பஞ்ச தந்திரம்-8

பஞ்ச தந்திரம்-8

   சற்று நேரம் பிடித்தது. திரிஷ்யா தனுஜா அணைத்து அழ ஆரம்பித்து மஞ்சரியும் ரஞ்சனாவும் கூட கலங்கி போனார்கள். 

  நைனிகாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவளாக இருந்தாள்.  மீண்டும் போன் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஏதோ வீடியோ காட்சி வரவும் "எக்ஸ்கியூஸ் மீ" என்று தனியாக பாத்ரூம் சென்று காணொளியை கண்டாள். 
   
     இதயவோட்டம் தாருமாறாக இயங்கியது. அரைகுறை ஆடையோடு நைனிகாவும் தருணும் இருக்கும் நெருக்க காட்சிகள் ஓடியது. சற்று செல்ல செல்ல, அந்தரங்க மீறல்கள் நடந்தேறியது. "நோ" என்று கத்தி அழுதாள். 

     வெளியே நால்வரும் இருக்க, நைனிகா கத்தி அழவும், ரஞ்சனா தான் முதலில் கதவை தட்டினாள். 

    "நைனிகா.. நைனிகா.. கதவை திற. என்னாச்சு." என்று தட்டினாள். 

    திரிஷ்யா தனுஜாவை அணைத்து ஏறிட, ரஞ்சனா மஞ்சரி இருவரும் கதவை தட்டியபடி இருந்தார்கள். 

   "கதவை திற நைனிகா" என்று ரஞ்சனா கத்தவும், "எல்லாரும் போங்க என்னை விட்டு. ஐ நீட் அலோன். நான் சாகணும்" என்று கத்தினாள்.

    "அறிவுக்கெட்டவளே... இப்படி கத்தினா உங்க வார்டன் அம்மா வரப்போறாங்க கதவை திறடி." என்று கடிந்தாள் ரஞ்சனா. 

   "செத்தப்பிறகு எவ வந்தா எனக்கென்ன" என்று மீண்டும் கத்தினாள் நைனிகா. 
    "ஓகே.. செத்து தொலை... பட் நாங்க நாலு பேர் உன்னோட ஹாஸ்டல்ல இருக்கோம். உன்னால நாங்க மாட்டணுமா. மரியாதையா நாங்க போனதும் செத்துப்போ." என்று கூறினாள் ரஞ்சனா. 

   நைனிகாவோ கோபம் உருவெடுக்க, கதவை திறந்து, "வாங்க... என்ன ஆனாலும் ஹாஸ்டல்ல இருந்து வெளியே அனுப்பிட்டு நான் பாட்டுக்கு சாகறேன்." என்று கதவை திறந்தாள். 

   ரஞ்சனா கதவை திறந்த அடுத்த நொடி, பளாரென நைனிகா கன்னத்தில் அடித்தாள். 

    வெடுக்கென போனை பிடுங்கி வேகமாய் கடைசியாக அவள் பார்த்தது என்ன என்று ஆராய்ந்தாள். 

   "என் போனை கொடு." என்று அரற்றி எழவும் திரிஷ்யா தனுஜாவை விடுத்து நைனிகாவை பிடித்து "முதல்ல உட்காரு." என்று பிடித்தாள். மஞ்சரியும் உட்காருடா. என்னாச்சு?" என்று ஆசுவசப்படுத்தினார். 

  ரஞ்சனா 'தருண்' என்றவன் அனுப்பிய காணொளியை கண்டு நைனிகாவை ஏறிட்டாள். 

    பாதி பார்க்கும் போதே அது எப்படி பட்டதென புரிந்துவிட்டது. 

  திரிஷ்யா எட்டி பார்க்க, "நீ..நீயா?" என்று கேட்டாள். நைனிகா முகம் பொத்தி அழுதாள். மஞ்சரியோ என்னவென்று போனை வாங்கி பார்க்கும் நேரம் நைனிகா மற்றும் தருண் இருக்கும் காட்சிகள் காட்சிபடமாய் ஓடியது. 
   
     மஞ்சரிக்கு இதயத்தை பிடித்து நின்றார். 

    நைனிகா குலுங்கி குலுங்கி அழுது, முடித்தாள். 

      இரண்டு மூன்று முறை தன்னை கட்டுப்படுத்தி "உன் பாய்பிரெண்டா?" என்று கேட்டாள் ரஞ்சனா. 

    "நோ... மை லவ்வர். என்னோட ஒன் அண்ட் ஒன்லி லவ்வர். பட் நான் அவனுக்கு நூற்றுல ஒன்னு." என்று கூறவும் மஞ்சரி மெதுவாய் நைனிகா முதுகை தீண்டினார். 

    "சேர்ந்து செய்த தப்பா டா.? என்ன பிரச்சனைனு சொல்லுடா." என்று கேட்டார். 
   
   கண்ணை துடைத்து தனுஜாவை பார்த்தாள். ரஞ்சனாவோ தனது போனை எடுத்து "தனுஜா ரைம்ஸ் பிடிக்கும்ல.. போன்ல ரைம்ஸ் பார்த்துட்டு இரு" என்று துணி காயப்போடும் பால்கனி பக்கம் அனுப்பினாள். 

  தனுஜா அவ்விடம் நகரவும், இப்ப சொல்லு." என்று ரஞ்சனா கேட்டாள். அவள் முகத்தில் தீவிரம் இருந்ததது. இதுவரை சண்டையிட்ட பெண்ணாக இல்லாமல் ஒரு அக்காவாக குடும்பத்தின் உறுப்பினராக முடிவெடுத்தாள் எனலாம். 

    நைனிகாவோ ரஞ்சனாவை புதிராக பார்த்து பேச ஆரம்பித்தாள். 

    "நானும் நல்ல வசதியான வீட்டு பொண்ணு. இங்க மஞ்சரி பாட்டி எப்படி அன்பா அரவணைப்பா இருந்து குழந்தையை வளர்த்ததா சொன்னாங்க. பட் என் அம்மா அப்பா...  அப்படியில்லை. டிவோர்ஸ் பண்ணிட்டு ஆளுக்கு ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிட்டு ஹாப்பியா இருக்காங்க. நான் படிச்சதே ரொம்ப டிபரெண்ட். ஒரு வருஷம் அப்பாவோட இருக்கறப்ப டெல்லில படிப்பேன். அம்மாவோட இருக்கறப்ப சென்னையில படிச்சேன். இப்படி தான் மாறி மாறி என் ஸ்கூல் டேஸ் இருந்தது. அம்மாவோட இருந்துட்டு அப்பாவை தேடி போகறப்ப உனக்கு  தான் அம்மாவை பிடிக்கும் என்று அப்பா முகத்தை காட்டுவார். பணம் நகை உடை தனி அறை, கேட்கறது வாங்கிக்கலாம். பட் அன்பை.. அம்மாவும் இப்படி தான். உங்கப்பா என்னை பத்தி என்ன சொன்னார். நீ என்னிடம் பார்க்கறதே தெரியுது. எனிவே உன்னை வளர்ப்பது என் கடமை என்று போனா போகுதுனு வளர்ப்பாங்க. காலேஜ் மட்டும் தான் அப்பாவும் வேண்டாம் அம்மாவும் வேண்டாம்னு இந்த ஹுமன்ஸ் ஹாஸ்டல்ல வந்துட்டேன். 

    பிரெண்ட்ஸ் அன்பானவங்க.. பட் உயிரை தரும் நட்பானு கேட்டா... மை பேட் லக் அப்படி யாரையும் நான் சேர்த்து வைக்கலை.

    தருண்... தருணை என்னை லவ் பண்ணினான். சீரியஸ்லி.. ரொம்ப நல்லா கேரிங்கா பார்த்துக்கறவன். பட்... அவனும்.. அவனுமே இப்படி பண்ணுவான்னு சத்தியமா நினைக்கலை. 

   லாஸ்ட் டைம் டிரிங் பண்ணிட்டு நீ வேண்டும்னு கேட்டான். லவ் பண்ணறவன் தானேனு கம்பெனி கொடுத்தேன்." என்றதும் ரஞ்சனா பத்ரகாளியாக முறைக்க, "தப்பு தான் இடம் கொடுத்திருக்க கூடாது. ஆனா அன்பா பேசவும்... என்னோட தருண்னு தப்பு பண்ணிட்டேன்.

   இப்ப அதையே காட்டி என்னை அடைய பயன்படுத்தறான். லாஸ்ட்டைம் கன்சீவ் ஆன மாதிரி இருந்தது. அவனிடம் சொன்னேன். பட் அவன் பெரிசா எடுத்துக்கலை. அன்னிக்கு முழுக்க சுத்திட்டு வீட்டுக்கு போனதும், இன்னிக்கு பீரியட்ஸ் வந்துடும். வரலைனா யோசிப்போம் பேபினு சொன்னான். 

   என்னவோ அவன் சொன்ன அடுத்த நாளே பீரியட்ஸ் வந்துடுச்சு. சோ பெரிசா எடுத்துக்கலை. பட் இப்ப திரும்ப திரும்ப என்னை அடைய முயற்சி பண்ணறான். ஆல்ரெடி பேபி மாதிரி இருந்துடுச்சேனு பயந்தேன் டா. வேண்டாம்னு சொல்லவும் ஏய் அதான் டேபிளடை ஜூஸ்ல போட்டேன். சரியாகிடுச்சே. திரும்பவும் பார்ம் ஆனா டேப்ளட் நான் வாங்கி தர்றேன்னு சொன்னான். 

  எனக்கே தெரியாம என்னை டேப்ளட் சாப்பிட வச்சிருக்கான்னு தெரிந்தது. அதுக்கு பிறகு அடிக்கடி சண்டை. ரீசெண்டா என்னை அவாய்ட் பண்ணினான். நானும் ஓகேனு வீம்பா இருந்தேன். பட் உன்னோட ஷேரிங் பண்ணணும். என்னோட வானு கூப்பிடறான். மறுத்ததுக்கு.. நான் உன்னோட இருந்ததை வீடியோவா எடுத்து வச்சிருக்கேன். நீ வரலை அதை சோஷியல் மீடியால விட்டுடுவேன்னு மிரட்டுறான். 
   
   நேத்து காதலும் பொய் காதலனும் பொய்யானு வேதனைபட்டேன். அதான் யாரும் வேண்டாம்னு சாக முடிவெடுத்தேன். இப்ப தருண் எனக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கான். என்னை ஈவினிங் எப்பவும் சந்திக்கற காபி ஷாப்ல வந்து மீட் பண்ணி பீச் ரெசார்டுக்கு கூப்பிட்டு இருக்கான். போகலைனா சோஷியல் மீடியால விடுவேன்னு டைம் கொடுக்கறான்." என்று அழுதாள். 

    ஆளாளுக்கு ஒரு மூலையில் இடிந்து போய் அமர்ந்தனர். 

   ரஞ்சனாவோ, "அம்மா... முதல்ல இவங்க இரண்டு பேரோட வாழ்க்கையை பார்த்து ஒரு முடிவெடுப்போம். அப்பறம் என் தரப்பு கதையை உங்களோட ஷேர் பண்ணறேன். முதல்ல திரிஷ்யா பிரச்சனையை தீர்ப்போமா? இல்லை நைனிகா பிரச்சனையை பேஸ் பண்ணலாமா?" என்று கேட்டாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

Comments

  1. படிக்கவே கஷ்டமாக இருந்தது வீணா

    ReplyDelete
  2. சூப்பர்.... காதல்ன்னு சொல்றாங்க... அப்புறம் ஏன் கழுத்துல தாலி ஏறரதுக்கு முன்னாடியே உடம்பை வித்துடறாங்கன்னு தெரியலை....
    அரேன்ஜ்ட் மேரேஜ்ல கூட முதல்ல தாலி கட்டின பிறகுத்தானே
    தாம்பத்யமே நடக்குது..
    ஆனா லவ் மேரேஜ்ல
    மட்டும் ஏன் உல்ட்டாவ நடக்க விடறாங்க.... ஆக்கப் பொறுத்தவங்களுக்கு ஆறப் பொறுக்கலையா...???

    ReplyDelete
  3. எதிலும் பொறுமை இல்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...