நான் நானாகவே

நான் நானாகவே இருந்து கொள்கின்றேன்
உனக்காக மாறி மாறியே
என் சுயத்தை இழந்து விடுகின்றேன்
போதும்
நான் நானாக இருந்த போது
எதற்காகவும் கவலை கொண்டதில்லை
கலங்கியதும் இல்லை
புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருக்கும்
நீண்ட நேர காத்திருப்பும் ஏமாற்றமும்
நீ பேசவில்லை யென்ற தவிப்பும் இருந்ததில்லை
உந்தன் கோபம் எந்தன் இதயத்தை சுடவில்லை
உந்தன் மவுனம் கூட தாக்கியதில்லை
அதனால் நான் நானாக இருக்கின்றேன்
அப்படியே என்னை ஏற்க முயன்றிடு !
                                        -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு