நேர்மையை பயிரிடு

நேர்மையை பயிரிடு இன்று ஞாயிறு என கடற்கரை கூட்டம் சொல்லாமல் சொல்லியது. கதிரவனுக்கு வேலை தொடங்கும் நேரம். இன்று அவனது பஜ்ஜி கடையில் கூட்டமும் அதிகம். ஓரமாக தன் மகன் சிவானந்தம் எனும் சிவா விளக்கு ஓளியில் படித்திருக்க, கதிரவனுக்கு உதவியாக மனைவி கயல் வேலையில் செயல்பட்டாள். அப்பொழது அங்கே வந்த பரணி புன்னகை புரிந்தவரே , '' அண்ணே ! எனக்கு ஒரு பிளேட் பஜ்ஜி '' என்றான் . பரணி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த மக்களில் ஒருவன் அல்ல, மக்கள் ஏமாறும் போது அவர்களது உடமையை திருடும் குண...