குள்ள இருக்கற கட்டுப்பெட்டி இவங்க யாருனு தெரியாது தானே. இத

பஞ்ச தந்திரம்-9

பஞ்ச தந்திரம்-9       "தருண் இங்க இல்லை... அவன் ஈவினிங் தான் சென்னை வர்றான். இப்ப போன்ல தான் பேச முடியும். அதுவுமில்லாம என்னால அவனோட வாழ முடியாது. இந்த சேர்த்து வைக்கிற தாட்ஸ் இருந்தா தயவு செய்து மறந்திடுங்க. அதுக்கு நான் செத்துடலாம்.    எனக்கு என் வீடியோ தான் பிரச்சனை" என்று நைனிகா கூறவும் மஞ்சரியோ, "இது போன்ல பேச வேண்டிய விஷயமில்லை. நேர்ல பார்த்து முடிவு பண்ணலாம்." என்று  கூறவும் மற்றவர்களும் ஆமோதித்தனர்.     "அப்படின்னா திரிஷ்யா லைப்பை பார்ப்போம்." என்று கூறினாள் ரஞ்சனா.      திரிஷ்யா விழியை நிமிர்த்தி இந்த ரணகளத்திலா? என்று குழம்பினாள்.      "எப்படியும் ஈவினிங் வரை இங்க இருக்க முடியாது. மாட்டிப்போம். அதோட பசிக்கும். எங்க வார்டன் லைட்டா பத்து பதினொன்றுக்கு கண் அசரும். அந்த நேரம் ஓடிடலாம். வெளியே செக்கியூரிட்டி கேட்டா ஹாஸ்டல்ல இருக்கறவங்களை பார்க்க வந்ததா சொல்ஒஇ எஸ்ஸாகிடலாம்." என்று நைனிகா கூறவும் அனைவரும் இந்த திட்டத்தை ஏற்று வெளியே செல்ல தயாராகினார்கள்.        தனுஜாவும் திரிஷ்யாவும் சேர்ந்து போகட்டும். செக்கியூரிட்டி கேட்டா உங்க தங்கச்சி பார்