கிராமம்

கொக்கரக்கோ ஒலியெழுப்பி சேவல் கூவ
கம்பிவளைவில் புள்ளிகளை சிறையிட்டோம் கோலத்தில
விடியல்களை வீட்டிற்குள்ள கதிரவன் பரப்ப
ஜல் ஜல் லென மாட்டுவண்டி சலங்கை படிக்க
சல சல வென நீரோடை வயலிலோட
சிலு சிலு வென காற்று சில்லிட செய்ய
பச்சை பட்டாடை உடுத்தியே பூமி சிரிக்க
பாதகங்கள் செய்யாதே வாழ்கின்றோம்
திண்ணை கட்டி திகட்டாது கதைப் பேசிடுவோம்
கம்மன்கூழும் பழைய கஞ்சி பசியாறிட
போதும் போதும் என்றுதானே வாழ்ந்திடுவோம்
அடுக்குமாடி யிடுக்குவீடு வேண்டவில்லை 
ஓட்டு வீடு யென்றாலும் வேப்பங்காற்று வேண்டுகின்றோம்
கணினிகுள்ளதலையை விட்டு வாழும் வாழ்கையெதுக்கு
களப்பை பிடிச்சி காலம் தள்ளும் வாழ்கையிருக்கு
பச்சரிசி சாதம் எல்லாம் தேவையில்லை
பசியாற்ற நெல் விதைச்சா போதுமுங்க
இறுக்கி பிடிச்ச ஆடை எல்லாம் இங்கில்லை
சொருகி கட்டும் தாவணி யென்றுமுண்டு
வகிடுயெடுத்து பின்னி தலைவாரும் அழகியுண்டு
மாதமொருமுறையாவது  வந்து வாழு கிராமத்தில - அதை
உந்தன் சந்ததிக்கும்  பெருமையாய் கூறு நல்ல....
                                                               --பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1