வன்பாதங்கள் செல்லும்...
கருமை நிற மேகத்தினுள்கடக்கின்றேன் சுவாசித்தபடியே
கானல் நீர் தான்
கண்களுக்கு புலப்பட்டாலும்
கால்கள் வீரநடை போடுகின்றன
பாசங்கள் தவிக்க விட்டபோதும்
பாதங்கள் மட்டும் தளரவில்லை
பரவசத்தை அள்ளிக்கொண்டே
பட்டங்கள் துணையோடு
பறக்கின்றேன் நம்பிக்கையோடு
நேர்பாதை செல்லும் கால்களுக்கு
நேர்மையே தோழனாக
நெடுந்தூர மென்றாலும்
நெட்டி முறிப்பதில்லை மனம்
நேசத்தை மீண்டும் தேடியபடி
உறவுகள் தளர்த்தி சென்றாலும்
உன் மனமும் உள் மனமும்
உதராதவரை உறைய மாட்டேன்
உச்சியை தொடும் வரை
உறங்கிட கண்களையும் விடமாட்டேன்
வழிகளை தேடாது - என்
வன்பாதங்கள் செல்லும் தடமே
வழியாக மாற்றியமைப்பேன்
வசந்தங்களை வரமாக மீட்டி
வந்திடுவேன் வாழ்வினை உயர்த்தியே...!
-- பிரவீணா தங்கராஜ் .
கானல் நீர் தான்
கண்களுக்கு புலப்பட்டாலும்
கால்கள் வீரநடை போடுகின்றன
பாசங்கள் தவிக்க விட்டபோதும்
பாதங்கள் மட்டும் தளரவில்லை
பரவசத்தை அள்ளிக்கொண்டே
பட்டங்கள் துணையோடு
பறக்கின்றேன் நம்பிக்கையோடு
நேர்பாதை செல்லும் கால்களுக்கு
நேர்மையே தோழனாக
நெடுந்தூர மென்றாலும்
நெட்டி முறிப்பதில்லை மனம்
நேசத்தை மீண்டும் தேடியபடி
உறவுகள் தளர்த்தி சென்றாலும்
உன் மனமும் உள் மனமும்
உதராதவரை உறைய மாட்டேன்
உச்சியை தொடும் வரை
உறங்கிட கண்களையும் விடமாட்டேன்
வழிகளை தேடாது - என்
வன்பாதங்கள் செல்லும் தடமே
வழியாக மாற்றியமைப்பேன்
வசந்தங்களை வரமாக மீட்டி
வந்திடுவேன் வாழ்வினை உயர்த்தியே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment