மும்மதம்

மசூதி அருகே இருக்கும்
அன்வர்பாய் கடையில்
கறியை கவ்விய
காக்கையொன்று
பெருமாள் கோவில் கோபுரத்தில்
உண்டு முடித்து
தேவாலயத்தின் மணிக்கூண்டில்
இளைப்பாறி
ஏழையொருவன் கூரை வீட்டின்
அருகே உள்ள அதன் மரக்கூட்டிற்கு
சென்றே விட்டது .
அதனிடம் யார் சொல்வது
மும்மதத்தினையும்
கலந்தே விட்டாயென்று...!
                -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1