தேவதையாகவே...

மந்திரக் கோலை
கைகளில் ஏந்திவரவில்லை
மண்ணில் தவழ தவழ
வெண்ணிறக் கவுனை அணியவில்லை
தலையில் ஒளிரும்
கிரீடம் சூடிடவில்லை
தக தகவென மின்னலாய்
ஒளியும் சூழவில்லை
மாயாஜால வித்தைகள்
செய்திடவில்லை
மந்திரச்  சொற்கள்
உச்சரித்து கதைக்கவில்லை
இருந்தும் என் கண்களுக்கு
தேவதையாகவே...!
ஆம் ...
இறுகி பிடித்த உள்ளாடையை
நாகரிகமென அணியாது
கறிகளை கவ்வி ரத்தம்
சொட்ட சொட்டவிருக்கும்
நாயின் வாயை போல
உதட்டு சாயம் பூசவில்லை
ஒப்பனை என்ற பெயரில்
முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை
மென் புன்னகையோடு தேவதையாகவே...
இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.
                  - பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு