தூது
நேரங்கள் சென்றுக்
கொண்டே இருக்கின்றன
நாட்கள் கூடிக்கொண்டே
போகின்றன
கொண்டே இருக்கின்றன
நாட்கள் கூடிக்கொண்டே
போகின்றன
நான் உனக்காக அனுப்பிய
காதல் தூதுகள்
எல்லாம் மகிழ்வோடு
ஏற்றுக் கொண்டாய் ...!
ஆம்
நீயே அறியாது தான்.
மேகத்தை தூதாக்கினேன்
மழையாய் பொழிந்தவுடன்
ஏற்று கொண்டாய்.
உன் வீட்டின்
பூவை தூதாக்கினேன்
அந்த ஒற்றை ரோஜாவை
நீயே கிள்ளி தலையில்
சூடிக்கொண்டாய்...!
நீ சூடியதும் அது
என்னை பார்த்து கர்வத்தோடு
சிரிக்க வேறு செய்கின்றது.
பாடல் மூலமாக இசையோடு
தூது அனுப்பினேன்
உன் ரோஜா செவி மடல்
அந்த இசைக்கு ஏற்ப
இசைந்து கொடுத்து
ரசித்துக் கொண்டாய்...!
தூதாக அனுப்பியவை எல்லாம்
ஏற்றுக் கொண்டாய் ...!
உன்னை அறியாது
அதைப் போலவே
என் காதலையும்
சற்று விழி நிமிர்ந்து
பார்த்து ஏற்றுக் கொள் .
காதலில் சொல்லாமல்
புரிதலில் ஒரு சிறகு விரித்து
பறக்கும் மனம்
வண்ணத்து பூச்சியாய் ...!
அந்த இனிய அவஸ்தை
வேண்டுமடி அழகியே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment