Posts

Showing posts with the label தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள்-16

Image
  அத்தியாயம்- 16 கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன் ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள். '' என்ன டா என்னதான் பிரச்சனை ?''   என்று வீட்டுக்கு பெரியவராய் கேடடார். '' அதெல்லாம் ஒன்னுமில்லை ஆச்சி சாதனா முட்டாள் தனமா உளருறா ஜோதி வேற சப்போர்ட் ''   என்று மறுத்தான். '' ஏன்டா மழுப்பற அந்த பொண்ணு உன்னை அளவுக்கு அதிகமா விரும்பறா ''   என்று சாதனாவிற்கு ஆதரவாக பேசினார் . '' சரி அப்படியே இருக்கட்டும். எனக்கு பிடிக்கலை அதான் பிரச்சனை '' என்று சொன்னா ன். '' நான் நம்ப மாட்டேன் '' என்றார் வேதா. '' ஆச்சி... ?'' '' உன்னை வளர்த்தவ டா எனக்கு உன் முகமே சொல்லிடும் உன் விருப்பு வெறுப்பை ''  என்று பேரனை புரிந்தவராய் நின்றார். '' ஆச்சி நான் அவளை விரும்பலை '' '' சரி உன் போனில் ஏதோ அவ போட்டோ இருக்கு என்று ஜோதி சொன்னா போனை கொடு நான் ஜோதிகிட்ட காட்டி கே