பயம் ஓடியது
கோரமான பற்களதில்
இரத்தம் வழிந்த திட்டுக்கள்
கண்களை கண்டாலே
பயப்பந்து வயிற்றில் பிரள
எதற்குக் கொன்றது ? ஏன் கொன்றது ?
எத்தனிக்க இயலாத காட்சிகள்
அப்படியே உள்வாங்கிய
மகளின் மனதில்
விளக்கு பொத்தானைப் போடாத
அந்த அறைக்குச் செல்ல
கால்கள் தயங்கியே நிற்க
அச்சத்தில் கைகளும் சில்லிட்டுயிருந்தன
சீக்கிரம் கிளம்புயென்று
விரைவுப்படுத்திய போது
அந்தப் பார்வையே சொல்லிவிட்டது
நிமிடத்தில் கண்ட
பேய் படத்தின் பாதிப்புயென்று
'சரி வா' என கை கோர்த்து
அழைத்துச் சென்ற மகளிடம்
'இப்ப மட்டும் பேய் வராதா' யென்ற
கேள்விக்கு பதிலாக
'அம்மா நீங்க இருக்கீங்க' யென்ற
பதிலில் சிலிர்த்து விட்டது
என்ன வார்த்தை கூறி மீதி முடிப்பதென்று ...
-- பிரவீணா தங்கராஜ் .
இரத்தம் வழிந்த திட்டுக்கள்
கண்களை கண்டாலே
பயப்பந்து வயிற்றில் பிரள
எதற்குக் கொன்றது ? ஏன் கொன்றது ?
எத்தனிக்க இயலாத காட்சிகள்
அப்படியே உள்வாங்கிய
மகளின் மனதில்
விளக்கு பொத்தானைப் போடாத
அந்த அறைக்குச் செல்ல
கால்கள் தயங்கியே நிற்க
அச்சத்தில் கைகளும் சில்லிட்டுயிருந்தன
சீக்கிரம் கிளம்புயென்று
விரைவுப்படுத்திய போது
அந்தப் பார்வையே சொல்லிவிட்டது
நிமிடத்தில் கண்ட
பேய் படத்தின் பாதிப்புயென்று
'சரி வா' என கை கோர்த்து
அழைத்துச் சென்ற மகளிடம்
'இப்ப மட்டும் பேய் வராதா' யென்ற
கேள்விக்கு பதிலாக
'அம்மா நீங்க இருக்கீங்க' யென்ற
பதிலில் சிலிர்த்து விட்டது
என்ன வார்த்தை கூறி மீதி முடிப்பதென்று ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment