Posts

Showing posts from 2025

அசலும் போலியும்

                                                  அசலும் போலியும் ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்   நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார். ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான  செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த  தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லது தான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்  மன்னர். இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால். பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு  சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்...

அக்பரும் பீர்பாலும்

                                          அக்பரும் பீர்பாலும்   ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ? பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று ஒரிரு நாட்கள் சென்றன அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீ...