ஒரு குழந்தையின் வலி

காதல் பெரிதென
பெற்றோரை துறந்தாய் ....
போற்றிருப்பேன் .
கட்டிய கணவனை துறந்தாய் ...
விடு கழுதையென ,
தலை முழிகி இருப்பேன் .
முத்து போன்ற பிள்ளையை
துறந்த்தையே ...ஒப்பவில்லை .
அதனாலே ,
என் மனம்...
உன்னை தாயன்று ஒப்பவில்லை .
மாற்றாந்தாய் ... மறுதாயக ,
தந்தை மணம்மாற்றி அழைத்துவர ,
மறுகினேன் .
அரவணைக்க மறுத்ததால் ...
தாயென ஏற்க மறுத்துவிட்டது .
நித்திரையில் மடி சாய்ந்து ,
தாய் விரல் என் கேசம் கோதிடை,
தாய் தேடினேன் .
பருவம் வந்தது .
கொட்டும் மழையும் ,
குழந்தை சிரிப்பும் ,
அலை தொடும் தென்றலும்  ,
வரிகளை வடித்திடும் கவிகளையும் ,
காதல் கொன்டேன் .
கவியே ..!
எனக்கு கற்பனையை தர ,
எனக்கு பிடித்த விதத்தில்
தாயை படைத்திட்டேன் .
கற்பனை தாய் மடியில்,
அவள் விரல் என் கேசம் கோதிட ,
நிம்மதியான நித்திரை கிட்டியது .

                         -- பிரவீணா தங்கராஜ் .
  

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1