அ-அம்மா ஆ-ஆதிரா

அ-அம்மா ஆ-ஆதிரா "தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது. சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர். மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்..." என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை அனைத்து வைத்து தலையை தாங்கி அமர்ந்தாள் ஜானவி. இது போன்ற செய்தி வருடத்துக்கு பல தடவை வந்து அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பெண் பிள்ளை பெற்றெடுத்தவர்களை கதிகலங்க வைத்து கவலை கொள்ள செய்கின்றது. எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து பள்ளியிலேயே குட் டச், பேட் டச் என்று பாடம் நடத்துவதாகட்டும், வகுப்பில் இது போன்று பேசி புரியவைக்கும் முயற்சியாகட்டும், அடிக்கடி ...