Posts

பன்னிர் வறுவல்

Image
  பன்னீர் வறுவல்  என்பது ஒரு சுவையான வறுவல் வகை. இது பன்னீரை மசாலா சேர்த்து வறுத்து செய்யப்படும் ஒரு சைடு டிஷ். தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக வெட்டியவை) வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன் மசாலா தூள் – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லி – அலங்கரிக்க செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மசாலா தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறி, 5–7 நிமிடம் வறுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

ரவை கேசரி

Image
  🍽️ தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் (இனிப்பு அதிகமாக வேண்டும் என்றால் 1¼ கப்) தண்ணீர் – 3 கப் நெய் – 50 ml சமையல் எண்ணெய் – 50 ml (ரீஃபைண்ட் ஆயில் மட்டும்) முந்திரி – தேவையான அளவு உலர் திராட்சை – தேவையான அளவு ஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி கலர் பவுடர் – 1 சிட்டிகை (விருப்பப்படி சிவப்பு/ஆரஞ்சு) 👩‍🍳 செய்முறை: முந்திரி, திராட்சை வறுத்தல் ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். ரவா வறுத்தல் அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும். தண்ணீர் கொதிக்க வைக்கவும் 3 கப் தண்ணீரை கடாயில் ஊற்றி, அதனுடன் 50 ml எண்ணெய் மற்றும் 50 ml நெய்யில் முக்கால் பாகம் சேர்க்கவும். கலர் பவுடரும் சேர்க்கலாம். ரவா சேர்த்து கிளறவும் தண்ணீர் கொதிக்கும்போது, வறுத்த ரவாவை மெதுவாக சேர்த்து, கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும். மூடி வைத்து வேகவைக்கவும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சர்க்கரை சேர்த்து கிளறவும் ரவை வெந்ததும் சர்க...

பிசிபேளாபாத்

Image
  🍛 தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி) – 1½ கப் புளி – நெல்லிக்காய் அளவு சாம்பார் பவுடர் – 2-3 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2-3 மேஜைக்கரண்டி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை – தாளிக்க முந்திரி – 8-10 துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி (விருப்பப்படி) 🔥 செய்முறை: அரிசி மற்றும் பருப்பு – தண்ணீரில் கழுவி, 15 நிமிடம் ஊறவைத்து, 3-4 விசில் வரை குக்கரில் வேக வைக்கவும். மசாலா தயாரிப்பு – சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், தேங்காய் (விருப்பப்படி) சேர்த்து ஒரு கலவையாக வைத்துக்கொள்ளவும். காய்கறிகள் வதக்குதல் – ஒரு கடாயில் நெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பிற காய்கறிகளை வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அரிசி கலவை – வேகிய அரிசி–பருப்பு கலவையை காய்கறி கலவையில் சேர்த்து நன்கு கிளறவும். தாளிப்பு – நெயில் கடுகு, சீரகம், முந்திரி, பெருங்காயம், கருவேப்பிலை வறுத்து சாதத்தில் சேர்க்கவும். சூடாக பரிமாறவும் – அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறலாம்.

தாஹி சமோசா - தாஹி பூரி

Image
  தேவையான பொருட்கள்: உப்பிய சின்ன பூரி - 6  அல்லது  சமோசா 3 தேவையான அளவு தயிர் - 2 கப் சர்க்கரை - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு பச்சை வெங்காயம்  வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தழை செய்முறை: தயிரை உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விடாமல் கடைந்து வைக்கவும். குட்டி சமோசா அல்லது உப்பிய சின்ன பூரி - 6 உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும். தஹி பூரி செய்யும் முறை: ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உள்ளே தேக்கரண்டி இனிப்பு சட்னி விடவும். உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, கடைந்த தயிரை உள்ளே ஊற்றி, வறுத்த சீரகத்தூள், மிளகாய் தூள் தூவி, பச்சை வெங்காயம் ஓமபொடி மல்லி தழை சேர்த்து உடனே சாப்பிட வேண்டும். தஹி சமோசா செய்யும் முறை: ஏற்கனவே செய்து வைத்துள்ள சமோசா 3 எடுத்து, அதன் மேலே தேக்கரண்டி இனிப்பு சட்னி விடவும். கடைந்த தயிரை உள்ளே ஊற்றி, வறுத்த சீரகத்தூள், மிளகாய் தூள் தூவி, பச்சை வெங்காயம் ஓமபொடி மல்லி தழை சேர்த்து உடனே ச...

Sleeping Beauty

                           Sleeping Beauty   Long ago in France there lived a King and Queen.  More than anything, they yearned for a child.  At last, to their great happiness, the Queen gave birth to a baby girl.  All the bells in the land rang with joy.  The King and Queen invited all the fairies in the kingdom to a Naming Party for the baby.  And what a party it was!  Plates and silverware of pure gold were set for each guest.  One fairy, whose name was Maleficent, had left 50 years before and had not been seen in all that time.  Yet she showed up at the door! Quickly the King and Queen whispered to the servants they must quickly find a place setting and make room at the table for the new guest.  Alas, all the gold plates were already on the table and only a plate wear setting made of silver could be found.  This greatly angered Maleficent. Soon it was time for...

கண்ணால் காண்பது பொய்யா?

  அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து 'கண்ணால் கண்டது பொய் ஆகுமா?'' என்று வினவினார். 'பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்'' என்றார் பீர்பால். ''இதற்கு என்ன ஆதாரம்?'' எனக் கேட்டார் அக்பர். சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால். ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால். அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார். அடுத்து, படுக்கை அறையில் நுழைந்த அக்பர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்துவிட்டது. படுக்கையில் பீர்பாலும் அருகில் சிறிது தள்ளி அரசியும் படுத்திருப்பதே அந்தக் காட்சி! முகம் கடுகடுத்தது அக்பருக்கு. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்; அமைச்சர்களில் முக்கியமானவர்; அறிவுத்திறன் உடையவர்; ஒழுக்க சீலர்; பல சோதனைகளில் வெற்றி பெற்றவர் - இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீர்பால் செய்யும் காரியமா இது? பீர்பாலை எழுப்பி, ''இது என்ன செயல்?'' என்றார் அக்பர். ''மன்னர் பெருமானே, 'கண்ணால் க...

முல்லாவும் கழுதையும்…

  வேக வேகமாக சென்று கொண்டு இருந்த அவரை வழியில் பார்த்த அவர் நண்பர் என்ன முல்லா நலமாக இருக்குறீர்களா என்று கேட்க! முல்லா பதில் எதுவும் சொல்லாமல் வேக வேகமாக சென்று விட்டார். நண்பர் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போ முல்லாவும் வேலையை முடித்து விட்டு கழுதை மேல் வந்து கொண்டு இருந்தார்! இப்பொழுது நண்பர் முல்லாவை பார்த்த மகிழ்ச்சியில் முல்லா ! என்று கூப்பிட முல்லா கழுதையை நிறுத்தாமல் சென்று விட்டார். மறுநாள் கழுதை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த முல்லாவிடம், அவர் நண்பர் என்ன முல்லா நேற்று கூப்பிட கூப்பிட ரெண்டு தடவை நிற்காமல் போய் விட்டீர்கள் என்று சொல்ல! முல்லா தன் நண்பரிடம் இந்த கேள்வியை நீங்கள் என் கழுதையிடம் தான் கேட்க வேண்டும். நண்பர் அது எப்படி கழுதையை ஓட்டுவது நீங்க தானே என்று சொல்ல! அதற்கு முல்லா சிரித்து கொண்டே சொன்னாராம்! என் கழுதை நான் சொல்படி கேட்காது. நான் கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொள்வேன் அது எங்கு செல்கிறதோ அங்கு உள்ள வேலையை நான் முடித்து கொள்வேன் என்றாராம்.

ஆன்மிகம்

 ஆன்மீகம் என்றால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது .உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன? இறைவனுடைய தொடர்புடையது தான் ஆன்மிகம் என்போம்.அப்படியாக அதற்க்கு நாம் பல நாள் தவம் இருந்து கடவுளை பற்றி எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. மனிதனாக பிறந்து அவன் முதல் அழுகையில் இருந்து நம்முடைய ஆன்மிகம் தொடங்குகிறது. அப்படியாக ஒருவர் பிறரிடம் அன்பாய் இருப்பது ஆன்மீகம் அன்பாக பேசுவது ஆன்மீகம் அறிவைத் தேடுவது ஆன்மீகம் அறிவாக செயல்படுவது ஆன்மீகம் அறிவை பக்குவப்படுத்துவது ஆன்மீகம் அதிகாரம் செய்யாதிருப்பது ஆன்மீகம் அழகில் மயங்காதிருப்பது ஆன்மீகம் அகங்காரம் கொள்ளாதிருப்பது ஆன்மீகம் அடக்கமாக வாழ்வது ஆன்மீகம் அறிவாக வாழ்வது ஆன்மீகம் இப்படியாக நம்முடைய ஒழுக்கமான வாழ்க்கை தான் ஆன்மீகம். நம்முடைய அகம் சரியான முறையில் அமைந்தால் இறைவன் மனம் என்னும் கோயிலில் குடி கொள்வான்.ஆக இயலப்பான வாழ்க்கையில் ஒன்றி இருக்கும் இறைவனை மறந்து தனியே வெளியில் சென்று தேடி எந்த பயனும் இல்லை.     

பத்தாண்டு தவத்தின் பாடம்

  அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை. யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்! அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கழித்தார். பின்னர் தலைமைப் பிஷுவிடம் வந்தார். ‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ ‘படுக்கை… கடினம்’ ‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு. பத்தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வ ந்தார். ‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு. ‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ ‘சாப்பாடு… நாத்தம்..’ ‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு. மேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார். தலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ என்றார். ‘நான்… ...