தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

 தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-3


ஆரவ் தனது வீட்டுக்கு வந்தபின் குறுக்கும் நெடுக்கும் அந்த அக்ரிமெண்டை வெறித்து பார்த்தான்.

     எத்தனை பேரோட கனவை சந்தோஷமா கொண்டாட முடியலை. எல்லாம் அவளால்... அவளால் மட்டும் தான்.

      'சம்யுக்தா...' என்ற பெயர் இருக்கும் இடத்தை கிழித்தெறிய முடியாது தனது ஷோகேஸ் இருந்த புத்தகத்தை எல்லாம் தள்ளி விட்டான்.

     சுபாங்கினி வந்து ஆரவ் அமர்ந்து இருக்கும் தோரணையே சரியில்லை. அதுவும் இந்த அறையை உலுக்கி எடுத்தது போன்ற செய்கை பயத்தை தந்தாலும் மகனிடம் எதனால் என்று துணிந்து கேட்டிட தடுத்தது.
     
    "ஜனனியே பார்த்ததா அவங்க அம்மா போனில் சொன்னாங்க. என்னப்பா நேர்ல பேசி பிடித்ததா?" என்றதும்

     "கல்யாணம் எப்பமா? அலுவலகத்தில் வேலையை எல்லாம் அதுக்கு ஏற்றாற்போல மாற்றிப்பேன்" என்று கலைத்த புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தான்.

     "அடுத்த மாதம் மார்கழி மாதம் ஆரவ் அதனால் இந்த மாதம் இரண்டு முகூர்த்த தினம் வருது 19, 28 . அதுல இரண்டாவது முகூர்த்தம் பேசிட்டோம் ஆரவ். வர்ற 28ஆம் தேதி திருமணம். அன்று இரவு வரவேற்பு என்று பேசியாச்சு. உனக்கு சவுகரியம் தானே?" என்றதற்கு ஆரவோ,

    "ஏம்மா... 19ஆம் தேதியை குறித்து இருக்கலாம். எதுக்கு அவ்ளோ நாள் தள்ளி? உங்களுக்கும் பயமே இல்லாம என் திருமணத்தை முணிச்சிட்ட திருப்தி கிடைக்குமே." என்றான். இதில் நக்கல் ஒளிந்து இருந்ததா? அல்லது நிஜமாகவே ஆரவ் திருமணத்தை முன்னே வைத்தால் நல்லது என்று எண்ணினானா அது அவனுக்கும் சுபாங்கினிக்கே வெளிச்சம்.

       "நகை டிரஸ், கல்யாண மண்டபம் என்று பார்க்கணுமே ஆரவ். இதுல சமையலுக்கு ஆர்கெஸ்ட்ரா எல்லாம் அரெஞ்சு பண்ணணும். மேலும் உன் அப்பா வழி சொந்தம் எல்லாம் ஊர்ல இருக்காங்க. அவங்க வந்து செல்ல பஸ் அரேஜ் பண்ணணும். வைஷ்ணவி இல்லை மாப்பிள்ளை சந்துருகிட்ட தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேட்கணும்.

    ஏன் ஆரவ் உனக்கு வைஷ்ணவி திருமணத்தப்ப விசிடிங் கார்டு எல்லாம் இப்ப இல்லை தானே?"

     "பழைய காண்டெக்ட் எதுவுமே இல்லைமா. உங்களுக்கு தெரிந்தவர்களையே கேட்டுக்குங்க." என்று கேசவிற்கு போன் செய்தான்.

   ஒரே ரிங்கில் எடுக்கப்பட  "கேசவ் டீல் கைக்கு வந்துடுச்சு. ஆபிஸ்ல அபிசியலா அனொன்ஸ் பண்ணிடுங்க.

அப்பறம் எனக்கு திருமணம் பெண் பார்த்தாச்சு. வருகின்ற 28 திருமணம் அந்த நேரத்தில் எந்த கமிட்மெண்ட்ஸ் இல்லாம பார்த்துக்கோங்க. நாளைக்கு சின்னதா மதியம் புட் ஸ்பான்ஸருக்கும் தயார் பண்ணிடுங்க." என்றதும்

    "ஓகே சார்... 
ஹார்ட்டி கங்கிராட்ஸ் சார்....
சூர் சார்... என்ற பதிலே வந்ததும் சலித்து கொண்டு போனை வைத்தான். அதற்குள் சுபாங்கினி புத்தகத்தை வரிசையாக அடுக்கி முடித்தாள்.

    "புத்தகத்தை எத்தனை முறை கலைத்தாலும் அடுக்கிடலாம். ஒழுங்குபடுத்திடலாம் ஆரவ். வாழ்க்கையை அப்படி எண்ணிட முடியாது. அதனால எடுத்த முடிவுல தீர்மானமா இருப்ப என்று நம்பறேன்." என்று வெளியேற ஆரவ் தலையை தாங்கி அமர்ந்தவன் மனதின் குரலோ ஒருபக்கம் மறுத்திடு உன்னால் இயலாது என்று எடுத்துரைக்க, மற்றொரு குரலோ உன்னால் முடியாதா? ஒரு பெண்ணால் முடியும் என்றால் உன்னால் இயலாதா  என்று எடுத்துரைக்க, மனம் என்னும் ஈகோ அவனுள் துணிந்து நின்றது.

     சுபாங்கினி தன் மகள் வைஷ்ணவிக்கு போனில் அழைத்து ஜனனியிடம் மைந்தன் நல்லவிதமாக சம்மதம் அளித்து பேசினானா என்று நாசுக்காக கேட்டிட சொல்லவும் வைஷ்ணவியோ "அம்மா நாளைக்கு கேட்கறேன். இப்ப பணி எட்டு சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்கு. உன் பையன் தான் ஒரு காரியத்தில் முடிவெடுத்தா நிலையா இருப்பான் தானே?" என்று கேட்டதும்

     "நாளைக்கு சொன்னதை பக்குவமா கேட்டு சொல்லு. என் பையன் என் முடிவில் மாற மாட்டான்." என்று அணைத்து வைத்தார்.

     "இந்தம்மாவை புரிந்துக் கொள்ளவே முடியலை சந்துரு என்று வைஷ்ணவி அங்கலாயித்து சந்துருவிடம் சொல்ல அவனோ தன் நண்பன் தனக்கு திருமணமான பின் மச்சான் உறவு மட்டும் இருக்க பேச்சை குறைத்துக் கொண்டது ஒரு பக்கம் வலித்தாலும், அவனின் நிலை இந்தளவு மாற்றம் கொண்டதாக அமைந்தது அதிசயமாகவே எண்ணினான்.

      அடுத்த நாள் காலை எல்லாம் மறந்து அலுவலகம் சென்றான். மணி பதினொன்றையாக கேசவ் தலையை சொரிந்து, "சார் நம்ம கம்பெனி மீட்டிங் ஹால்ல புட் வந்து இருக்கும் போய் சரிபார்த்து அரேஜ்மெண்ட் முடிச்சிட்டா"

    "எதுக்கு?"

    "சார் ஒருமணிக்கு ஆபிஸ் ஸ்டாப் லஞ்சுக்கு நாம தானே வர வைத்து இருக்கோம். உங்க மேரேஜ் வேற டேட் அனொன்ஸ் பண்ணிடலாம் சார்" என்றதும் நினைவு வந்தவன்.

    "யாயா.. போய் பாருங்க." என்றவன் யோசனையில் முழ்கினான்.

    மணி ஒன்றிற்கு பார்ட்டி ஹால் வந்தவன் தனது கோட்டேஷன் டீல் பற்றி சொல்லி அடுத்த மாதம் முதல் அந்த சைட்டுக்கு எத்தனை பேர் போகணும் என்றும் குழுவை பிரித்து விவாதிட்டான். பெரிய கன்ஸ்டரக்ஷன் என்றால் மினிமம் இரண்டு மூன்று டீம் உதவியோடு சொன்ன நாட்களுக்குள் கட்டி முடித்து அதற்கு தேவையான டீல் எல்லாம் ஆளுக்கு ஒருவராக நியமிக்க பணித்தான்.

     கேசவோ மற்றொரு நற்செய்தி நம்ம சாருக்கு இந்த மாதம் 28ந்தேதி திருமணம். அதற்கும் சேர்த்து சாருக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க" என்று கேசவ் மைக்கில் அறிவிக்க, ஆரவ் அவனை உறுத்தியவாறு பார்த்து வைத்தான்.

    'இப்ப நான் என்ன சொல்லிட்டேன்' என்றவாறு கேசவ் விழிக்க அதற்குள் வாழ்த்துக்கள் சார். கங்கிராட்ஸ் சார். என்று குரல்கள் செவியில் எட்ட ஒரு சின்ன புன்னகை உதிர்த்து கடந்தான். 
   
     உணவுகள் முறையாக வந்துவிட்டதா? சுவை எப்படி என்று ஒரு பார்வை வீச, அங்கே புதிதாய் பணியில் அமர்ந்த இளம் பணியாளர்கள் செல்பி எடுக்க அதனை பார்த்தான்.

    "மச்சி ஸ்டேடஸ் அதுக்குள்ள வச்சிட்ட?" என்று ஒருவன் கலாய்க்க

     "லாஸ்ட் டைம் என் லவ்வர் ஓவரா பேசிட்டா டா. பார்ட்டி பெஸ்டிவெல் போட்டேன் வயிற்றெரிச்சல் ஆவா." என்று சிரிக்க,

     "ஆமா டா. என்னை கூட எங்க சொந்தகாரன் ஜாப் கிடைக்கலையா கிண்டல் பண்ணி இன்சல் பண்ணினான். இப்ப பாரு ஸ்டேடஸ் பேஸ்புக் போஸ்ட் பிக் போட்டேன் அதை பார்த்தே வயிரு கருகும்" என்று இளைஞர் பட்டாளம் தங்கள் சந்தித்த மனிதருக்கு இப்படி கூட பதிலடி தர எண்ணி சிரித்தான் ஆரவ். 
       
    மணி இரண்டரை ஆக "இது என் நம்பர் ஆரவ் -ஜனனி" என்று வாட்ஸப் மெஸேஜ் வரவும் அதனை பார்த்தவன் தன்னில் இதயத்தில் வேறூண்று இருக்கும் அந்த எண்ணின் நம்பரை தட்டச்சு செய்து சேவ் செய்ய அதில் கள்ளி செடி போட்ட முகப்பு படம் இருக்க வேகமாக அவ்வெண்ணை அழித்தான்.

     கண்கள் மூடி இருநிமிடம் இருந்தவன். உடனடியாக "ஷல் ஐ மீட் யூ" என்றான்.

    "ஆரவ் எனக்கு ஜாப் முடிய 5 ஆகும்"

     "பிரேக் டைம் என்று கூட இல்லையா?" என்றான். அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு.

     "பிரேக் டைம்... த்ரி தேர்ட்டி. பட் இருபது நிமிஷம் தான் ஆரவ்." என்று ஜனனி கூறவும்.

    "வெல் ரெடியா இரு." என்றவன் தொடர்பை துண்டித்து புறப்பட்டான்.

    "ஆரவ்... ஆரவ்..." என்று ஜனனி கத்த துண்டித்த ஒலி கேட்டதும் 'இப்ப என்ன செய்ய? பர்மிஷன் கேட்டுட்டு ஆரவ் கூட போகலாமா?' என்று யோசிக்க, ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வரவே அதனை எடுத்து காதில் வைத்தாள்.

     "ஹலோ..?"

     "ஹலோ... ஜனனியா?" என்றது அக்குரல்.

      "ஆமா நீங்க?"

     "நான் வைஷ்ணவி. ஆரவோட  ." என்று அறிமுகமாக,

     "ஓ... அம்மா சொன்னாங்க. ஒரு தங்கை இருப்பதா" என்று ஜனனி கூறினாள்.

     "திருமணம் 28ஆம் தேதி முடிவு பண்ணிட்டாங்க. அதான் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரிந்தா சேலை எல்லாம் அதற்கு ஏற்றார் போல எடுப்பேன்." என்றதும்

     "மதினி உங்க விருப்பம் போல எடுங்க." என்றாள்.

     "வேலை நேரத்துல தொல்லை கொடுக்கறதா எண்ண வேண்டாம். ஆரவ் அண்ணாவை உங்களுக்கு பிடிச்சிருக்கா. அவருக்கும் பிடிச்சிருக்கா தெரிந்துக்க எண்ணி தான் கூப்பிட்டேன். அண்ணா முகம் திருப்பலையே" என்று குரலில் பயமும் அசவுகரியமும் கொண்டு கேட்க,

      "அதெல்லாம் பிடிச்சிருக்கு. அவர் நேற்று வந்தப்ப கூட நான் நம்பலை. ஆனா இப்ப பார்க்கணும் நேர்ல வருகின்றார். இருபது நிமிஷம் பிரேக் அதுக்குள்ள எப்படி தெரியலை. பட் பீலிங் ஹாப்பி"

     "நிஜமா... அப்போ சந்தோஷம். நீங்க பேசிட்டு போன் பண்ணுங்க. நான் இப்படி கேட்டதா அண்ணாவிடம் சொல்லிடாதீங்க. அம்மா தான் கேட்க சொன்னாங்க." என்று போட்டு உடைக்க, சரி யென்று அணைத்தாள்.

    நம்பரை சேவ் செய்து முடிக்க, எதிரே சம்யுக்தா வரவும் ஜனனி எழுந்து நிற்க, அதே நேரம் ஆரவ் ரிசப்ஷன் அறைக்கு வந்து நின்றான்.

     முக்கோண வடிவில் இருக்க, யார் யார் பக்கம் வந்து பேச என்று தவிக்க, ஆரவ் சம்யுக்தாவை தேடி வந்தான். தன் கைகடிகாரத்தை பார்த்து,

    "த்ரி தேர்டி பிரேக் டைம் நான் என் பியான்சியை எதிர்ல இருக்கற புட் கோர்ட் அழைத்து போகலாமென்று வந்தேன். கூட்டிட்டு போகலாம் தானே இல்லை... வேலை அது இது என்று காரணம் சொல்லி தடுக்க பார்ப்பீங்களா?" என்றதும் சம்யுக்தா ஆரவினை  கண்டு முறைக்க, அவனோ, வந்த வேலையில் கவனிக்க சந்தோஷமாக திரும்பினான்.

     "ஜனனி போகலாம். ஆப்டர் மேரேஜ் இந்த ஜாப் நீ பார்க்க மாட்ட." என்று சொல்வது சம்யுக்தா காதில் தெளிவாய் விழ சொல்ல வந்த பணியை அப்படியே சொல்லாது தனதறைக்கு எடுத்து சென்றாள்.

    தன் இருக்கையில் இருந்து சாய்ந்தமர்ந்தவள் ஜன்னல் வழியே எதிரே பார்க்க, ஆரவ் ஜனனிக்கு கதவு திறந்து விட அவள் நுழைவதை கண்டு மேஜையை குற்றினாள்.

    கதவை மூடும் சமயம் ஆரவ் பார்வை சம்யுக்தா அறையை தான் பார்த்தது. 

    மிதமிஞ்சிய சந்தோஷத்தோடு ஜனனியோடு பேசினான். 
    
    கையை பிடித்து கதை அளந்தான்.

      அடிக்கடி ஜனனியை புகைப்படம் எடுக்க செய்தான். சம்யுக்தா அறை திரைசீலை போட்டு மறைக்க, ஆரவ் ஜனனி அருகே இன்னமும் நெருங்கி வந்தமர்ந்து செல்பி எடுத்தான். உதடு குவித்து கையை வி வடிவில் வெற்றியாக பறைசாற்றி எடுக்க, சம்யுக்தா கார் வெளியே புறப்படுவதை கண்டு நிம்மதி அடைந்தான்.

     "ஓகே 28 நம்ம வாழ்க்கைய மாற்றிடும். அது வரை டச்ல இருப்போம். சேவ் மை நம்பர்" என்று நம்பரை கொடுத்து கிளம்பினான். 

     ஜனனிக்கு அளவில் சந்தோஷத்தோடு வந்தாள். ரிசப்ஷன் முன் செய்யும் பணியை குறிப்பிட்டு தலைவலி என்று  மட்டும் எழுதி வைத்து சம்யுக்தா சென்று இருப்பாள் போல அது மட்டும் இருந்தது.

    'இந்த மேம் என்ன ஆச்சு. நாம கிளம்பினா கூட ஒரு மணி நேரம் இருந்து நாளை ஒர்க் பார்ப்பாங்க. இரண்டு நாளா தலைவலி சொல்லறாங்க. நாம மதிவாணன் சாருக்கு போன் பண்ணி என்ன ஏது என்று கேட்போமா? என்று அது தேவையற்றது என்று பணியை தொடந்தாள்.

      ஆரவ் கார் வளைவில் செல்ல சம்யுக்தா கார் எதிலோ இடித்து தலையில் இரத்தம் வர ஸ்டியரிங்கில் கிடந்திட தன் காரை விட்டு இறங்கி வந்தவன், எதையும் யோசிக்காது அவளை தூக்கி தன் காரில் வைத்து மருத்துவமனையை நோக்கி விரைவு படுத்தினான்.

  செல்லும் வழியில் எல்லாம் 'இவ திமிருக்கு ஒதுங்கி போக பார்த்தா நானே இவளுக்கு காரோட்டி சேவகம் பண்ணறேன்.

    கையை கார் கதவில் இரு முறைக்கு மேலாக குத்தினான்.

     சம்யுக்தா அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தவள் கண்கள் சொருக இமை மூடினாள்.

  - வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்

  படிக்கிற அனைவருக்கும் நன்றிகள். கருத்தளித்து உற்சாகம் தருவோருக்கு மிக்க நன்றிகள். மகிழ்ச்சி...😊 

  அடுத்த பதிவு திங்கள் வரும். இரு கதை தொடர் முடித்து விட்டாள் பிறகு இக்கதை வாரத்திற்கு இரு பதிவு தர முயல்கின்றேன். 

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

 


🪔🔥-2

  
   கதவை திறக்க அக்கா வைஷ்ணவி தாய் சுபாங்கினி இருவரும் உள்ளே வந்து நிற்க வைஷ்ணவி டிரஸிங்க் டேபிளில் இருந்த புகைப்படத்தை கண்டாள்.

     "அம்மா நீ சொன்னப்ப நம்பலை. இப்ப நம்பறேன். இங்க பாரு அவன் கண்ணாடி பக்கத்துல பொண்ணு போட்டோ வைத்து இருக்கான்." என்றதும் ஆரவ் போட்டோவை பார்க்க அவன் தூக்கி எறிந்த கணம் அது அழகாக குத்தவைத்து பாடி ஸ்பிரே பின்னால் கண்ணாடியில் ஒட்டியது போல நின்று இருந்தது.

     அவன் மறுக்க வாய் திறக்க, அவன் அன்னையோ "என்மகன் தான் சொன்னதை செய்வான். எனக்கு தெரியுமே." என்றவர் மகனின் தாடை பிடித்து, "உனக்கு சம்மதமென்று சொல்லிடலாமா ஆரவ்" என்று கேட்டதும் என்னனென்னவோ யோசனைகள் அலைகழிக்க முடிவுகள் மனம் எடுக்கவிடாது மூளை எடுத்தது.

     "சரிம்மா" என்று உதடுகள் வாய் வார்த்தையாக சொல்லியும் விட்டான்.

       "சரி சாப்பிட வா. உனக்கு பிடிச்ச பருப்பு பாயாசம் செய்து இருக்கேன்." என்றதற்கு,

     "நான் சாப்பிட்டேன் மா. வயிறு நிரம்பிடுச்சு. எனக்கு வேண்டாம் தூக்கம் வருது" என்றதும் "சரி நாங்க போறோம். தூங்கு ஆரவ். ஆரவ்... போன வேலை என்னாச்சு?"

    "நாளைக்கு அவளை போய் பார்க்கணும் அம்மா... அதாவது வேலை விஷயமா. இன்னமும் முடிவா தெரியலை" என்றவன் பேச்சில் அயர்ச்சி தெரிய சுபாங்கினி மைந்தனை உறங்க கூறி மகளை கூட்டிகொண்டு அறையை விட்டு சென்றார்கள்.

       கதவை தாழிட்டு வந்தவன் குளியல் அறையில் ஷவரின் கீழ் நின்றான். வெகுநேரம் நின்றவன் மனம் அதில் தணியாது இருக்க நீர்வரவு வராது போகவே சுயநினைவு அடைந்து வெளியேறினான். இரவு நேர உடை அணிந்து கண்ணாடியில் தன் பிம்பம் கண்டவனின் கண்கள் இரத்தசிவப்பு ஏறி இருந்தது.

     இன்று உறக்கம் தனக்கு தானாக அமையாது என்று தூக்க மாத்திரையை ஒன்றை எடுத்து விழுங்கினான்.

     ஈரத்தலையோடு மெத்தையில் படுத்தவன் இமைதிறக்காமல் புரண்டு புரண்டு படுத்து நித்திரைக்கு அப்பொழுதும் போராடினான். ஆனால் இமை திறக்கவிடவில்லை அந்த மருந்தின் புண்ணியம்.

     மணி ஏழு பதினெந்து ஆக மகன் இன்னுமா எழுவாமல் இருக்க கண்டு சுபாங்கினி வந்து பார்த்தார்.

     கதவை தாழிட்டு இருக்க பலமுறை போன் அழைப்பை கொடுத்து எடுக்காமல் போக பதறினர்.

     எதற்கோ மீண்டும் அழைப்பை தொடுக்கவும், ஆரவ்விற்கு எங்கோ ஓசை வர தனது கையை தட்டுதடுமாறி பக்கத்தில் துழாவினான்.

     அகப்பட்ட போனின் தொடுத்திரை நகர்த்தி கண்கள் கூச எழுந்தான்.

     "என்னம்மா?" என்றான்.

      "கதவை திற ஆரவ்" என்ற சுபாங்கினியின் பதட்டமான பேச்சில் உடல் அனலாக இருப்பதை கூட உணராது எழுந்து திறந்தான்.  

    உச்சி முதல் பாதம் வரை விழியில் மகனின் ஆறடியை கண்டு கையை பிடித்து மணிக்கட்டை திருப்ப உடற்சூடு கண்டு விதிர்த்தது தாயுள்ளம்.

     "அது ஒன்றுமில்லை மா. நேற்று வரும் பொழுது பீச்சில கொஞ்சம் நேரம் இருந்துட்டு வந்தேன். அதோட பாதிப்பு கொஞ்சமா உடல் கொதிக்குது அவ்ளோ தான். என்றவன் அன்னை கையை விலக்கி அலுவலகம் செல்ல கிளம்பினான்.

      சுபாங்கினி மகனை அதிர்ச்சியாக பார்த்தார். எதுவும் தடுக்கவில்லை. இதே போல ஒரு முறை நடந்தது நினைவு வர வேகமாக மகனுக்கு கஞ்சி மல்லி துவையல் செய்து மாத்திரையை நீட்டினாள்.

     ஆரவ் மறுக்கவில்லை மடமடவென பருகி மாத்திரை விழுங்கி செல்ல, மதியம் சாப்பிடவும் மாத்திரையையும் சுபாங்கினி அவனின் உணவோடு எடுத்து வைத்தார்.

    செல்லும் மகன் தணிந்து காணப்பட்டாலும் அவனின் உடலை போல உள்ளமும் எரிமலையை சுமந்து கொண்டு உள்ளதோ என்று எண்ண நெஞ்சுக்கூடு காலியான உணர்வே வந்தது.

     இல்லை தாமதிக்காமல் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற நோக்கில் போனை எடுத்து பெண் வீட்டாருக்கு பேச ஆரம்பித்தார்.

       பெண் வீட்டின் பக்கம் சுபாங்கினிக்கு சாதகமாகவே சம்மதம் தெரிவித்து நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் ஒப்புதலை அளித்திட, மகிழ்ச்சியாக அடுத்த முகூர்த்தம் தேடினார்கள்.

      ஆர்வ துரதர்ஷ்டமோ என்னவோ கார்த்திகையில் இரு சுபமுகூர்த்த நாள் இருந்தது. அடுத்து மார்கழி மாதம் என்பதால் அம்மாதத்தில் திருமணம் வைக்கமாட்டார்களே என்று யோசனையாக மீண்டும் பெண் வீட்டாரிடம் நிச்சயத்திறகு பதிலாக நேரிடையாக திருமணம் செய்தால் என்ன என்று கேட்டு வீட்டில் பேசி பதில் சொல்ல சொல்லி அணைத்தாள் சுபாங்கினி.

       தன் அலுவலகம் வந்தவன் ஆரவ் கண்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயர் பலகை தாங்கிய கட்டிடத்தில் நின்று ஒரு கணம் கண்டவன். தன் ஏசி அறைக்கு வரும் வரை நினைவுகள் செயல் பாட்டில் இல்லை.

      "சார்... புராஜக்ட் சக்சஸா சார்" என்றதும் நேற்றைய சம்பவங்களை எண்ணி,

      "சக்சஸா மாதிரிதான் கேசவ். இருந்தும் அக்ரிமெண்ட் நம்ம கைக்கு வரலை. அங்க குறிப்பிட்ட ஓர்க்கர் லீவ்" என்றான்.

     "ஓகே சார் இன்னிக்கு நான் போய் வாங்கவா?" என்று பரிவாய் கேட்டான்.

    இருதினமாக கேசவ் பணிக்கு விடுப்பு கொடுத்து அவனது  பணியை நேரிடையாக ஆரவ் தொடர்ந்ததன் விளைவு தான் தற்போது ஆரவ் நிலை. கேசவ் தந்தை என்ற பதவி அடைந்த காரணத்திற்காக இரு நாள் விடுப்பு இன்று தான் கேசவ் வந்துவிட்டானே அவனை அனுப்பி கேட்போமா? அல்லது போனில்.... அந்த திமிர் பிடித்தவள் நிச்சயம் போனில் பேச மாட்டாள். நிச்சயம் தவிர்க்க பார்ப்பாள்.

     தானே நேரிடையாக போக வேண்டும் அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

    மதியம் உணவருந்தி மாத்திரை விழுங்கி தனது காரை எடுத்து கிளம்பினான்.

     நேற்று வர வேண்டாம் என்று கடைசியாக தோன்றிய எண்ணத்தை மீறி தாய் பார்த்த பெண் என்ற ரீதியில் பேச வந்தான்.

      வந்ததும் தன் தனிப்பட்ட எண்ணத்தை ஒதுக்கி பணிக்காரணமாக முதலில் அந்த திமிர் பிடித்த காரிகையை சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னான்.

       ரிசப்ஷன் பெண் ஜனனி அவனை இமைக்கு மறந்து கண்டாள்.

    நேற்றை விட இன்று பார்வையில் சினம் கூடுதலா இரத்தச்சிவப்பாக இருக்கே... என்று அசராது அவனை கண்டு சம்யுக்தாவிற்கு அழைத்து ஆரவ் வந்ததை கூறினாள்.

    "அரை மணி நேரம் காத்திருக்க சொன்னாங்க" என்று அச்சத்தால் மெல்ல மெல்ல கூறினாள். ஏனெறால் ஆர்வ அறையை விட்டு சீறி அகன்றதும் அறைக்குள் வந்த ஜனனி கண்டது மூலைக்கு நகர்ந்து இருந்த சேரை தான். அதனால் இன்றும் அப்படி காத்திருக்க வைத்தால் என்ன செய்வாரோ என்று அவனை பார்க்க, ஆரவோ சிசிடிவி இருக்கும் திக்கை பார்த்து ஏளனம் புரிந்தவன் ஜனனியிடம்,

     "இந்த ஜாப்பை விட்டு வர சொன்னா வெளியேறுவிங்களா? என்னோட கண்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம் உங்க பணியை எதிர்பார்த்து காத்திருக்கு" என்றான்.

     "சில நிமிடம் கண்கள் படபடவென அடிக்க ஆம் என்பதாய் தலையசைத்தாள்.

     "உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்றான்.

    ஆரடி ஆண்மகன் வசீகரிக்கும் பார்வை பரந்த தோள்கள், வைரமாக இதயக்கூடு கிடைத்தால் மறுக்க தோன்றுமா? திருமண பந்தம் நிழலாக நொடியில் தோன்றி மறைய வெட்கப்பூக்கள் சிந்தினாள்.

     "உங்க கண்கள் ஏன் சிவந்து இருக்கு?" என்றாள் உரிமையாக.

      "சின்னதா பருவக் காய்ச்சல்..." என்றான்.

     "என்ன ஜூரமா?" என்றவள் கைகள் அவனின் பிறை நெற்றியில் தொட்டு பார்க்க, அது க்ரில் அடுப்பு போல சுட்டை தர, "என்ன இது இந்த ஜாரத்தோடு வரணுமா? வேற ஆட்களை அனுப்பக் கூடாதா? மாத்திரை போட்டீங்களா? ஹாஸ்பிடலுக்கு போகலாமா? நான் வேண்டுமென்றால் லீவு சொல்லிட்டு உங்க கூட வர்றேன்" என்று ஜனனி பதட்டம் கொள்ள, ஜனனி ஆரவ் நெருங்கி நின்று பேசுவதை பொறுக்காமல் சம்யுக்தா தகித்து வந்து நின்றாள்.

       "வாட் இஸ் திஸ் ஜனனி. போறவர்றவனிடம் இப்படி தான் சில்லியா சிரிச்சி பேசுவியா? இதுக்கு தான் உனக்கு மாத சம்பளம் தந்து ரிசப்ஷன் பணிக்கு எடுத்தேனா? 
     இங்க பாரு ஜனனி... பார்க்க கண்ணுக்கு அழகா இருக்கும் ஆட்கள் மனசு தான் நாற்றத்தின் பிறப்பிடமாக இருக்கும். புரிந்து நடக்கற வழியை பாரு. 
   லூக் மிஸ்டர் ஆரவ் உங்க மாடல் பிடிக்கலை அதனால ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது. யூ கேன் கோ" என்று பொரிந்து பேசினாள்.

      "மேம் டீல் சைன் பண்ணிட்டு" என்று ஜனனி என்னவோ சொல்ல வர சம்யுக்தா முனைப்பில் குழம்பி நின்றாள்.

    ஆர்வ அவ்விடம் அதிர சிரித்தவன், "டீல் சைன் பண்ணிட்டு இப்ப கேன்சல் பண்ண போறீங்க. அப்படி தானே... மிஸ் சம்யுக்தா.... தாரளமா பண்ணுங்க. பட் என் பியான்சி ஜனனியிடம் நான் கொஞ்சம் பேசிட்டு போகலாம் தானே. அதுக்கு பர்மிஷன் உண்டா... இல்லை பணிநீக்க கடிதம் தந்து இன்றோடு என்னோடவே கூட்டிட்டு போகவா?" என்றவன் பேச்சில் சம்யுக்தா அதிர்ந்து ஜனனியை பார்க்க,

     "சாரி ஜனனி. நான் நமக்குள்ள பேச தான் இருந்தேன். ஆனா உன்னை போறவர்றவனோடு பேசுவேன் உங்க முதலாளி அம்மா சொன்னதும். என் வருங்காலத்தை எப்படி இப்படி பேசலாமென்று கோபம்." என்றவன் சம்யுக்தாவை பார்த்து,

"பரவாயில்லை நான் அழகன் என்று உங்க முதலாளி வாயால் வருதே... அப்பறம் என்ன சொன்னா......ங்க மனம் நாற்றத்தின் பிறப்பிடமா? நாற்றம் என்றால் என்ன தெரியுமா? வாசம், மணம் என்று பொருள். அந்த காலத்தில் நற்நாற்றம் துர்நாற்றம் என்று பிரித்து சொல்லுவாங்க.   

      என் இதயம் நற்மணத்தின் பிறப்பிடம் தான். அது என்னை ஆள்பவளுக்கு நல்லாவே தெரிந்தா போதும்" என்று முடித்தான்.

    சம்யுக்தா இன்னமும் அதிர்ச்சியில் அவன் பேசுவது புரிந்தாலும் ஏதோவொரு புதைக்குழியில் அவளை இழுத்து செல்வது போன்ற மாயையை தந்தது.

    "சாரி மேம். நேற்று வீட்டுக்கு சீக்கிரம் போக நினைத்தது... என்னை பெண் பார்க்க வருவாங்க என்பதை சொல்ல தான் வந்தேன். ஆனா நீங்க அறைக்குள் தலைவலி என்று அவஸ்தைப்பட்டதை கண்டு கூட இருந்துட்டேன். ஏன்னா அதுக்கு பிறகு ஒரு மணி நேரம் ஆகும் வீட்டுக்கு போக அதனால தான் அதுவும் இல்லாம மாப்பிள்ளையும் வரலை என்று தரகர் சொல்லிட்டார்.

     போட்டோவை வாங்கி வைத்துட்டு என் மோட்டோவை தர சொன்னேன்.  ஆரவ் போட்டோவை வீட்டுக்கு போய் பார்த்தேன். அதனால தான் இங்க அவருக்கு காய்ச்சல் என்று கண் சிவந்து இருக்க தொட்டு பார்த்தேன். ஹாஸ்பிடல் போகலாமா என்று உரிமையா கேட்டேன். தப்பா மேம்... நீங்க எங்களுக்குள் அவர் தப்பா நடந்ததா எண்ணி சைன் பண்ணின டீலை கேன்சல் பண்ணாதீங்க மேம்." என்று விளக்கவும் உண்மையாகவா என்று ஆரவை பார்க்க, அவனோ "ஷி இஸ் மை பியான்சி ஜனனி" என்று நேற்று சுபாங்கினி கொடுத்த ஜனனியின் புகைப்படத்தை எடுத்து நீட்டினான்.

      நேற்று இங்கே காத்திருக்க யாரையும் பிடிக்கவில்லை. எல்லோரும் திமிரானவர்கள் என்று எண்ணி இருந்தான். இன்றோ சற்றே அவன் மனம் மாற்றம் கொண்டது.

     சம்யுக்தா சில பல நொடியில் தன்னை மீட்டு எடுத்து "சாரி ஜனனி" என்று தன் அலுவலக அறைக்கு வந்தவள். குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள்.

    இனியும் காத்திருக்க வைத்தாள் அவன் தன்னை கேலி செய்ய கூடும் என்பதால் ஏற்கனவே சைன் பண்ணிய டாக்குமெண்ட்ஸை எடுத்து ஜனனிக்கு அழைப்பை தொடுத்தாள்.

     "இதை அவரிடம் கொடுத்திடு. நான் வீட்டுக்கு புறப்படறேன் ஜனனி. அப்பா நகை வாங்க கூப்பிட்டு இருந்தார் நான் மறந்துட்டேன்" என்று கிளம்ப கைப்பையை எடுத்தாள்.

     "ஓகே மேம். ஆரவிடம் நான் தந்திடறேன்" என்று கூற சம்யுக்தா தீயாய் முறைத்திட, பின்னர் அதனை மறைத்து "ஆல் தி பெஸ்ட் ஜனனி. ஹீ இஸ் எ குட் பாட்னர்" என்று ஆரவை காணாது கிளம்பினாள்.

     ஜனனி மகிழ்ச்சியோடு ஆரவிடம் தந்து, "மேம் ரொம்ப சைலண்ட் ஆர்வ.  இப்படி நடந்துக்கிட்டது இல்லை. நேற்றில் இருந்து தலைவலி அதனால் தான்." என்று கொடுக்க வாங்கியவன் மனமோ, இனி அடிக்கடி தலைவலி வரலாம்' என்று மனதுக்குள் கர்ஜித்தது.

- வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்.

Hi

யாரெல்லாம் போட்டோல இருந்தது சம்யுக்தா நினைத்தீங்க... ஹாஹா.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அப்ப தான் பூஸ்ட் குடித்தது போல தெம்பா யூடி வரும்.


ஒளியும் ஒலியும்


  இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே  இணைந்தது. 


     வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து 'இசையருவி'யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப    அவர்களின் 90 கிட்ஸ் வரிசையில் இதுவும் ஒன்று. 

மறக்க இயலாத நிலை. சினிமாவின் பாடல் இசையில் அந்நாளை எண்ணி பார்த்தது. இப்பொழுது போல பாடல் ஒளிபரப்பி கொண்டு இருக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறை அரை மணி நேரம் பாடல். 

      வித்யுத் எட்டு வயதில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆர்வமாக அமர ஆறு வயது அதிதி அவனோடு விளையாட கூப்பிட்டபடி அழுதாள். 
  
    சின்னசிறு அழுகை கொண்ட அந்த தளிரான அதிதியின் அழுகையில் பெரியவர்கள் "வித்யுத் பாப்பா அழறா வேடிக்கை பார்க்கற என்ன?" என்று வித்யுத் கேட்டதும் தாமதம். 

    "அப்பா அவ விளையாட கூப்பிடறா எனக்கு ஒளியும் ஒலியும் பார்க்கனும்" என்று வாரத்தில் ஒரு முறை வரும் வண்ணமயமான ஆடல் பாடலை இரசிக்க அமர அதிதி அதனை உணரும் வயதா என்ன? 

    வித்யுத் சிகையை தன் பிஞ்சு விரலால் இழுத்து விளையாட அதிதி அழுகையில் இருந்து வன்முறையில் அடம் பிடிக்க இம்முறை வித்யுத் அலறினான். 

    "அப்பா... மாமா... இவளை பாருங்க. முடி பிடிச்சு இழுக்கறா" என்று கத்த துவங்க பெற்றோர் வந்து அதிதி விரலில் இருந்து பிரித்தெடுத்து வித்யுத் தந்தை 

    "பாப்பா உன் கூட விளையாட விரும்பறா போய் விளையாடு கண்ணா. அப்ப தான் அவளுக்கு உன்னை பிடிக்கும்" என்று சொல்ல வித்யுத் சில கணம் யோசித்தவன். சரி என்று கிளம்பினான். 
  
     பொம்மை வைத்து விளையாடிய கணம் இடையே இடையே பாடலை இரசித்தவன் அதிதி நான் உன்னோட விளையாடினா பிடிக்கும் தானே என்று 90 கிட்ஸாக அவளை தனக்கு பிடிக்க வைக்க ஒளியும் ஒலியும் தியாகம் செய்து விளையாட ஆரம்பித்து இதோ அவளையே திருமணம் செய்து இருக்கின்றான். 90 இல் சில விஷயம் மாறவே மாறாது. அதில்  ஒன்று இந்த ஒளியும் ஒலியும். 

   -பிரவீணா தங்கராஜ்

கனவில் வந்தவளே

கனவில் வந்தவளே




         கனவில் பார்த்த நங்கைக்கும் நிஜத்தில் வந்த அவளுக்கும் உருவம் மட்டுமே ஒற்றுமை இருக்க எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் அவளை தன் எண்ணங்களோடு கலந்து கைத்தலம் பற்றிடும் நாயகனின் கதை. amazon பிரதிலிபி இணைப்பு இங்கே கொடுத்து உள்ளேன்.




விழிகளில் ஒரு வானவில்...

விழிகளில் ஒரு வானவில்
  

                          நட்புக்கும் காதலுக்கும் மாட்டிக்கொண்டு விழிக்கும் மென்மையான நாயகனின் கதை. இக்கதையும் முழு தொகுப்பு இங்கே இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 

இக்கதையினை கீழ் காணும் லிங்க் மூலமாக சென்று வாசிக்கலாம். 









மேதினி உதயம்

                                                      



     மேதினி உதயம் 


                கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.

2019–20 தொற்று

           கொரோனா வைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட  அறிவியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

                 கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிடு -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை மூச்சு மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்திருந்தது. 

            

 மேதினி உதயம் கதையில் வாயிலாக கோவிட்-19 வைரஸை மட்டுமில்லை அன்பையும் காண்போம்.

        அங்கே கடல் வாழ் உயிரினங்கள் சில உயிரோடு கிடந்தன. பெரிய பெரிய மீன்கள், நண்டுகள், நத்தைகள், சிப்பிக்கள், கடலாமைகள், கடல் அட்டை, கடல் பாசி, ஜெல்லி மீன் நட்சத்திர மீன் சுறா திமிங்கலம் என்று ரக வாரியாக இருந்தன. கடல் நம் உலகத்தின் முக்கால் பகுதி அதன் ஆதிக்கமே . அப்படி இருக்க நீந்தும் ஜீவரசிகள் ஏராளம் தான்.

         எமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

             கடலுக்கு அடியில் 0.3 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை உயிரின வகைகள் வரை வாழ வாய்ப்புள்ளதாம். மனித இனம் இவற்றில் 275 000 உயிரினங்களை மாத்திரம் இதுவரை அறிந்துள்ளது என்றும் இவை அனைத்தும் பெயரிடப் பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனின் செயற்பாடுகளால் சமுத்திரங்களும் அவற்றின் உயிர் வாழ்க்கையும் பாதிக்காது இருக்க கடல் வாழ் உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கை முறை பற்றி மனிதன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய இந்தத் தகவல் பிபிசி இனது அண்மைய Blue planet II என்ற ஆவணப் படத்தில் செர் டேவிட் அட்டென்பொரொஹ் என்ற ஆய்வாளரால் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமுத்திரங்களது அடியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் வகைப் படுத்துவது மிகவும் கடினமானது என்றும் தெரிவித்த டேவிட் ஆனாலும் ஒவ்வொரு வருடம் இந்த உயிரினப் பட்டியலில் எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விசித்திர உயிரினங்கள் அடங்கலாக கிட்டத்தட்ட 2000 உயிரினங்கள் வரை சேர்க்கப் பட்டே வருவதாகவும் தெரிவித்தார்.

       பல உயிரோடு மீனை ஏறா நண்டு ஆமை என்று அங்கே பாதி வேகவைத்து உணவாக அப்படியே உண்டு கொண்டு இருந்தனர் அந்த கடல் வாழ் பகுதி மக்களில் சிலர்.

        நமது கதையின் முதல் நபரும் அங்கு தான் இருந்தார். முதல் நபரே தவிர நாயகன் அல்ல. எப்பொழுதும் போல தங்கள் வீட்டுக்கு தேவாயான கடல் உணவுகளை சமைக்க வாங்கி கொண்டு சென்றார். 

       அதே சமயத்தில் அங்கு ஒரு ஆய்வகதில் ஒரு செயற்கை வைரஸ் ஒன்று கண்டு பிடித்து ஆய்வகதில் சோதனையிட்டு கொண்டு இருந்தனர்.    

      அத்தனை பாதுகாப்போடு இருந்த வைரஸ் உலகத்தினை உலுக்க காத்திருந்தது 

      யுகான் மாநகரத்தின் ஒரு குடும்பதினர் தனது வீட்டுக்கு சென்ற பின் இரு நாட்கள் பின்னர் தனது மனைவிக்கு தீராத காய்ச்சல் வர மருத்துவமனை வந்து சேர்த்தநர். 

டிசம்பர் 2020 இரண்டாம் வாரம் அது....  

       தொடர்ந்த காய்ச்சல் நிமோனியா என்றே அறிந்து அதற்கு மருந்து கொடுக்க பட்டது. 

     அதற்கு பின்னர் சிலருக்கு நோய் தொற்று காரணமாக சிலருக்கு காய்ச்சல் பரவ துவங்கியது. 

    தனது இல்லாளின் இன்னலுக்கு காரணமின்றியே தான், காய்ச்சலுக்கு மருந்து எடுத்து கொண்டு இருந்தார்கள். அந்த மற்ற நோயாளிக்கும் கூட..   

 டிசம்பர் 25 

 சார்ஸ் போன்றதொரு நோய் தங்கள் மாநகரதில் பரவுகின்றது என்றே அறிந்தனர். அதுவும் மனிதரிடம் இருந்து மற்ற மனிதருக்கு தொற்றாக பரவுகின்றதை *லி வென்லியாங்* எச்சரிக்கை செய்தார். ஆனால் என்ன செய்ய அந்த எச்சரிக்கையும் தொற்று நோயினை போல பறந்தது.  

         ஆய்வில் ஒன்று வைரஸ் கிருமிகள் வெளியாக அது சுவாசித்த நபர் சிலர் சில இடங்களுக்கு தாங்கள் தங்கள் அறியாமல் நோயினை பரபுக்கின்றோம் என்பதை அறியாது கிளம்பினார்கள்.

           அன்று தான்   அவ்விழா ஆரம்பமானது. உலகத்தின் மற்ற நாட்டினரும் அங்கே ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தனர். பல்வேறுபட்ட ஆட்கள் சூழ்ந்து இருந்தனர். 

     அது ஒரு நல்வாழ்வு கலைக்கூடம் சிறப்புக்காக பல்வேறு நாட்டில் இருந்து பெரிய பெரிய ஆட்களும் நடிகர்கள்  தொழில் அதிபர்கள் என்றே வந்து சேர்ந்தனர். 

        அவனும் வந்து சேர்ந்தான். ஆம் நம் கதையின்  நாயகன் என்று எடுத்து கொள்வோம். வசீகரன் ஆறடி மிடுக்கில் வசியம் செய்பவனை போல தான் இருந்தான். 

    நடிகர்கள் முதல் மற்ற நாட்டின் முக்கியத்துவம் கொண்டவர்கள் வரை இருக்கும் அவ்விடத்தில் நலவாழ்வின் சங்கம் உறுப்பினார்களும் இருந்தனர். 

    நாட்டின் வளர்ச்சி ஒற்றுமை மேம்படுத்தும் திடம் என்றே பேசி முடித்து மூன்று மணி நேரம் இழுத்தது. 

    அங்கே உயர் தர உணவும் பரிமாற பட்டனர். வசீகரன் எல்லாவற்றிலும் மேலோட்டமாக கலந்து கொண்டான். இந்த விழாவில் தந்தைக்காக மட்டுமே கலந்து கொண்டு வருகை புரிந்தவன். 

 தனக்கு இங்கே இதுவரை இருந்ததே அதிகம் என்றே எண்ணி அடுத்து கிளம்பினான். 

      கொண்டாட்டம் தேடி.. நாடே கொண்டாட செய்யும் நாள் அது. ஆங்கில வருட பிறப்பு. வசீகரனுக்கு ஏனோ நண்பர்களை விட்டு இன்று இங்கே வந்தது என்னவோ போல தோன்றியது. ஆனா இது ஒன்றும் நம் தேசம் அல்லவே. கை கொடுத்து ஹாய் சொன்னால் நொடியில் நட்பை அடையாளம் பகுக்கலாம்.

      ஆண் பெண் என்று இங்கே பேதமில்லை. ஒரு பப் சென்றான். வேடிக்கை வண்ண விளக்குகள். ஆட்டம் பாட்டம் செவிபறை கிழியும் ஓசைகள் கண்கள் கூசும் வண்ண நிறங்கள் என்றே தென்பட எதிரே இருக்கும் மதுவும் வண்ணங்களில் இருந்தது.        

                    விலை யுயர்ந்த பழரசா பானங்கள் வண்ணங்களில் இருக்க அதில் ஒன்றை எடுத்து சுவைத்தான். பலரின் முகங்கள் மகிழ்வில் இருப்பதை கண்டு தனது மனம் கூட மாறுவதை உணர்ந்தான். 

          சைதன்யா நினைவுகள் வந்து சேர்ந்தது. அவளின் கள்ளமில்லா மனம் காதலை சொல்ல தான் மறுத்து ஒதுக்கியதை எண்ணி மெல்ல வலிக்க செய்தது. 

        அவன் தான் தானாக பேசினான், பழகினான் காதல் என்னும் மாயத்தை  உருவாக்கி ஆனால் அவளே காதல் என்று முன் வந்தபின் நழுவியதும் அவனே. 

            முதலில் ஒரு வேகத்தில் விரும்பியவன் தனது தந்தை அதிகாரங்களை கையில் எடுத்த பின் தான் தனக்கு அவள் சரிபட மாட்டாள் என்றதை உணர்ந்தான். 

      சைதன்யா அப்படி யோசிக்கவில்லை வசீகரன் நழுவியாதை தானாக உணர்ந்து அவளும் எட்டியே இருக்க எண்ணி விட்டாள். 

        'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்" என்ற குரல் காதில் கிழிய நினைவுகள் திரும்பியவன் தனது இருப்பிடம் வந்து சேர்ந்தான். 

      அறையில் நுழைந்தவனுக்கு தலைவலி தாக்க கட்டில் அப்படியே விழுந்தான். 

       அதிகாலை போனில் மெசேஜ் டோன் எண்ணிக்கை சத்தம் அதிகம் கேட்க விழித்து எழுந்தான். எழுந்ததும் போனை பார்க்க எல்லாம் நியூ இயர் வாழத்தாக வந்து சேர ஒரு பார்வையில் எல்லாம் பார்த்தவன் அதனை தூக்கி போட்டு விட்டு குளிக்க சென்றான். 

            ஏனோ குளித்து கொண்டு இருந்தவனின் மனதில் சைதன்யா குறுஞ்செய்தி வந்ததா என்றே யோசிக்க அவன் நினைவுகளில் இல்லை என்றே மூளை எடுத்துரைக்க ஷாவரில் நனைந்தவன் டவல் அணிந்து வெளியே வந்தவன் மூளை சைதன்யா குறுஞ்செய்தி இல்லை என்றதையும் தாண்டி தேடினான். அவனுக்கு வந்த 200 குறுஞ்செய்தி இருந்தும் ஏனோ அவளின் ஒற்றை செய்தி இல்லை என்று மனம் வாடி கிளம்பினான். 

          தனது பொருட்களை எடுத்து கொண்டு இந்தியா பயணம் தயாராக்கினான். 

              விமானத்தின் ஏறிய பின்னரும் மனம் போனில் சைதன்யா ஏதேனும் சின்னதாக 'ஹாப்பி நியூ இயர் வசீ' என்று அனுப்பி இருக்கலாம் என்றே யோசித்ததே தவிர அவன் அவளுக்கு அனுப்ப வேண்டும் என்று ஏனோ அவன் மனம் எடுத்துரைக்கவில்லை.  

      ''சர்.. ஃபோன் யூஸ் பண்ண கூடாது'' என்றதும் ஏரோபிளன் மோட் மாற்றி வைத்தவன் மனம் பாரமாக சாய்ந்தான். அவனை அறியாது உறங்கி போனான். 

         இறங்கும் வரை எழும்பாமல் இருந்தவனை விமான பணிப்பெண் எழுப்ப சுற்றம் பார்த்து சாரி என்று எழுந்து கிளம்பினான். 

      அவனின் லக்கேஜ் வந்ததும் எடுத்து கொண்டு வெளியே வர தனது கார் தயாராக இருக்க ஏறி அமர்ந்தான். 

       கார் ஓட்டுனர் தயங்கி தயங்கி 'ஹாப்பி நியூ இயர் சார்'' என்றதும் முறுவளித்து ''விஷ் யூ தெ சேம்'' என்றவனின் பார்வை பூரிப்பில் இருந்தாலும் என்னவோ சோர்வு அவனை தாக்கியது.   

          ஏதோ சத்தம் வர கார் குலுங்கி நின்றது. என்ன ஏதென்று பார்க்க ஓட்டுனர் இறங்கி பார்க்க அங்கே டயர் வெடித்து இருந்தது. 

     தயங்கி கொண்டே சார் டயர் வெடிச்சு.. ஸ்டெபிணி இல்லை சார்'' வசீகரன் தலையை பிடித்து என்ன அண்ணா முதலே டயர் எக்ஸ்ட்ரா பார்த்து வைக்க வேண்டாமா?'' என்றவன் போனில் கார் டிராவல்ஸ் பதிவு செய்து ஐந்து நிமிடத்தில் மூர்த்தி டிராவல்ஸ் கார் கொண்டு வர கிளம்பினான். 

      காதல் சோர்வு தன்னை தாக்க உடல் வலியில் தன் இரு கைகளையும் முகத்தில் மூடி ஆழ்ந்து மூச்சு விடுத்து திரும்பினான். 

      ''சார் நீங்க சொன்ன பிளேஸ்?'' என்றதும் தனது பர்ஸ் எடுத்து தனது கையால் பணத்தை நீட்டினான்.மூர்த்தி பெற்று கொண்டு மன நிறைவோடு செல்ல

   அவன் அறியாது அவனின் மூலம் அக்கிருமி அந்த டிரைவர் கைகளில் பரவியது. 

       வசீகரன் தனது இல்லம் வந்து குளித்து முடித்ததும் தன்னவளை காண புறப்பட்டான். 

  இனிமேல் தனது எண்ணம் போல தானாக அவளை காதலித்ததை ஒப்புதல் சொல்ல கிளம்பினான். 

          மூர்த்தி தனக்கு கிடைத்த பணத்தை எடுத்து கொண்டு வீட்டில் வாங்கி கொண்டு வர சொன்ன பொருட்களை வாங்க வந்திருந்தான். மகள் கேட்ட கேல்குலேட்டர், புக்ஸ் என்றே வாங்கி கொண்டு வீட்டுக்கு போக அங்கே மூர்த்தி சென்றதும் மகள் கையில் இருக்கும் தந்தை வாங்கிய பொருட்களை பெற்றாள். 

     கூடவே தந்தை வாங்கிய ஐஸ் கிரீம் வாங்கி உண்ண ஐஸ் கிரீம் ருசியோடு அந்த புதுவித வைரஸ் உட்சென்றதை அறியவில்லை. 

        மனைவியிடம் காய் கறி வாங்க பணம் நீட்ட பெற்று கொண்டு மாளிகை கடைக்கு சென்றாள். 

         யாருமறியா கணத்தில் காதல் மட்டுமில்லை வைரசும் வளர்ந்தது போல.. 

           மூர்த்தி டீ கடையில் டீ குடிக்க வீட்டுக்கு வந்து சேர வீட்டில் குழந்தைக்கு குளிர் காற்றில் ஜுரம் வந்து சேர்ந்தது. 

       மருத்துவமான வந்து சேர்க்க உடனடியாக மருந்து எடுத்து கொண்டாள். 

             தான் மாலை நேரம் ஐஸ் கிரீம் வாங்கி வந்து கொடுத்தது தவறோ என்றே மூர்த்தியும் அவன் மனைவி மீனாவும் எண்ணி கொண்டார்கள். 

           மீனா கேபிள் பணம் வாங்க வீடு வீடாக சென்று வசூலிக்கும் பணி என்பதால் அடுத்த இரு நாளில் கிளம்பிட வைரசும் சேர்ந்தே கிளம்பியது. 

         இங்கு வசீகரன் சைதன்யாவிடம் காதலை சொல்லி அவளோ தனக்கு மருத்துவ பணிக்கு வேறு ஊருக்கு அனுப்ப போவதாக சொல்லி திரும்பி வரும் வரை இதே காதல் இருக்குமாஇல்லையா என்றே கேலியில் கேட்க அவள் தனது காதலை தான் இப்படி கேட்டு இருப்பது புரிய சைதன்யா சொல்லாமல் போன காதல் மறுப்பு புரியாதவனா?!  

    ஜனவரி 3 

        சீனாவில் சார்ஸ் போன்றதொரு நோய் பரவுகின்றது.. எச்சரிக்கையாக இருங்கள் என்றே லி வென்லியங்கிடம் சீனா இப்படி எதுவும் தெரியாமல் வதந்தி பரப்பாதீர்கள் என்றே எச்சரிக்கை செய்து அவரிடம் அப்படி பேசிய குற்றதிற்காக மன்னிப்பு கடிதம் கேட்டு பெற்று கொண்டார்கள். 

       சீனா யூகன் மாநகரத்தை தனிமையாக வைத்தது. ஆனால் அதற்குள் அமெரிக்கா ஸ்பெயின் லண்டன் என்றே பரவி சென்று இருந்தன அக்கிருமி.

      அதே ஜனவரி மூன்றாம் தேதியில் ஒரு ஆய்வு யூகான் மாநகரதில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அழித்தது ஹு பே சுகாதார ஆய்வகம்  அங்குள்ள தடயங்களை அழித்தனர்.

     ஆனாலும் மறைக்க முடியாது பாதிப்பை ஏற்படுத்திய வைரஸை கண்டு பிடித்துவிட்டதாக சீனா ஜனவரி 8 இல் அறிவித்தது. 

ஜனவரி 11 ஆம் தேதி 

       கடல் உணவு சந்தையோடு பதிக்கபட்டவர்கள் தொடர்பு என்றே அறிவித்தது அப்பொழுது கூட அது மனிதரிடம் இருந்து மனிதருக்கு தொற்று ஏற்படுத்தும் என்பதை மூடி மறைத்தது.

ஜனவரி 13டூ 20

    சீனாவை தாண்டி முதல் முறையாக தாய்லாந்தில் கொரனா பாதிப்பு ஏற்பட அதோடு ஜப்பானில் கொரனா தொற்று ஏற்பட்ட பின்னரே சீனா ஜனவரி 20 இல் ஒப்பு கொண்டது. இந்நோய் மனிதரிடம் இருந்து மனிதருக்கு தொற்று ஏற்படுத்தும் என்றே.

          அதற்குள் அமெரிக்கா ஜப்பான் தாய்லாந்து இந்தியா ஸ்பெயின் என்றே மக்கள் பரவி நோயும் பரவியது அறிந்து கொண்டார்கள். சீனா வேண்டும்இன்றே செய்த சதியா அல்லது கடல் உணவு சந்தையில் இருந்து இந்நோய் பரவியாதா என்றே பெரிய கேள்வி எழும்பியது. 

    வசீகரன் உடல் சற்றே சுகம் இன்றி போக சற்றே சோர்வு அடைந்தான். அவன் நல்ல நேராமா? அல்லது உணவே மருந்து என்றே கோட்பாடுகளை கொண்ட தாய் கிடைத்த பாக்கியமா? அமுதவள்ளி மிளகு ரசம் சுக்கு கஷாயம் என்றே இஞ்சி துவையலும் அரிசி கஞ்சி என்றே கொடுக்க நாள் பட நாள் பட சற்று முன்னேற்றம் அடைந்தான். 

         இங்கு மூர்த்தி மகள் சோறு அதிகம் கிடைக்க பெறாத நிலையில் வறுமையில் அவர்களும் மிளகு ரசம் சுக்கு தண்ணீர் என்றே ஆகாரமாக போக அவளுமே தேறினாள். 

         ஆனால் மற்ற எண்ணிக்கை கொண்ட வல்லரசு நாட்டில் கிடுகிடுவென மரணங்கள் ஏறியது. 

        ஏன் இந்தியாவிலும் அதிகபடியாக ஏறியது. 

         உயிர்கள் எண்ணிக்கை கூடும் அளவின் பொறுத்து பயமும் அதிகரித்தது. 

  வாரங்கள்.. மாதங்கள் என்றே கடக்க இந்தியாவில் மார்ச் முதல் தான் 144 தடை போட்டு நோய் பரவலை தடுக்க முயன்றனர். 

       முதலில் ஒரு வாரம் என்றே ஆரம்பித்த 144 கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிபிக்க முதலில் சந்தோஷமாக கல்லூரி கல்வி பணியிடம் செல்லாமல் வீட்டிலே இருக்க மக்களுக்கு ஆனந்தமாக தான் இருந்தது.  

          கையிலே உலகமாக அலைபேசி மடிக்கணினி என்றே இருக்க நாட்கள் கொஞ்சம் எளிதாக நிம்மதியாக தான் சென்றன. 

       சிறுக சிறுக சேர்த்த பணம் வைத்து உட்கார்ந்து சாப்பிட இயலுமா? அதுவும் ராசாத்தி போன்ற 100 நாள் வேலை பார்க்கும் தினசரி பணிக்கான கூலி பெற்று வாழும் குடும்பங்கள் சற்றே பாதிக்கபட்டது. 

           வறுமைகள் ஒரு பக்கம் வாழ்வாதாரம் ஒரு பக்கம் நடுதர மக்கள் என்ன செய்வது? அதை விட அதற்கு கீழ் இருக்கும் பிரிவுகள்..? தினசரி நடபாதையில் இருக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும்? 

       பணமிருக்கும் மனிதருக்கும் கொரனா பணம் அற்றவனுக்கும் கொரனா என்றே நோய்கள் மட்டும் பாகுபாடியின்றி பழகியது. 

         சிலருடன் இந்த கொரனா நட்பில் இணைந்து அவர்களை ஆட்கொண்டு ஆளையே கொண்றது.

         வயதின் முதிர்வுக்கு கொரனா எளிதில் நுழைந்து போக மறுத்து விட வயோதிகம் கொண்டவர்கள் பலி எண்ணிக்கை கூடியது. 

      சாதாரணமாக 50, 100 என்றே எண்ணிக்கைகே அச்சம் பரவ தான் செய்தது.     

         வசீகரன் எங்கும் செல்ல இயலாத நிலை நாயகி சைதன்யாவோ மருத்துத்துறை அவன் மனமோ தொலைகாட்சியில் காட்டும் மரண எண்ணிக்கையை பார்க்க பார்க்க தன்னவளுக்கு என்ன ஆகுமோ என்றே பயத்தில் மிதந்தான். 

   இரு சக்கர வாகனத்தில் தடை செய்து அபராதம் அளிக்க காவல் துறையில் ஏக கெடுபிடிகள் நடந்தன. மக்கள் அதிகம் நடமாட கூடாது தானே? 

      வசீகரன் கேட்டால் தானே? தன்னவளை பார்க்க போக காவல் துறைக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் தந்து அந்த இடம் நோக்கி செல்ல சைதன்யா வசீகரனை கண்டால் மணக்க எண்ணியவள் ஏனோ தனக்கு தாக்கிருக்கும் வைரஸ் பாதிப்பில் மறுக்க இம்முறை அவளின் கண்கள் காதல் இருக்க வேண்டுமென்றே அவள் மறுப்பது அறிந்து தான் காத்திருப்பதாக அறிந்து

      ''நீ எப்ப வந்தாலும் என் வீட்டு கதவுதிறந்து இருக்கும் சது'' என்றே கிளம்பி இருந்தான்.

         சைதன்யா மனமோ இவனுக்கு என்னவென்று கூற விரும்பி சென்ற கணம் விலகி போனான். இப்ப விரும்பி வருகின்றான் ஆனா விலகி போகும் சூழல் எனக்கு... என்றே கண்ணீரோட தனக்கு வழங்கப்பட்ட பணியினை தொடர்ந்தாள். 

        மருத்துவருக்கு போதிய அளவு பாதுகாப்பான கவசம் வழங்க வேண்டும் ஆனால் நம் நாட்டில் அதற்கான வசதிகள் எல்லாருக்கு கிடைக்கவா செய்கின்றது. 

       மனநிறைவோடு அக்கட்டிடம் சென்றாள் அங்கு தான் அவசர பிரிவில் கொரனா நோயாளிகள் வரிசை இருக்க முகமும் கையுரையும் அணிந்து தனது பணியினை காக்க சென்றாள் வசீயின் சது.

     நிற்க நேரமில்லை ஓடிக்கொண்டே இருந்தவள் உறங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சோர்ந்தாள்

           பத்திரிகை திறந்தால் அதே செய்தி சாலையில் வெள்ளமே காணும் மக்கள் இல்லாது என்னவோ போலக இருக்க எங்கும் ஏதோ ஒரு வித புது உலகுக்கு சென்ற பிரம்மை. நாய்கள் எல்லாம் மனிதர்கள் கண்டு வீசித்திரமாக பார்த்தது. 

       முகம் அணிந்து வேற்று கிரகத்தில் சென்ற உணர்வு வெளியே சென்றாளே... அதிலும் தொலைக்காட்சி பேட்டியில என்னவோ தினமும் 100 என்றதே இல்லாமல் ஆயிரம் தாண்டி லட்சம் என்றே செல்ல செல்ல விளையாட்டாய் எண்ணிய விடுமுறை ஏனோ இம்முறை என்று இந்நிலை மாறும் என்றே எண்ணி வருந்தியது. 

          தினசரி நேரதிற்கு வெளியே செல்வது முதல் படிப்பு கூட கணினி வழியாக வந்திட இந்நிலை தான் நீடிக்குமா? என்றே அச்சம் மனதில் பேரலையாக உருவம் எடுத்தது. 

           அன்று சது வீட்டிற்கு செல்ல அங்கே அவளின் வீட்டுக்கு வெளியே பூட்டு தொங்கியது. அன்னையிடம் கேட்க 'மருத்துவருக்கு வீடு கொடுப்பதில்லை' என்ற புது பூகம்பதினை சத்தமே இல்லாமல் இறக்கினார்கள். எங்கு திரும்பினாலும் இதே நிலை. தந்தை இல்லா தனக்கு தாய் மட்டுமே இருக்க இன்று தானும் தாயும் தனிமரமாக.. மருத்துவர் என்ற பாந்தமான பணி இருந்தும் ஏனோ இன்று தனக்கு இந்த நிலை என்றே கண்ணீர் உகுத்தினாள். 

         தனது தோழி சாரதாவிடம் சொல்லி இன்று தங்க இடம் எங்கேனும் கேட்க? அவளோ பதினைந்து நிமிடத்தில் ஆள் வரும்' என்றே தூண்டித்தாள்.       

        பத்தே நிமிடத்தில் வசீ வந்து சேர்ந்தான். சதுவை கண்டு ''காரில் ஏறு சது.'' என்றே கட்டளையிட்டவன் ''அத்தை அவ அப்படி தான் வரமாட்டா நீங்க ஏறுங்க'' என்றே உரிமையோடு பேசிட மகள் அமைதியில் தாய் திலகா 

     ''அது இல்லை தம்பி.. சது?'' என்றே எடுத்துரைக்க

     ''அத்தை நீங்க ஏறுங்க அவள் ஏறுவா ஏறாம போகட்டும் நானே போயி தூக்கிட்டு வர்றேன்'' என்றதும் சது முறைக்க அவனோ எனக்கு என்ன முறைத்து கொள் என்றே அமர்ந்து இருந்தான். 

       எவ்வளவு நேரம் தாயை பனியில் நிற்க வைக்க என்றே வசீ காரில் ஏற திலகாவும் ஏறிட வசீ மகிழ்ந்து காரினை தனது இடம் நோக்கி சென்று கொண்டு இருந்தான். 

          வீட்டுக்கு வந்து முடிக்க அமுதவள்ளி வாசலில் ஆலம் கரைத்து அழைக்க தயங்கியே சது உள்ளே வந்து நின்றாள். 

        வெந்நீரில் உப்பு மஞ்சள் டெட்டால் எல்லாம் கலந்து குளிக்க வைத்து அமுதவள்ளி தனது கணவர் விக்னேஸ்வரிடம் சைதன்யா மட்டும் திலகவதியை அறிமுகம் செய்து வைத்தார். 

           விக்னேஷ்வர் மறைத்து பேசும் பழக்கம் இல்லாதவர் அடுத்த முகூர்த்ததில் மகனுக்கு திருமணம் பற்றி பேச சது பதில் தர இயலாது வசீயை காண அவனோ கண் சிமிட்டும் சூரியானக பிரகாசத்தோடு காட்சி அளிக்க திலகா மகள் அமைதியில் உங்க இஷ்டம் என்றதை தாண்டி பேசவில்லை. அமுதவள்ளி பேசவும் விட வில்லை.

         தனக்கான அறையில் திலகா உறங்க இங்கு சது அறைவாசலில் வசீ நின்றான். 

      ''என்ன யோசிக்கிற இவன் அவனா வந்து நம்மளை வேணாம் சொன்னவன் திரும்ப நம்பலை தேடி வந்து இருக்கான். பச்சோந்தி மாதிரி மாறிடறேன் தோனுதா?'' என்றே கேட்டு அருகே வர 

     ''வசீ... உன்னை அப்படி நினைத்தேன் தான். ஆனா என் மனசில் நீ தான் இருக்க அதனால தான் நீ ஏறு சொன்னதும் ஏறிட்டேன். ஆனா என் ஃபீல்ட்ல இப்ப இருக்கற சூழ்நிலை சரியில்லை எத்தனை மரணம் தெரியுமா?''

      ''சது நான் டிவி பார்க்காத குழந்தை இல்லை லட்சம் கணக்கில் மரணம் அமெரிக்கவுல பிணங்களை புதைக்க தான் இடம் இல்லாமல் அவஸ்தை நம்ம நாட்டில் கூட.. இறந்தவங்களுக்கு புதைக்க இடம் இல்லை தெரியும்.. அதுக்காக மனிதாபிமானம் அழியலை சது. 

       இன்னிக்கும் நாலு தெருவுக்கு ஒரு தெருவில் கபசுபநீர் தந்து மனிதம் சாகலை புரிய வைக்கின்றாங்க... மனிதருக்கு மனிதர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யறாங்க... மனித நேயம் வளருது.. எத்தனை வைரஸ் இருந்தாலும் கடைசியில் ஒரு இடத்தில் தேங்குறோம்.'' 

      ''நான் சொல்றது உனக்கு புரியலை வசீ.. எல்லா கெட்டதிலும் ஒரு நன்மை இருக்கு தான். ஆனா என்னால உனக்கு ஏதாவது என்றால் வேண்டாம் வசீ நான் நாளைக்கே வேற இடம் சென்றிடுறேன்.'' என்றதும் கோவமாக சென்றான்.     

            சொல்லி விட்டாளே தவிர உறக்கம் தொலைந்து தான் போனது.

             அடுத்த நாள் கண்ணுக்கு காணாமல் கண்ணாமூச்சி காட்டினான் வசீ. சது மருத்துவமனை சென்றாலும் அருகே இருக்கும் எங்கேனும் வீடு கிடைகின்றதா என்ற தேட சாதாரண கால கட்டதிலே கிடைக்காத சூழல் இது போன்ற சூழலில் கிடைக்குமா என்ன? அவள் சோழிய கெடு தாண்டி இரண்டு நாள் இருக்க அமுதா விக்னேஸ்வர் எல்லாம் அதை பற்றி கேட்டது போல தோன்றவில்லை. வசீ மட்டும் கண்ணுக்கு மறைவாக ஒதுங்கி கொண்டான். 

     தாய் திலகா கூட அவனிடம் பேசுவதை திலகா பேச்சில் உணர முடிந்தது.  

            அன்று காலையிலே வீட்டுக்கு சிலர் வந்து சேர குழம்பி போக திலகா தனது மகளிடம் அழைத்து செல்ல அமுதவள்ளி பட்டு சேலை கொடுத்து கட்ட சொல்ல குழம்பினாலும் கட்டி கொண்டாள். 

            அவளை போல வசீ பட்டு வேஷ்டி அணிந்து வர தான் நிலமை உணர செய்தாள். 

        அங்கு நடக்கும் நிகழ்வுக்கு பொறுமையாக உடன் பட்டாள். 

            தி கிரேட் வசீகரன் திருமணம் மிக எளிமையாக டாக்டர் சைதன்யாவுடன் பத்து பேர் தலைமையில் நடந்தேறியது. 

        இன்னமும் நம்பாத பார்வையை சது பார்க்க வசீயோ அவளை முறைத்தவண்ணம் ''எந்த வைரசும் இந்த உலகதில்(மேதினி) வரட்டும் ஆனா என்னோட உலகம் உதயமாகும்'' என்றான்.     

            காலங்களில் இன்னும் அந்த கோவிட்-19 போகாமலும் இருக்கலாம் ஆனால் மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டே இம்மேதினி உதயம் செயல் பட்டு கொண்டு தான் உள்ளது.

                                                       -முற்றும்- 


                                            - பிரவீணா தங்கராஜ்..

      






தீவிகை அவள் வரையனல் அவன்- 1

                        

     

   

     தீவிகை அவள் வரையனல் அவன் 

🪔 தீவிகை🔥 வரையனல் -1

         ரிசப்ஷன் பெண்ணிடம் தனது கார்டை கொடுத்து காத்திருந்தான் ஆரவ்.

    "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்றவள் அமர இருக்கும் அறையை சுட்டி காட்டி போனை எடுத்து, பேச ஆரம்பித்தாள்.

     ஆரவிற்கு பொறுமை என்பதே குறைவு அதிலும் வேண்டுமென்றே சீண்டப்படும் பொறுமையை உடனே கலந்து செல்வது அவன் சுபாவம்.

     ஆனால் தற்போது இந்த பணிக்கு பின் இருக்கும் சிலரின் நம்பிக்கைகாக காத்திருக்க துவங்கினான்.

     ஆம், அவனுக்கு பின்னால் இருக்கும் தொழிலாளருக்காக தனது சுபாவத்தை கொஞ்சமே தளர்த்தி உள்ளான்.

     ரிசப்ஷன் பெண் அமர சொன்ன இடத்தில் வந்தமர்ந்தான் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் காலை போட்டு இடங்களை அலசினான்.

     நல்ல கலை ரசனை காத்திருப்போர் நேரம் கலைரசனையாக மனம் மாறவே பிரபல ஓவியத்தினை பார்வைக்கு வைத்திருப்பார்கள் போல.

    ஆரவ் ஆறடி ஆண்மகன். முகம் அழுத்ததுடன் இருக்கும். அவன் முடிவுகளை போலவே. ஆனாலும் அம்முகத்தில் ஈர்க்கும் சக்தி உண்டு. கண்கள் செந்தணலாக காட்சியளித்து சினத்தை பிரதிபலித்தாலும் நங்கை மனம் அவனின் வதனத்தை தாங்கி தான் கண் பதிக்க முடியும். அத்தகைய வசீகரம். ஆளுமை...

   யாரின் பேச்சை கேட்டு முடிவெடுப்பவன் அல்ல. கண்ணால் கண்டு செவியால்  கேட்டு உண்மை உணர்ந்து ஆராய்பவன். அன்பை கடல் அளவு காட்டுவதில் இருக்கும் அதே சுபாவம். பிடிக்கவில்லை என்றால் அதை விட அதிகமாகவே வெறுப்பை வெளிப்படுத்துவான்.

      இந்த இடத்து முதலாளிக்கு இரசனை தான் என்றவன் மனம் முதலாளி என்றதும் அதில் சுணக்கம் உண்டானது. சே... இந்த முதலாளி என்றாலே இப்படி தானா? காத்திருக்க வைப்பதற்கே பிறந்தவர்கள். ஏன் சக மனிதன் காத்திருக்க வைக்க அப்படி ஆனந்தமோ என்றவன் கண்கள் எரிச்சலை அடக்கிக் கொண்டது.

    இந்த டீல் கிடைத்தால் அரசு கான்டிராக்ட் கிடைத்ததற்கு சமம். ஆர்வம் மேலோங்க நேரத்தை பார்த்தான். வந்து ஒரு மணி நேரம் தாண்டி விட்டது. இவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பார்களா?

     மணி இன்னும் பத்து நிமிடம் பார்ப்போம் அப்படியும் அழைக்கவில்லை என்றால் இந்த டீலை நானே வேண்டாமென்று சென்று விட வேண்டும். என்னதான் மற்றவருக்காக என்றாலும் ஒரு மணி நேரம் போதும் என் குணத்தை பிடித்து நிறுத்த. அதற்கு மேல் காத்திருக்க இந்த ஆரவ்வால் இயலாதவொன்று.

      இப்படி ஆரவ் எண்ணிக் கொண்டு இருக்க அவனின் அலைப்பேசி அழைத்தது. அதில் அன்னை சுபாங்கினி தான்.

     தொடுதிரையை நகர்த்தி, "சொல்லுங்கமா?" என்றான்.

     "என்னடா சொல்ல...? எல்லாரும் பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு பக்கத்தில வந்துட்டோம். நீ இன்னமும் வரலை. காலையில் என்ன சொன்ன? அம்மா நீங்க போங்க டான்னு நாலு மணிக்கு அந்த ஏரியா பழமுதிர் சோலை கடைக்கு முன்ன வந்து நிற்பேனென்று சொன்னியா இல்லையா. அக்காவுக்கு வாட்ஸப்ல இன்னமும் அந்த மேனஜர் பார்த்து பேசவே இல்லையென்று அனுப்பி இருக்க, இங்க பாரு ஆரவ் திருமணம் வேண்டாம் அது இது என்று திரும்ப ஆரம்பித்த என்னை உயிரோட பார்க்க முடியாது." என்று எமோஷனலாக பிளாக் மெயில் செய்ய,

     "அம்மா... நான் பெண்ணை கூட பார்க்க தேவையில்லை. நீ பார்த்தா போதும். தாலி கட்டறது என் பொறுப்பு. திருமணம் வேண்டாமென்று சத்தியமா சொல்ல மாட்டேன் போதுமா. தாராளமா பெண் பாருங்க. பிடிச்சிருந்தா தட்டை மாற்றி நாள் குறியுங்கள்.

இந்த எமோஷனல் பிளாக் மெயில் எல்லாம் கேட்டு நான் பயப்படற ஆளா... எனக்கு பிடிக்கலை என்றால் தரகரை வீட்ல காலெடுத்து வைக்க விடுவேனா. 

நான் மாற மாட்டேன். பெண்ணை நீங்களே முடிவு பண்ணுங்க. என்னை கேட்டா என் சிட்டுவேஷனை சொல்லுங்க."

     "சரி ஆரவ். நாங்க அப்ப பெண் வீட்டுக்கு போறோம். நல்லதா முடிச்சிட்டு போன் போடறேன்." என்று சுபாங்கினி தன் மகளிடம்,

    "வைஷ்ணவி... என் பையன் பேசியது கேட்டிச்சா. பொண்ணு வீட்டுக்கு போகலாம்." என்று கர்வமாக மொழிந்தார் தன் மகளிடம்.

     ஆரவ் போனை எடுத்து வைத்து நிமிர, "மேம் உங்களை வர சொன்னாங்க சார்" என்றாள் ரிசப்ஷன் பணிப்பெண்.

   "என்ன மேம்மா?" ஆரவிற்கு வியப்பாக அமைந்து.

    "ஆமா சார்." என்று கதவை சுட்டி காட்டி அவளிடம் சென்று அமர்ந்தாள். 
   
    பணிப்பெண் போனை எடுத்து பேச ஆரம்பிக்க, ஆரவ் வியப்பில் இருந்து கலைந்தவன் சாதரணமாக மாறினான். இந்த காலத்தில் பெண் விமானம் ஓட்டுகின்றாள். ஏவுகணை விடுத்து விண்ணிற்கு பறக்கின்றாள். அப்படியிருக்க கட்டிட பிரிவில் இருப்பது அப்படி என்ன அதிசயம் என்று நடந்தான்.

    கதவை திறக்க ஏசி அறைக்குள் சில்லென்ற இதம் அதிகமாகவே இருந்தது. 

     உள்ளே வந்தவன் திரும்பி இருந்த அந்த பாவையின் முகம் காண்பதற்குள் அங்கிருந்த பெயர்பலகையை கண்டான்.

     'மிஸ். சம்யுக்தா சுவாமிநாதன் என்று பளீர் எழுத்துக்கு பின் படிப்பை வரிசைப்படுத்தி இருந்ததை பார்த்ததும், அதே நொடி சம்யுக்தா திரும்பவும் சரியாய் இருந்தது.

     "டேக் யுவர் சீட் மிஸ்டர் ஆரவ் தருணேஷ் . சாரி... உங்களை அதிக நேரம் காத்திருக்க வைத்துட்டேன்" என்று பேசவும் அவனோ,

      "இது எப்பவும் நடப்பது தானே... முதலாளிகள் தனக்கு கீழே இருப்பவங்களை காத்திருக்க வைப்பது." என்று இந்நேரம் வரை காத்திருக்க வைத்ததற்கு குட்டு வைத்தே பதில் தந்தான்.

      ஆரவ் உங்க மாடல் பார்க்கலாமா என்று கேட்டதும் தனது லேப்டாப் மூலமாக அதனை புரஜக்டர் கனெக்ட் செய்து காட்டினான்.

      விளக்கமும் அளித்தான். சம்யுக்தா தனது பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே, ஓகே ஆரவ் யோசித்து எங்க கம்பெனிக்கு செட்டானா ஒப்பந்த கடிதம் அனுப்பறோம். யூ கேன் கோ நௌ" என்று கணிப்பொறி திரையில் பணியை மேற்கொள்ள ஆரவிற்கு அது எரிச்சலை தர எழுந்து வெளியேறினான்.

   அவன் எழுந்த கணமே நாற்காலி இரண்டாடி பின் நகர்ந்து அவன் சினத்தை மொழிந்து விட்டே சென்றது. அதை சம்யுக்யா பெரிதாக எண்ணவில்லை.

     டையை மெல்ல தளர்த்தி லிப்டில் இறங்கியவனின் சினமோ மேலேறி கொண்டு இருந்தது.

    கூடுதல் நேரம் அங்கே இருந்து இருந்தால் சம்யுக்யாவை அறைந்து இருந்தாலும் ஆச்சரியப் படுவதில்லை. திமிர் உடம்பெல்லாம் திமிர் என்றது அவனின் அழுத்தமான உதடுகள்.

       இன்றே ஒப்பந்தமாகி அதை நாளை பணியாட்களோடு பகிர்ந்து மகிழ்வை காண தான் தனக்கு பெண் பார்க்கும் படலத்திற்கு கூட போகாமல் இங்கு வந்தது.

    ஏமாற்றம்.... கடலை நோக்கி பயணிக்க வைக்க சாந்தோம் சர்ச் அருகே இருக்கும் பார்க்கிங் செய்துவிட்டு கடலை நோக்கி நடந்தான்.

      ஆரவ் கைகள் மணலில் தன் கரங்களால் குத்தி சினத்தை தணிக்க சில நேரம் கழிந்து, மணலில் சின்னதாய் ஒரு வீட்டை கட்டி முடித்தான்.

      எப்பொழுதும் இது நடக்கும். மணலில் கை சென்றாலே ஆரவ் மணல்வீட்டை கட்டி விடுவான். இன்றும் கட்டிவிட்டு தன் போனில் அதனை படம் பிடிக்கும் சமயம் எங்கிருந்தோ வந்த பந்து அவ்வீட்டை கலைத்தது.

   பந்து வந்த திக்கை பார்க்க அங்கே ஒரு சிறுமி ஆரவின் செந்தணல் கண்களை கண்டு அஞ்சி பயந்து பிஞ்சு கரத்தால் முகத்தை மூடி தன் கையின் இடுக்கு பகுதியில் அவனை கண்டது.

    கடலில் தனது பிம்பத்தை மறைக்கும் அந்த செவ்வானம் போல இருந்த ஆரவ் தன்னை கண்டு அஞ்சும் அந்த சிறுமியை அழைத்து பந்தை கையில் கொடுத்தான்.

    "சாரி அங்கிள்" என்று கையை பிடித்து அச்சிறுமி உரைக்கவும், மண்டியிட்டு, "இட்ஸ் ஓகே மா" என்றவன் உதடு சின்னதாய் முறுவல் தர அதில் அவன் அன்பு மனம் கண்டு விட்டாலோ என்னவோ சிறுமி அச்சமின்றி வண்ணத்துப்பூச்சியாய் பறந்தோடினாள்.

     நேரமாக வீட்டுக்கு புறப்பட்டான்.

      கதவை திறந்து அவன் பாட்டிற்கு அறைக்கு செல்ல முயன்றவனை,

   "நில்லுடா... என்ன ஏது என்று கேட்காம போனா என்ன அர்த்தம்? வைஷ்னவி சொன்னது போல தான் நடந்துக்கற?" என்று சுபாங்கினி பேசவும் புரியாது விழித்தான். அதற்கு பிறகு பெண் பார்க்கும் படலம் சென்றார்களே என்ற நினைவு வரவும்.

      "உப்ஸ் சாரி மா. என்ன பதில்... நான் வரலை என்று ஏதாவது பேசிட்டாங்களா." என்றான்.

     "ஒன்றுமில்லை.. உன்னை போட்டோவில் பிடித்து விட்டது. என்ன நாங்களும் பெண்ணை பார்க்க முடியலை. போட்டோவில் தான் பார்த்தோம். அவள் அலுவலகத்திலும் திடீரென இருக்க வேண்டிய சூழ்நிலை என்று போன் செய்து எங்களிடம் மன்னிப்பு கேட்ணு பேசினா. போட்டோ மட்டும் அம்மாவிடம் கொடுங்க பார்த்துக் கொள்ளறேன். மற்றபடி பெற்றோருக்கு சரியென்றால் நமக்கு பிடித்திருந்தா தட்டை மாற்ற சொல்லிட்டா. போட்டோவில் நல்லா தான் இருந்தா"

     "அய்யோ அம்மா இப்படி சொன்னா எப்படி அவனுக்கு பெண்ணோட புகைப்படம் காட்டுங்க"   என்று ஷிவானி கூறவும் சுபாங்கினி ஒரு கவரை எடுத்து கொடுத்தாள்.

    "போ... அறைக்கு சென்று நிதானமா பாரு. நாளைக்கு தான் முடிவு சம்மதமா வேண்டாமா சொல்வதா நேரம் கேட்டு வந்து இருக்கோம்" என்றதும் வாங்கி கொண்டு வந்தான்.

        தனதறைக்கு வந்ததும் அதனை தூக்கி ஏறிந்தான். அவள் மேல் இருக்கும் சினம் அன்னையிடம் காட்டுவதா? ஏற்கனவே பட்டவை வடுவாக இருக்கும் பொழுது என்றவன் மனம் குமைந்தது.

     குளித்து முடித்து வந்தவன் தூர எறிந்த கவரை எரித்து பார்க்க, அதனை பார்க்க விரும்பாதவனாக கல்லாக இருந்தான்.

     ஆனால் அந்த கவர் கல் இல்லையே சாதரண பேப்பர் அல்லவா. பேனின் ஓட்டத்திற்கு பறக்க செய்து அவனின் கால் அருகே வந்து தஞ்சமடைந்தது. காலால் அதனை தள்ளி விட்டு பெருமூச்சொன்றை வெளியிட்டு திரும்பி பார்க்க மீண்டும் அவனின் காலில் வந்து படபடத்தது.

    வேண்டாவெறுப்பாக எடுத்து எரிய செல்ல அதுவோ வாய் திறந்து புகைப்படத்தை அவன் அருகே விழ வைத்து விட, தலைக்கீழான பிம்பத்தை தாங்கிய அப்புகைப்படம் எடுத்து திருப்பினான். 

    இது... இது அவள் தானே? என்றவன் மனம் அன்னை சொன்ன பெண்ணும் அலுவலகத்திலே எதிர்பார பணி காரணமாக வர இயலாத சூழ்நிலை காதில் மீண்டும் எதிரொலிக்க போட்டோவை பார்த்தான்.

     அழகான மங்கை தான். நிச்சயம் ஓப்புக் கொள்ள வேண்டும். ஆனால் ஆர்வ போன்றவனின் மனதில் அப்படி ஓன்றும் அதிர்வை உண்டாகிட வில்லை. ஏனென்றால் அப்பெண்ணின் செயலால் இருக்கலாம்.

     தூக்கி விட்டறிந்தான். அவனின் அலங்கார கண்ணாடி மேஜையில் சென்று விழுந்தன அப்புகைப்படம்.
    
       கதவு தட்டும் சத்தம் வர அன்னையாக தான் இருக்கும் என்று மனதில் திருமணத்தை பற்றிய முடிவில் பதிலுரைக்க வேண்டுமே என்று அலுத்துக் கொண்டு திறந்தான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்


பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...