* உயிர்த்திசை*
கோடிட்டு காட்டினேன் நீ இரு உயிரென
மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...!
உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும்
உலகமே நானாக மாறித்தான் போனாய்... !
மரணவலி கொடுத்து நான் வந்தாலும்
மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு
பாகாய் உருக செய்யும் அன்பை
பாரினில் வேறு யார் தருவார் ?
ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண
எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...!
உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும்
உன்னை மறந்தே எனக்களிப்பாய்...!
உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும்
உறைவிடமாக இருப்பேன் எந்நாளும்
உயிர்த்திசையாக இருப்பவளே... !
உயிராய் என்னை சுமந்தவளே ...!
-- பிரவீணா தங்கராஜ்
* அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது .
மேடிட்ட வயிறை தடவியே நாமொருயிர் என்றாய்...!
உண்ணாமல் தவிர்த்தாய் ஒவ்வாது என்றதும்
உலகமே நானாக மாறித்தான் போனாய்... !
மரணவலி கொடுத்து நான் வந்தாலும்
மகிழ்ச்சியோடு வரவேற்றாய் குதூகலத்தோடு
பாகாய் உருக செய்யும் அன்பை
பாரினில் வேறு யார் தருவார் ?
ஏக்கம் நிறைந்த பார்வை நான் காண
எட்டாத உயரமென்றாலும் வாங்கி தருவாய்...!
உண்ணும் உணவு ஒரு பிடி என்றாலும்
உன்னை மறந்தே எனக்களிப்பாய்...!
உன் தியாகமும் , பாசம் கலந்த தவிப்பும்
உறைவிடமாக இருப்பேன் எந்நாளும்
உயிர்த்திசையாக இருப்பவளே... !
உயிராய் என்னை சுமந்தவளே ...!
-- பிரவீணா தங்கராஜ்
* அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டிக்கு எழுதியது .
Comments
Post a Comment