ஸ்டாபெர்ரி பெண்ணே -5

 🍓5  
           அடுத்த நாள் காலை மணி பதினொன்று காட்டும் வரை வெற்றி எழுந்து வரவே இல்லை. ஆராதனா மட்டும் எழுந்து குளித்து தோட்டத்தில் நகர் வலம் புரிந்து சாப்பிட்டு என்றே இருக்க அவனின் கதவு திறக்கவே இல்லை. பணியாட்கள் கூட அவனை எழுப்ப சென்றதாகவும் இல்லை. மணி 11:30 ஆனதும் லேண்ட் லைன் போன் அலறியது. எல்லோரும் பார்த்து மீண்டும் தனது பணிகளை தொடர ஆராதனாவுக்கு தான் ஒரு ஆர்வக்கோளாறில் போனை எடுத்தாள்.
      ''பாஸ்.. ஹலோ பாஸ்'' என்றே ஒரு ஆணின் குரல் கேட்க திருதிருவென முழித்தவள்
        ''சாரி இங்க கொள்ளை கூட்ட தலைவன் பாஸ் யாரும் இல்லை இது வெற்றி செல்வன் வீடு உங்களுக்கு யார் வேணும்'' என்றே ஆராதனா சொல்ல
      ''மேடம்.... நீங்களா?''
      ''சாரி மேடம்.. பாஸ் நம்பர் போன் செய்தேன் எடுக்கலை... ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று பாஸ் நாலு நாள் ஆபிஸ் வரலை... அதனால இன்னிக்கு கூப்பிடலாம் என்றே போன் செய்தேன்'' என்றே சொல்ல மேலே மாடியை பார்த்து முடித்தாள். 
      ''அவர் இன்னும் ரூமை விட்டு வெளியே வரலை... தூங்கறாரோ என்னவோ தெரிலை... லட்சுமி அம்மா கதவை தட்டியும் எழும்பலை திரும்ப வந்துட்டாங்க''
       ''ஓஹ் பாஸ் நீங்க ஹாஸ்பிடலில் இருந்த வரை கொஞ்ச நேரம் கூட தூங்கலை அதனால இன்னிக்கு தான் நிம்மதியா தூங்கறார் போல சரி மேடம் எழுந்ததும் அவரே கால் செய்வர் வைக்கிறேன்'' என்றவனை
      ''ஹலோ ஹலோ... நீங்க யாரு என்னை உங்களுக்கு தெரியுமா?'
      ''நல்லாவே தெரியும் மேடம்... நான் சுந்தர் பாஸ் பி.ஏ....''
      ''ஓஹ் அவர் காலையில் இருந்து சாப்பிடலை... எப்போ எழுந்துப்பார்?''
      ''மேடம் நீங்க போய் எழுப்புங்க'' என்றான் மெதுவாக சிரித்து கொண்டு,       ''ஐயோ எல்லோரும் அவர் திட்டுவார் என்றே சொல்றாங்க''
      ''மேடம் நீங்க போய் எழுப்புங்க ஒன்னும் சொல்ல மாட்டார் நான் கேரண்டி.. வைக்கிறேன் மேடம் ''என்றே வைக்க சரி என்றே வைத்து நிமிர்ந்தாள்.
              அவனின் அறையை பார்த்து கொண்டே மேலே நடந்தாள். கதவை தட்டிட முன்பு போலவே அமைதியை தர கொஞ்சம் அழுத்தி திறக்க கதவு திறந்தன. உள்ளே நுழைந்தவள் கண்ணில் படும் இடமெல்லாம் ஆராதனா புகைப்படமே இருக்க சுற்றி கண்களை நம்பாமல் அவனின் அருகே வந்து தொட்டாள்.
             அவளின் தொடுதல் ஒன்றே வெற்றிக்கு போதுமானதாக தோன்ற விருடென்று எழுந்தான்.
      ''சாரி மணி பனிரெண்டு ஆகா போகுது நீங்க எழுந்துக்கலை... அதான்'' என்றே அவனின் வேகதில் பயந்து சொன்னாள்.
      ''மூணு நாளா தூங்கலை ஜெஸில் அதனால ரொம்ப நேரம் தூங்கிட்டேன்'' என்றே எழுந்தவன் அப்பொழுது தான் சுற்றிலும் அவளின் புகைப்படம் இருக்கு என்ன கேட்க போறாளோ என்றே முழிக்க வேகமாக கேள்வி கேட்கும் முன் அவன் பாத் ரூம் புகுந்தான். ஒவ்வொரு போட்டோவிலும் அணிந்து இருக்கும் ஆடை முதல் அவள் கையில் அணிந்து இருக்கும் கடிகாரம் வரை எதையோ நினைவு படுத்தியது. எல்லாமே பார்த்த நினைவு தான். அதனால் அவள் வெளியேறாமல் அப்படியே அங்கயே இருந்தாள். ஜன்னல் திரையில் கூட பழகிய அனுபவம் தோன்றியது.
             குளித்து முடித்து ஈரத்தலையோட எட்டி பார்த்தவன் அவளின் புகைப்படத்தில் இருக்கும் கண்கள் திசை திரும்பாமல் இருக்க குளியல் அறைக்குள்  உள்ளுக்குள்ளே  டிரஸ் ஷார்ட்ஸ் டீஷர்ட் அணிந்து வந்தான்.          ''என்ன பார்க்குற? இந்த ரூம் நீ முன்ன இருந்த அறை அதனால் தான் உன் போட்டோ எல்லாம் இங்க இருக்கு... டாக்டர் தான் தனியா விட கூடாது என்று சொன்னாங்க அதனால் தான் கீழே அறையை மாற்றினேன்'' என்றே சொல்ல
     ''ஓஹ் அதான் பழகிய இடம் மாதிரியே இல்லையே என்றே குழம்பி போனேன். இந்த ரூமில் கொஞ்சம் வாழ்ந்த உணர்வு தோணுது'' என்றே சொல்ல வெற்றி பார்வை அவளின் கண்களை தழுவியது. ஜெஸில் வாழ்ந்த உணர்வு இல்லை வாழ போற உணர்வு.... என்பதை நினைத்தான்.
      ''இந்த போட்டோஸ் கூட ஓரளவு பார்த்த மாதிரி இருக்கு... நான் இங்கயே இருக்கேனே?'' என்றே கேட்க வெற்றியோ சிரித்து கொண்டு
      ''இப்போ இது என்னோட ரூம் நீ இருக்க முடியாது ஜெஸில்...'' என்று முடிக்க
     ''அது யாரு சுந்தர்?'' என்றே கேட்டதும் வெற்றி முகத்தில் பயம் புக
      ''உனக்கு எப்படி சுந்தர்?''
      ''போன் செய்தார்.. நீங்க தூங்கறிங்க சொன்னேன். அவர் தான் உங்களை என்னை விட்டு எழும்ப சொன்னார். நான் எழுப்பினா நீங்க திட்ட மாட்டிங்களாம்... அப்படியா?'' என்றே ஆராதனா கண்களை உருட்டி கேட்க அந்த நிமிடம் அவளை அள்ளி அணைத்து ஆமாம் என்றே சொல்லிட நினைத்த உணர்வை கட்டுப்படுத்தி ஹ்ம்ம் என்றே சொல்லி கீழே இறங்கினான்.
       அவன் இறங்கியதும் அவளும் கூடவே வந்தாள். மதிய உணவு முடித்து வெளியேற போனவன்.
      ''ஜெஸில் கொஞ்ச நாள் இந்த வீட்டை விட்டு வெளியே போகாதே.... டாக்டர் சொல்லி இருக்காங்க. அதனால நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு... கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னை வெளி உலகத்துக்கு கூட்டிட்டு போறேன் அதுவரை வீட்டில் இரு எங்கயும் போகாதே ப்ளீஸ்'' என்றே சொல்ல சரி என்றே தலையாட்டினாள்.
                வெற்றி கார் ஏறி மறைந்தான். சே அவரின் ரூமுக்கு போகலாமா என்றே கேட்கவில்லையே? சரி இங்க சுற்றி பார்க்க முதலில் செய்வோம் அப்பறம் நாளைக்கு கேட்கலாம் என்றே அறைக்கு சென்றவள் விழுங்கிய மாத்திரையின் உதவியால் உறங்கினாள்.
      ''என்ன பாஸ் இன்னிக்கு தேவி தரிசனமா?'' முகமெங்கும் பிரகாசமா இருக்கீங்க'' என்றே சுந்தர் கேட்க
       ''உன் வேலையா சுந்தர்... அவளை என் ரூமுக்கு அனுப்பி இருக்க?''
      ''ஏன் பாஸ் உங்களுக்கு ஹாப்பி தானே?''
      ''சுந்தர் உண்மையை சொல்ல போனா அவளை இன்னிக்கு அணைச்சு இருப்பேன் அவள் முகம் அவளின் போட்டோவில் இருந்தது அதனால குழப்பத்தில் இருந்தா அதனால அவள் தான் வந்து இருக்கா என்றே உணர்ந்தேன். இல்லை கனவு என்று கட்டி புடிச்சு வேற ஏதாவது செய்து அவளிடம் கெட்ட பெயர் ஆகி இருக்கும்.....''
      ''பாஸ் இப்படி நீங்க ஹாப்பி யா இருங்க பாஸ்... அப்பறம் நாலு நாள் நீங்க அட்டேன் பண்ண முடியாம போன மீட்டிங் என்ன செய்ய?''
      ''அதெல்லாம் போஸ்ட் பண்ணிடு நீயே பார்த்துக்கோ... கொஞ்ச நாள் எதுவும் வேண்டாம்''
       ''பாஸ் அவங்களுக்கு எப்போ சொல்றதா இருக்கீங்க?''
      ''எப்பவும் சொல்ல போறது இல்லை சுந்தர். அவளுக்கு அடிபட்டதால் தாய்மை அடையும் பாக்கியம் இல்லை என்று உதய் போயிட்டான். நினைவு மறந்து போய்டுச்சு. அதனால அவளுக்கு சொல்லி கஷ்டப்படுத்தறதை விட விட்டுடலாம்... அவளுக்கே நினைவு வந்து கேட்டால் மறுக்க மாட்டேன். அப்போ உண்மை சொல்லிடறேன்...'' என்றே சொல்லி வேலையில் முழிக்கிட நடித்தான்.
         தனது ஆராதனா கற்பை இழந்தால் என்று சுந்தருக்கு கூட அவன் சொல்ல விரும்பவில்லை... டாக்டர் உதய் வெற்றி மூவருக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்றே அமைதியானான்.
           வீட்டுக்கு வந்த பொழுது சின் சான் பார்த்து சிரித்து கொண்டு  இருந்தவளை கண்டும் காணாதது போல அவனின் அறைக்கு சென்றான்.
        அவன் வந்து பார்க்கும் பொழுது சேனலை மாற்றி விட்டு ஒலியும் குறைத்தாள். அவளின் அறைக்கு சென்றவள் அவன் வரும் வரை மேலே எட்டி எட்டி பார்த்தாள்.
       இன்னிக்கு கேட்டுடனும் என்ன ஆனாலும் சரி மறக்க கூடாது ஜெஸி... என்றே தானே கூறி கொண்டாள்.
          உடை மாற்றி வந்தவன் மேலிருந்தே வரும் பொழுதே அவள் தன்னிடம் ஏதோ கேட்க போகின்றாள் என்றே புரிந்து கொண்டான்.
          'கடவுளே என்ன கேட்க போறாளோ?' என்ற கிலியுடன் தான் வந்து அமர்ந்தான் வெற்றி.
         பாதி சாப்பிட்டு முடிக்க சாப்பாட்டில் கோலம் போட்டு கொண்டு இருந்த ஆராதனாவை கண்டு
      ''இப்போ என்ன கோலம் போடற சாப்பாட்டில்....?'' என்றே வெற்றி கேட்டு முடிக்க
       ''அதில்லை உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்...'' என்றே இழுக்க
       ''கேளு...'' என்றே சாப்பாடு எடுத்து வாயில் வைக்க போக
       ''நீங்க எனக்கு அண்ணா வா இல்லை...''
       ''ஸ்டாப் இட்... அண்ணா இல்லை.. தம்பியும் இல்லை... என் அம்மா உனக்கு அத்தை போதுமா'' என்றே வேகமாக நீரை குடித்தான்.
      'உப்...' ஒரு நிமிஷத்தில் வயிற்றில் புளியை கரைச்சுட்டா என்றே நிமிர்ந்து கூட பார்க்காமல் விழுங்கினான்.
            அவளோ நல்ல வேளை இப்படி ஆளை அசரடிக்கற இவர் அண்ணா இல்லை என்று தெரிந்தது. இப்போ இவரை எப்படி கூப்பிட்றது? அவரின் அம்மா எனக்கு அத்தை என்றால்? அத்தானா? இல்லை மாமா? சே எப்படி தான் கூப்பிடறது என்றே சாப்பாட்டினை உதற
      ''சாப்பாட்டை உதற கூடாது ஜெஸில்....''
      ''மன்னிச்சுடுங்க... உங்களை எப்படி கூப்பிடறது... இல்லை எப்படி கூப்பிட்டேன்?'' என்றே கேட்க
       'ஓஹ் இதுக்கு தான் கேட்க செய்தாளா என்றே ஒரு புன்னகை உதிர்த்து
    ''வெற்றி செல்வன் என் பெயர்... எல்லோரும் வெற்றி என்றே கூப்பிடுவாங்க... உனக்கு எப்படி கூப்பிடணுமோ கூப்பிடு''
     ''வெற்றி எல்லோரும் கூப்பிடறாங்க செல்வன்... ஹ்ம்ம் செல்வா... ஓகே வா?'' என்றே கட்டை விரல் தம்ஸ் அப் செய்வது போல கேட்க
      ''ஹ்ம்ம் கூப்பிடு'' என்றே கை அலம்பி எழுந்தான்.
                  அவளும் கை அலம்பி எழுந்து அறைக்கு செல்ல போக அவனும் அறைக்கு சென்றான். தீடிரென ஆராதனா
      ''செல்வா... குட் நைட்'' என்றே சொல்லி அறைக்குள் ஓட வெற்றிக்கு தான் சொல்ல இயலாத சந்தோஷம் அடைந்தான்.
               அடிப்பாவி முன்ன விட இப்போ எல்லாம் அதிகமா ஷாக் கொடுக்கறாளே... என்றே மெத்தையில் விழுந்தான்.

-தொடரும் 

பிரவீணா தங்கராஜ்

Comments

  1. நீ கொடுக்க போகும் ஷாக்க விட கம்மி தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு