மழலை மொட்டே !

கொஞ்சும் மழலை பேச்சு
பிஞ்சு பொன் விரலின் பஞ்சு தன்மை
தன்னிலை உணரா நிலையில்
தத்தி நடக்கும் பாதம்
நடைப்பழகும் தங்க தேரே
கை விரல் நீ கடிக்க வலிக்காது
உன் பற்களின் வளர்வை கண்டு
சிரிக்கும் மழலை மொட்டே!
உன் அழுகையும் அழகு தான்
பொம்மை வைத்து விளையாடும் கரும்பே!
சுட்டி தனம் செய்யும் உன் குறும்பு
உன்னிலை உணராது உறங்கையிலே
தாயின் மனம் இரசிக்கும் உன்னையே!
இப்படியே இருந்து விட கூடாதா?
என என்னையும் ஏங்க செய்து
வையகம் மறக்க செய்கிறதே
!

                               -- பிரவீணா  தங்கராஜ் .

*ஜனவரி 16 -2009-இல் " ராணி முத்து " இதழில் சுருக்கமாக பிரசுரிக்கப்பட்டது .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...