கண்ணாமூச்சி ஏனடா

ஒவ்வொரு முறையும்
கோகுலக் கண்ணனே
உன் பாதம் பதித்து
தான் வரவேற்கிறேன்
நீயோ ஒவ்வொரு முறையும்
மாயக் கண்ணனாய்
மறைந்துக் கண்ணாமூச்சி
களித்து விளையாடுகின்றாய்
பேதை நெஞ்சம்
உந்தன் வருகைகாக மட்டுமல்ல
இராதை வந்தாலும்
கொண்டாடி மகிழக் காத்திருக்கின்றேன்
கண்ணனாய் கண்ணாமூச்சியாடுகிறாய்
இராதையாய் வர மறுத்து ஏய்த்திட
இந்த தேவகி மட்டும்
அத்திரு மரத்தை சுற்றியே
வலம் வருகிறேன்
விழி நீர் மட்டும் துணையாக.
         - பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...