🌳மரம் வளர்ப்போம்🌳
மழை முத்தால் கிடைத்த நீர் வளத்தை கனி முத்தாக மாற்றினாய் - உன் வளத்தால் உன்னால் சுவாசம் பெறும் மனிதன் உன் சுவாசத்தைப் பறித்தாலும் உன் கனி இனிப்பது எப்படியோ ...?! ஆதியில் வந்த முன்னோருக்கு - உன் அன்பு கனியை தந்து உணவாகினாய்... ஐந்தறிவு ஜிவிகளும் பழம் தின்றே விதை தூவுகின்றது மண்ணிலுன்னை ஆறறிவு கொண்ட மனிதனோ அவன் சுவாசம் அழிக்க யவனே வெட்டுகின்றான் யுன்னை உயிர் கொண்ட உன்னை வெட்டி உயிரற்ற பொருளாகும் மனிதன் வீட்டை அலங்கரிக்கும் பொருளாக ஏற்றுக் கொள்ளும் சிந்தை கொண்ட மனிதா ! "வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் " என உன்னை வளர்க்க சொல்லி தர தான் வேண்டுமா ? -- பிரவீணா தங்கராஜ் .