பஞ்சதந்திரம்-3

பஞ்சதந்திரம்-3

முதலில் யாரை பற்றி அறிவதென மீண்டும் தலையாய பிரச்சனை எழும்பியது.

நைனிகா தான் கடைசியாக கூறுவதாக தோளைக் குலுக்கினாள்.

ரஞ்சனாவோ "அப்போ நான் இவளுக்கு முன்ன சொல்லிக்கறேன்." என்று அவளை போலவே தோளைக் குலுக்கவும் நைனிகா எரிச்சலடைந்தாள்.

"என் பேரண்ட்ஸே பரவாயில்லை." என்று சலித்தபடி நைனிகா மெத்தையில் படுத்து காலாட்டி, "யார் சொல்லறிங்களோ சொல்லுங்க. விருப்பமில்லையா விடுங்க. ஐ டோண்ட் கேர். பட் தூங்கிட்டு காலையில எழுந்துப்போம். அதான் இறப்பை தள்ளி போட வச்சிட்டிங்களே." என்று ஆதங்கப்பட்டாள்.

"நீ வேண்டுமின்னா உன் ரூம்ல இங்கயே தூக்கு போட்டுக்கோ" என்று ரஞ்சனா ஐடியா தர, "என்ன நீ என்னை நோண்டிட்டே இருக்க?" என்று எகிற, "கொஞ்சம் நிறுத்துங்க" என்றார் மஞ்சரி பாட்டி.

வயதில் பெரியவர் என்பதால் சற்று அமைதியாக இருந்தார்கள்.

"மூச்சு வாங்குதுடா... என்னைலையும் இப்ப பகிர முடியலை. குழந்தையும் தூங்கறா. திரிஷ்யா உன்னை பத்தி சொல்லலாமே. குழந்தை இருக்குனு சொன்ன. குழந்தை தேடாது. அப்படியென்னமா ஆச்சு." என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா அழுதாள்.

சிறிது நேரம் அழவிட்டு, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, அவளாகவே சமாதானம் செய்து கொண்டு, "என் ஹஸ்பெண்ட் பெயர் வேதாந்த். எனக்கு ஒரு பையன் உதய்.

எனக்கு அப்பா அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருக்காங்க.
அக்காவுக்கு கல்யாணமாகி பத்து வயசுல பொண்ணு இருக்கா.

மூனும் பொம்பள பிள்ளைங்கனு எங்கப்பா என்னையும் படிச்சதும் 21 வயசுல கட்டி கொடுத்துட்டார்.

தனுஜா வயசு தான் உதயுக்கும். என் கணவர் வீட்ல நல்ல வசதி. உதயுக்கு கூட தனி ரூம் தான். அதனால தான் என்னை தேடலையோ என்னவோ" என்று அழவும், ரஞ்சனா தோளில் கை வைத்தாள். அதில் ஆறுதலடைந்த திரிஷ்யா "எனக்கு பிரச்சனையே என் கணவர் மட்டும் தான்" என்றவள் தன் வாழ்க்கையை கூறத்துவங்கினாள்.

வேதாந்த் என்னை திருமணம் செய்தப்ப ரொம்பவே ஆசையா எதிர்பார்ப்போட மணந்தார். நானும் பேராசையோட இவர் தான் இனி எல்லாம் என்ற பெரிய நம்பிக்கையில மணந்தேன்.

என்னை தாங்கு தாங்குனு தாங்கினார். கேட்டதை வாங்கி கொடுத்தார். ஏன் நான் பார்ப்பதை கூட வேண்டுமானு வாங்கி முன்ன வைச்சார்.

எல்லாம் உதய் பிறக்கற வரை. அதுக்கு பிறகு ரொம்பவே மாறிட்டார். சரியா முகம் கொடுத்து பேசறதில்லை. நான் ரூமுக்கு வந்தாலே ஏதோ வேற்று மனுஷி உள்ள வர்றது மாதிரி கதவு தட்டிட்டு வரமாட்டியானு திட்டுவார்.

நானும் வேலையை பத்தி நமக்கென்ன தெரியும்னு திட்டு வாங்கிப்பேன்.

திரிஷ்யா -வேதாந்த் வாழ்க்கை

"அம்மா அம்மா" என்று உதய் ஒடிவர, "செல்லமே இங்க இருக்கேன் டா" என்று பால்கனியிலிருந்து குரல் கொடுக்க வேகமாய் வந்தவன் "டேடி எனக்கு டேப்(tab) வாங்கிட்டார்" என்று துள்ளி குதித்தான்.

"என்னங்க இது விலை அதிகமா. இந்த வயசுல எதுக்குங்க?" என்று திரிஷ்யா ஆரம்பிக்கும் முன் கையை நீட்டி நிறுத்துமாறு கூறினான் வேதாந்த்.

"குழந்தைக்கு என்ன வாங்கி தரணும் ஏது வாங்கி தரணும்னு எனக்கு தெரியும்." என்று எரிந்து விழுந்தான்.

"இல்லிங்க ஏன் சொல்லறேன்னா?" என்று கூறும் முன் நிறுத்தறியா என்பது போல சலித்து திரும்பினான்.

"உன்னை விட டேப்(tab) பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எது எதுக்கு உபயோகமா இருக்கும்னு. என் பையன் டெக்னாலஜி தெரிந்து வளர்றவன். உன்னை மாதிரி கிடையாது." என்றதும் மௌவுனமானாள்.

வேதாந்த் தாய் நாகேஸ்வரி மற்றும் தந்தை லோகநாதன் இருவரும் மகனின் பேச்சை சட்டை செய்யாமல் பேரனின் விளையாட்டில் மூழ்கினார்கள்.

திரிஷ்யா எப்பொழுதும் போல அவமானமாய் உணர்ந்து அறைக்குள் அடைந்தாள்.
 
     தன்னை ஏன் கணவருக்கு பிடிக்கவில்லை? எதனால் என்று ஆராய்ந்து பார்த்து திரிஷ்யா சோர்வடைந்தது தான் மிச்சம்.

     அன்று எதச்சயமாக கட்டிஐஇல் போன் பார்த்துக் கொண்டிருந்தான் வேதாந்த். மாலை சிற்றுண்டியான டீ மற்றும் குக்கீஸ் எடுத்து வந்து தட்டை முன் வைத்தாள். வேதாந்தோ தீவிரமாய் ளோனில் எதையோ பார்க்க அது பின்னால் இருக்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிந்தது.

    கவர்ச்சியான ஆடையணிந்த பெண்களை வேதாந்த் போன் மூலமாக சுவாரசியமாக திரிஷ்யா வந்தது கூட அறியாது இமைக்க மறந்து ரசித்தான்.

   தன்னவன் வேறொரு பெண்களின் புகைப்படத்தை காண்பதை கண்டாள் தர்மபத்தினி.
    அதுவும் கவர்ச்சியான உடையென்பதால் திரிஷ்யா சங்கடப்பட்டாள். இதே தன்னை போல மகன் வந்து இங்கே நின்றால் கணவர் காணும் யாவும் தான் பார்த்தது போல மகனும் கண்டிட நேருமே என்று தவித்தாள்.

இப்படியா இருப்பது என்று குரலை செருமி "என்னங்க... என்னங்க டீ" என்று கூறவும் அவசரமாய் போனை மூடிவைத்து, வச்திட்டு போகலாமே. ஏன் டிஸ்டர்ப் பண்ணற?" என்று எரிந்து விழுந்தான்.

    "இல்லிங்க அது வந்து" என்று ஆரம்பிக்கும் நேரம் "திரிஷ்யா அங்க என்ன பண்ணற? உதய் பூஸ்ட் கேட்கறான் பாரு" என்று நாகேஸ்வரி கூப்பிடவும் அவசரமாய் கிச்சனுக்கு சென்றாள்.
 
   பாத்திரம் விளக்கியவள் வேதாந்திடம் இரவு பேசிட வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

     பேசிட முடிவெடுப்பது எளிது. ஆனால் எதிரில் இருப்பவரும் எளிதாக புரிந்திடும் ஆற்றல் வகுத்தவராக இருக்க வேண்டுமே.

    வேதாந்த் அப்படிப்பட்டவன் இல்லை.

    இரவு நேரம் உதய் உறங்கவும் திரிஷ்யாவை அணைத்து மோகமழையை பொழிந்தவனிடம், மெதுவாய் மாலை தான் கண்ட காட்சியை விளக்கினாள்.

    "ஏன் கண்டவங்க போட்டோஸை பார்க்கறிங்க. திடீரென பையன் வந்து போனை பிடிங்கினா உங்க நிலை என்னாகறது" என்று இதுவரை இல்லறத்தில் இனிக்க இனிக்க செயல்புரிந்தவனின் வேகத்தில் உரிமையாய் கேட்டாள்.
  
   அவளை தன்னிடமிருந்து பிரிந்து, ஏய் நீயும் பார்த்து என்னை கேள்விக் கேட்கறியா? அசிங்கமா இருந்தா நீ பார்க்க கூடாது. என்னவோ பார்க்கறேன்னு தெரியுதுல சட்டுனு போகக்கூடாது. நீ ஏன்டி அங்கயே இருந்த. என்ன வாட்ச் பண்ணற மாதிரி நீயும் ரசித்து பார்த்தியா?" என்று கேட்டான். வேதாந்த் கேட்ட தோரணையே ஏதோ திரிஷ்யா தவறான செயலை செய்தது போல எண்ணிட செய்தான்.
  இங்கப்பாரு மாடர்ன் டிரஸ் போட்டா என்ன ஏதென பார்க்க தான் செய்வேன். நீ எட்டு மொழம் புடவை சுத்திட்டு இருக்கறது. எப்பவும் அழுக்கு நைட்டியும் போட்டுட்டு சுத்தினா உன்னை எப்படி பார்க்கறது.

    வலலத்தளத்துல இரண்டு மூன்று பொண்ணுங்க போட்டோ பார்க்கறது தான். சோ வாட்... பார்க்க தானே செய்யறேன். எவளோடவும் படுத்து எழுந்துக்கலையே.?" என்று கத்தவும் உதய் எழுந்துக்கபோகின்றானோ என்று பயந்தாள்.

    "கத்தாதிங்க உதய் சண்டை போடறோம்னு பயந்துட போறான். நான் பார்த்த மாதிரி உதய் பார்த்திட கூடாதேனு பயந்தேன்." என்று விளக்கமளித்தாள்.

   அவள் விளக்கம் எல்லாம் புல்லுக்கு போகும் நீராக விரைந்தது.

    ஏதோ விஷயத்தை கூறியதால் கணவர் இனி கவனமாய் மகன் இருக்க நடந்துக்கொள்வரென முடிவு கட்டி துயில் கொண்டாள்.

    அடுத்த நாள் காலையிலேயே திரிஷ்யா மீது சிடுசிடுவென முகத்தை காட்டினான் வேதாந்த்.
   தன் குட்டை மனைவி மீண்டும் பேசிடக் கூடாதேயென்ற காரணத்தில் அவ்வாறு நடந்தான்.

    வேலைக்கு செல்லும் நேரம் ஷூ பாலிஸ் போட்டு நீட்டினாள்.
வேதாந்த் முகம் திருப்பவும் தன் கையை நைட்டியில் துடைத்திட வேதாந்த் சென்றதும் நைட்டியை உற்று நோக்கினாள்.

   மாதுளை உறித்திடும் நேரம் பட்ட கரை போகவில்லை. சாதம் கிளரும் போது நைட்டியில் தெளித்த சாம்பார், தோசை சுடும் நேரம் பக்கவாட்டில் துடைத்த மாவு கை என்று கரித்துணியை கட்டியது போல நைட்டி காட்சியளித்தது.

    மன்னவன் முகம் காண மறுத்தது இதெல்லாம் காரணமாக இருக்குமென, வேலையெல்லாம் முடித்து மதியம் எப்ரன் வாங்க சென்றாள்.
  ஏனோ கூடுதலாக மாடர்ன் உடைகள் பக்கம் கவனம் சென்றது. எப்பொழுதும் சேலை அணிந்ததால் சுடிதார் செட் மூன்று வாங்கினாள்.

    வீட்டுக்கு வந்து ஆல்டர் செய்து நாளை போட்டு அசத்த வேண்டுமென்று திரிஷ்யா பல கனவோடு இருந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

   

   

  
    

Comments

  1. அச்சோ பாவம் திரிஷ்யா...! வேதாந்த் பார்க்கணும்ன்னு முடிவு பண்ணியாச்சு எப்படியும் பார்க்த்தான் போறான்.
    அவனுக்காக இவ தன்னைத்தானே மாத்திக்க நினைக்கிறான்... அது நல்லபடியா முடிஞ்சா சரி.
    அதுவே வேற மாதிரியாகிட்டா பிரச்சினை இன்னும் பெருசாகுமோ....???
    ஆனா இந்த ஆம்பிளைங்க மட்டும் என்ன வீட்டுல பார்மல் ஸூட், ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்லேயா சுத்தறாங்க....!! அதே இத்துப்போன லுங்கி பனியனும், அரைகுறை ஷார்ட்ஸ்ல தானே சுத்தறாங்க... ஆனா நமக்கு அவங்க மேல சலிப்போ, அலுப்போ வந்ததே இல்லையே.... அது ஏன்...? ஒருவேளை நாம உச்ச அன்பு நம்ம ஆளு எப்படி இருந்தாலும்... அப்படியே ஏத்துக்க சொல்லுதோ...!!!
    வசிக்கும் சொல்லுதோ...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா ஆமா சகி. நமக்கு அலுக்கறதுயில்லை. இது பார்க்கற கண்ணோட தப்பு. ஆண் புத்தி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு