Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய -2

Image
  💘  2      காலை விடியல் அற்புதமாக விடிந்தது. எல்லா காலை பணியும் முடிந்து கரும்பச்சை கொண்டக் காட்டன் ஆடையை லாவகமாக அணிந்து ஹாலுக்குள் சென்றாள்.     தன்யா சீக்கிரமாக ஸ்பெஷல் கிளாஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். கிச்சனில் ராதை காபி எடுத்துக் கொண்டு பவித்ராவிடம் வந்தாள்.      '' தனு எந்திரிச்சப்பவே வந்து பார்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ணல. '' என்று காபியை கொடுத்தார்.                                 காபியை வாங்கி பருகியவாறு '' நல்லா தூங்கிட்டேன் ஆன்ட்டி ஸாரி. பொதுவா புது இடம் என்றால் தூக்கம் வராதுன்னு சொல்வாங்க ஆனா நல்லா தூங்கினேன்.” என்று கூறவும் பவித்ராவை கண்டு விஸ்வநாதன் நிம்மதி கொண்டார்.               முன்பு ஒரு முறை '' என்னால் நம்ம வீட்டுல நிம்மதியா தூங்கக் கூட முடியல அப்பா...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

Image
  முதல் முதலாய் ஒரு மெல்லிய  💘  1                    பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு கிடைத்தது. இதே தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். இதே மற்ற நேரமாக இருந்தால் தனிமையில் செல்ல ரசித்துக் கொண்டும் , வேடிக்கைப் பார்த்து கொண்டும் வருவாள். ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது போனது. தற்போது நெஞ்சம் முழுவதும் சோகங்கள் ஏற்றி கணத்த இதயமாக நெஞ்சுப் பிசைந்தது அவளுக்கு.       அவளையும் அறியாது உறங்க , உறக்கத்திலும் அவள் அழுத தடயம் தென்பட்டது. நேரம் வேகமாக ஓட இதோ அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது.            அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர் , விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை சிந்தினாள்.     '' வெல்கம் டு சென்னை மா. '' என்று ஆசையாக வரவேற்றார்.     '' தேங்க்ஸ் அங்கிள் ரொம்ப நேரம் காத்திருக்க வச்சி...

வெற்றி எளிதல்ல

Image
வெற்றி எளிதல்ல   காற்றுக்கு ஒலி சுமையானால்  இசை கிடைப்பதில்லை    கல்லுக்கு உளி சுமையானால்  சிற்பம் கிடைப்பதில்லை  மண்ணுக்கு ஏர் சுமையானால்  விளைச்சல் கிடைப்பதில்லை  மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்  நீர்துளி கிடைப்பதில்லை  தாளுக்கு மை சுமையானால்  கவிகள் பிறப்பதில்லை  தாய்க்கு சேய் சுமையானால்  தாய்மைக்கு அழகு இல்லை  வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்  வெற்றி கிடைப்பதில்லை. --  பிரவீணா  தங்கராஜ் . *2008-இல் பாரதி மகளிர் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டவை . *செப் 2008-இல்  "மங்கையர் மலரில் "  "பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .