Posts

Showing posts with the label பஞ்ச தந்திரம்

நீ என் முதல் காதல் -4

 அத்தியாயம்-4     ஸ்ரீவினிதா முதலில் மகனிடம் கூட உரைக்காமல் ஷண்மதியிடம் தாரிகா-பைரவ் பேசி சென்றதை கூறவும் ஷண்மதி உடனே சம்மதிக்கவில்லை.     அங்கும் இங்கும் நடக்கவும் லலிதாவோ "என்னடி இந்தளவு யோசிக்கற? சட்டுபுட்டுனு ஆகவேண்டியதை பாருங்க அத்தைனு அக்காவிடம் சொல்வனு பார்த்தா மௌவுனமா நடைப்போடற" என்று ஆதங்கமாய் கேட்டார்.   ஸ்ரீவினிதா மருமகளிடம் தயங்கலாம். சிறுவயதிலிருந்து ஷண்மதியை வளர்த்த லலிதா ஏன் தயக்கம் கொள்ள போகின்றார்?         அதனால் இலகுவாய் கேட்டு நின்றதும் "யோசிக்கணும் அத்தை. ம்ருத்யுவுக்கு பிடிக்குதானு கேட்கணும். ஏன்னா நான் தான் கட்டாயப்படுத்தி யுகனை மணந்தேன். என் பொண்ணுக்கு வர்ற மாப்பிள்ளையையும் கட்டாயப்படுத்த கூடாது பாருங்க. நமக்கு பிடிக்குதுனு ம்ருத்யுவுக்கு பிடிக்காம ஸ்ரீநிதியை அவன் தலையில கட்டி வைக்க முடியாதுயில்லையா?    ம்ருத்யு படிப்பு முடிஞ்சி வரட்டும் பேசலாம். எனக்கு ம்ருத்யு விருப்பம் முக்கியம்" என்றவள் யுகேந்திரனை காணவும் யுகேந்திரனோ கழுத்தை இறுக்கிய டையை தளரவிட்டு வந்தான்.  "அதுக்கு அவசியமேயிருக்காது. பாவனா கன்பார்ம்மா சொல்லறா ம்ருத்யு ஸ்ரீநிதி லவ்

பஞ்ச தந்திரம்-17

Image
 பஞ்ச தந்திரம்-17      நைனிகாவுக்கு இரண்டாம் வருடம் துவங்கியது.      முதல் வருடம் பயின்ற போது மூன்றாம் வருட மாணவர்களும் இரண்டாம் வருட மாணவர்களும் அதிகபட்சமாக கேலி கிண்டல் செய்து ஓய்ந்திருக்க, தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றவளை யாரும் அதிகமாக சீண்டுவதில்லை.       ஏற்கனவே காதலனிடம் தான் கற்பை கொடுத்ததால் காதலித்து ஏமாந்தவளென்று சற்று நிலவரம் மாறியிருந்தது.    என்ன பெண் தோழிகள் சுத்தமாக இல்லை. உண்மையில் தோழமை என்று இல்லாமல் தனித்து இருந்தாள்.       நேரத்திற்கு கல்லூரி வருவதும், வகுப்பில் நுழைவதும், பாடத்தை கவனிப்பதும் என்று இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்தாள்.          திரிஷ்யாவுமே விவாகரத்து ஆனவளென்ற அடைமொழியை சுமந்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயென்ற பதவியும் பெற்றாள்.      நைனிகா போல தோழமை இல்லாமல் இல்லை. சேல்ஸ் கேர்ள் என்பதால் பலரிடமும் பேசி பழகிட வேண்டிய கட்டாயம். திரிஷ்யாவும் பழக அஞ்சவில்லை. யாராக இருந்தாலும் எடைப்போட்டு பழகினாள்.      எல்லோரிடமும் கூடிய சீக்கிரத்தில் திரிஷ்யா நல்ல அறிமுகமானாள்.      கடையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தனுஜாவை கூட அழைத்து வந்தாள்

பஞ்ச தந்திரம்-16

பஞ்ச தந்திரம்-16     ஆறு மாத காலங்கள் கடந்தது.              திரிஷ்யா பள்ளி வாளாகத்தில் அவளது குழந்தைக்காக காத்திருந்தாள்.     கோர்ட்டில் உதயிடம் அன்னையிடம் இருக்க போகின்றாயா? தந்தையிடம் இருக்க போகின்றாயா? என்று கேட்டதற்கு மழலை குரலில் "எங்கப்பா கூட" என்று கூறினான்.    அவ்விடத்திலேயே திரிஷ்யா உடைந்து போனவளாய் சுருண்டாள்.      கோர்ட்டில் தீர்ப்பு கூறும் போது மயக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெளியே வரும் போது தந்தையின் கைவளைவில் இருந்தான்.          கடைசியாக அருகே சென்று பேச முயன்றவளிடம், "ஐ ஹேட் மம்மி. நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி தந்தையை கண்டான் பாலகன்.       தந்தை கூறியதை அப்படியே ஒப்பித்தாயிற்றா என்று சரிபார்த்து கொண்டார்கள்.            'அம்மா' என்ற அருகதை அற்றவளாக மாற்றிவிட்டார்களே என்று பரிதவிக்க, "அம்மா வாங்க போகலாம். உங்களோட சுதந்திர நாளை கொண்டாடலாம்" என்ற தனுஜா குரலால் உயிர்பெற்றாள்.      "வர்றேன் டா குட்டி" என்று மகிழ்ச்சி பொங்க கூறி "என்ன பார்க்கற பெத்த குழந்தையை நல்லவனா வளர்க்கறது பெரிய விஷயம். அதை விட பெறாத குழந்தையை பெத்த குழந்த

பஞ்ச தந்திரம்-15

பஞ்ச தந்திரம்-15     மஞ்சரியோ அந்த பெரிய வீட்டில் ஹாலில் அமர்ந்து, "ஏன் பேசக்கூடாது. நீங்க இல்லைனா நான் நேத்தே கடல்ல விழுந்து செத்து பிணமா மிதந்திருப்பேன் தானே?     உண்மையில சாகப்போற எனக்கு இது மறுஜென்மம்.      முன்ன அன்பான மனைவியா, அப்பாவியான அம்மாவா இருந்துட்டேன்.    இப்ப இனி உங்களோட வாழ்ந்து நல்ல மனிஷியா இருக்க போறேன். இதுவரை நான் நல்லதுனோ உதவினோ செய்ததில்லை. பிறந்த நாள், கல்யாண நாள் என்றால் ஆசிரமத்துக்கு பணம் தந்திருக்கோம். சாப்பாடு போட்டிருக்கோம். ஆனா அதெல்லாம் காசிருக்கறவன் யாரும் செய்வாங்க. இனி நான் வாழறது தான் நான் எப்படிப்பட்டவள்னு காட்டும்.     சொந்த பேரன் தப்பு பண்ணியிருந்தும், தப்பை தப்புனு சொன்னவளா இருந்துக்கறேன். இரத்த பந்தம், பாசம்னு முடங்கலை. சொத்து பத்துனு பார்க்கறவங்களை உதாசினம்படுத்தி, என் பேரனால பாதிக்கப்பட்டவளை நான் சப்போர்ட் பண்ணி வாழ்வேன்." என்று உரைக்க சட்டென நைனிகா பாட்டியை இறுக அணைத்தாள்.     "பாட்டிம்மா... நிஜம் தானே. எனக்கு அன்பு செலுத்தி, கூடவே இருப்பிங்களா? நான் தப்பு செய்தா அதட்டணும். அதே நேரம் என் நேரத்தை பகிர்ந்துக்கணும்" என்று கன்னம

பஞ்ச தந்திரம்-14

பஞ்ச தந்திரம்-14     திரிஷ்யா "கன்சீவா இருக்கியா?" என்று பதறினாள்.    "நல்ல வேளை அந்த கெட்டது எதுவும் நிகழலை. அதுவரை கடவுள் இருக்கான்." என்று ரஞ்சனா கண்ணை துடைத்தாள்.     "செக்கப்ல என்ன வந்துச்சு." என்று மஞ்சரி கேட்டதும், "எயிட்*ஸ்... ஆங். நான் நாட்களை எண்ணிட்டு இருக்கேன். இது செகண்ட் ஸ்டேஜ்.   பயப்பட வேண்டாம். இது தொடுவதால பரவாது. பழகறதால பரவாது.    ஆனாலும் நான் இனியும் தனுஜாவோட வாழ்க்கையில அதிக நாள் இருக்க முடியாது. தள்ளிப்போகணும். நான் இல்லாம அவ வாழணும்.     நானும் தனுஜாவும் இருந்தப்பவே என் லைப் சூன்யமா போச்சு. நானும் இல்லாம என் குழந்தை தனியா இந்த சமூகத்துல எப்படி இருக்கப் போறாளோனு பயம் தினம் தினம் சாகடிக்குது.     இந்த இரண்டு நாளா நல்ல ஆசிரமத்தை தேடிட்டு இருந்தேன். எதச்சையமா உங்களோட ஆக்டிவிட்டிஸ் சரியில்லைனு மனசுக்கு தோன்றுச்சு.     அதனால தான் தள்ளியிருந்து கவனிச்சேன்.    தனுஜாவிடம் தெரியாதவங்க மாதிரி ஒரு விளையாட்டு விளையாடுவோம்னு பேசி அவளை தனியா உட்கார வச்சேன்.     என்ன தான் தனியா உட்கார்ந்து நடிச்சாலும் அவளுக்கு என் முகம் பார்த்து பார்

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

பஞ்ச தந்திரம்-10

பஞ்ச தந்திரம்-10      வேதாந்த் நைனிகாவை பார்த்து விட்டு, திரிஷ்யா கூட வந்த மற்றவர்களை பார்வையால் அலசினான்.           ரஞ்சனா மாடர்ன் உடையில் வந்திருந்தாள். அதனால் அவளை அளவிட்டவன் மஞ்சரியை பார்த்து சிரித்தான். நைனிகாவை பார்த்து மஞ்சரியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.     "என்னடா மாதர் சங்கத்துக்கு போய் நாலு நல்ல மனுஷங்களை கூட்டிட்டு வந்து முன்ன நிற்கறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். பிகாஸ் மாதர் சங்கத்து ஆட்களோட வந்தேன்னு தான் லேசா பயந்துட்டேன்.    கடைசில பார்த்தா போயும் போயும் இவங்களோட..." என்று ஏளனமாய் பேசினான்.        "இந்த பொண்ணு ஓகே... இவங்க இரண்டு பேரை எதுக்கு கூட்டிட்டு வந்த? இவங்களுக்கு என்ன தகுதியிருக்கு என்ன பத்தி பேச." என்று திரிஷ்யாவிடம் கேள்வி துளைத்தான்.          திரிஷ்யா வேதாந்த் அள்ளி வீசுப்போகும் நெருப்புகளை அறியாமல், "ஏன் இவங்களுக்கு தகுதி இல்லைன் சொல்லற" என்று கோபமாய் நின்றாள். தான் நியாயம் கேட்க அழைத்து வந்தவர்களையும் இகழ்கின்றானே என்ற கோபம்.     "ஓ... நீ நாலு சுவத்துக்குள்ள இருக்கற கட்டுப்பெட்டி இவங்க யாருனு தெரியாது தானே. இத

பஞ்ச தந்திரம்-9

பஞ்ச தந்திரம்-9       "தருண் இங்க இல்லை... அவன் ஈவினிங் தான் சென்னை வர்றான். இப்ப போன்ல தான் பேச முடியும். அதுவுமில்லாம என்னால அவனோட வாழ முடியாது. இந்த சேர்த்து வைக்கிற தாட்ஸ் இருந்தா தயவு செய்து மறந்திடுங்க. அதுக்கு நான் செத்துடலாம்.    எனக்கு என் வீடியோ தான் பிரச்சனை" என்று நைனிகா கூறவும் மஞ்சரியோ, "இது போன்ல பேச வேண்டிய விஷயமில்லை. நேர்ல பார்த்து முடிவு பண்ணலாம்." என்று  கூறவும் மற்றவர்களும் ஆமோதித்தனர்.     "அப்படின்னா திரிஷ்யா லைப்பை பார்ப்போம்." என்று கூறினாள் ரஞ்சனா.      திரிஷ்யா விழியை நிமிர்த்தி இந்த ரணகளத்திலா? என்று குழம்பினாள்.      "எப்படியும் ஈவினிங் வரை இங்க இருக்க முடியாது. மாட்டிப்போம். அதோட பசிக்கும். எங்க வார்டன் லைட்டா பத்து பதினொன்றுக்கு கண் அசரும். அந்த நேரம் ஓடிடலாம். வெளியே செக்கியூரிட்டி கேட்டா ஹாஸ்டல்ல இருக்கறவங்களை பார்க்க வந்ததா சொல்ஒஇ எஸ்ஸாகிடலாம்." என்று நைனிகா கூறவும் அனைவரும் இந்த திட்டத்தை ஏற்று வெளியே செல்ல தயாராகினார்கள்.        தனுஜாவும் திரிஷ்யாவும் சேர்ந்து போகட்டும். செக்கியூரிட்டி கேட்டா உங்க தங்கச்சி பார்

பஞ்ச தந்திரம்-8

பஞ்ச தந்திரம்-8    சற்று நேரம் பிடித்தது. திரிஷ்யா தனுஜா அணைத்து அழ ஆரம்பித்து மஞ்சரியும் ரஞ்சனாவும் கூட கலங்கி போனார்கள்.    நைனிகாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவளாக இருந்தாள்.  மீண்டும் போன் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஏதோ வீடியோ காட்சி வரவும் "எக்ஸ்கியூஸ் மீ" என்று தனியாக பாத்ரூம் சென்று காணொளியை கண்டாள்.           இதயவோட்டம் தாருமாறாக இயங்கியது. அரைகுறை ஆடையோடு நைனிகாவும் தருணும் இருக்கும் நெருக்க காட்சிகள் ஓடியது. சற்று செல்ல செல்ல, அந்தரங்க மீறல்கள் நடந்தேறியது. "நோ" என்று கத்தி அழுதாள்.       வெளியே நால்வரும் இருக்க, நைனிகா கத்தி அழவும், ரஞ்சனா தான் முதலில் கதவை தட்டினாள்.      "நைனிகா.. நைனிகா.. கதவை திற. என்னாச்சு." என்று தட்டினாள்.      திரிஷ்யா தனுஜாவை அணைத்து ஏறிட, ரஞ்சனா மஞ்சரி இருவரும் கதவை தட்டியபடி இருந்தார்கள்.     "கதவை திற நைனிகா" என்று ரஞ்சனா கத்தவும், "எல்லாரும் போங்க என்னை விட்டு. ஐ நீட் அலோன். நான் சாகணும்" என்று கத்தினாள்.     "அறிவுக்கெட்டவளே... இப்படி கத்தினா உங்க வார்டன் அம்மா வரப்போறாங்க கதவை திறடி.&

பஞ்ச தந்திரம்-7

பஞ்ச தந்திரம்-7         அப்பாடி நான் தப்பிச்சேன் என்ற உணர்வில் ரஞ்சனா இருக்க, நைனிகாவோ, "பச் இப்ப பிரஷ் பண்ணி குளிச்சி காபி குடிக்க போகணும். சாப்பாடும் அங்க தான். நான் போய் சாப்பிடுவேன்... நீங்க  எப்படி?" என்று நைனிகா சிரித்தாள்.       "நேத்தே செத்திருந்தா ஆவியா அலைய வேண்டியவ. இன்னிக்கு திங்க அலையுற.     உன்னையெல்லாம் சாக போடினு விட்டு தொலைச்சிருக்கணும்." என்று ரஞ்சனா பேசவும் நைனிகாவோ பேஸ்ட் பிரஷ் என்று பல் தேய்க்க ஆரம்பித்தாள்.     மடமடவென குளித்து முடித்து தலைவாறி ஹேண்ட் பேக்கை எடுத்து, யாரும் கத்தி பேசாதிங்க. நான் வெளியே லாக் பண்ணிட்டு ப்யூ மினிட்ஸ்ல வந்துடுவேன்." என்று நைனிகா அவள் பாட்டிற்கு வெளியேறினாள்.     கடலில் தொடைவரை உவர்ப்பு நீர் மூழ்கும் ஆழம் வரை சென்று திரும்பியதால் லேசாய் கசகசப்பு உணரவும் "ஒரு மாதிரி பிசுபிசுனு இருக்கு. நானும் டூ செகண்ட்ல குளிச்சிட்டு வந்துடறேன்." என்று ரஞ்சனா குளிக்க தயாராக கூறினாள்.      "குளிச்சிட்டு எதை போட்டுக்கறதாம்" என்று திரிஷ்யா கேட்கவும் "அதெல்லாம் அந்த பிசாசோட டிரஸ் ஏதாவது பத்தும். இல்லைனா கூட

பஞ்ச தந்திரம்-6

பஞ்ச தந்திரம்-6          "நீங்க சொல்லுங்க அம்மா... நான் என்ன செய்யறது. அவரோட திரும்பி வாழணுமா? எனக்கு என் மகன் வேண்டும். அவன் இல்லைனா நான் செத்துடுவேன்" என்று முகம் பொத்தி அழுதாள்.       மஞ்சரியோ "முதல்ல தண்ணி குடி." என்றார்.     ரஞ்சனாவோ "பைத்தியமா நீ... சாகணும்னு முடிவெடுக்கற... உன் குழந்தையை யோசித்து பார்த்தியா. எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு நிகரா இருக்க முடியுமா. நீ செத்துட்டா உன் பையனுக்கு மொத்தமா அம்மா இல்லாத நிலை ஏற்படும். அதே நீ தனியா வாழ்ந்து இருந்தாலாவது அடிக்கடி அவனை பார்த்து அவன் நிலையை கவனிக்கலாம். யார் கண்டா... ப்யூச்சர்ல அவன் உன்னை தேடிவரலாம். அப்படியில்லைனா கூட போர்டிங் ஸ்கூல்ல ஒரு வாரம் இருந்துட்டு அம்மா வேண்டும்னு அழது உன்னை கேட்கலாம். உன் கணவர் உன்னை தேடிவரலாம். திங்க் பாஸிடிவ்." என்றாள்.       திரிஷ்யா வேதனை சுமந்தவளாக, "அவனுக்கு ஒரு போன் வீடியோ கேம்ஸ் டாய்ஸ் இதெல்லாம் கிடைச்சாளே என்னை மறந்துடுவான் ரஞ்சனா. அந்தளவு இந்த இடைப்பட்ட நாள்ல என்னை தள்ளி வச்சே பழகிட்டாங்க." என்றாள்.     எது சொன்னாலும் இப்படி பேசுகின்றாளே என்று ம