* உயிர்த்திசை*

 கோடிட்டு காட்டினேன் நீ இரு உயிரென
மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...!
உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும்
உலகமே நானாக மாறித்தான் போனாய்... !
மரணவலி கொடுத்து நான் வந்தாலும்
மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு
பாகாய் உருக செய்யும் அன்பை
பாரினில் வேறு யார் தருவார் ?
ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண
எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...!
உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும்
உன்னை மறந்தே எனக்களிப்பாய்...!
உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும்
உறைவிடமாக இருப்பேன் எந்நாளும்
உயிர்த்திசையாக இருப்பவளே... !
உயிராய் என்னை சுமந்தவளே ...!

                                      -- பிரவீணா தங்கராஜ்
      
       * அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது .
                

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு