படைக்கும் தொழிலுக்கு ஒரு படி உயர்ந்து . பாரில் மாணவருக்கு பயின்றதை புகட்டி , பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட , ஏட்டுச் சுரக்காயோடு நன்னடத்தை நவின்று , ஏற்றம் கொண்ட வானவில்லாய் உயர்த்தி , தவறு செய்த தருணங்களை மன்னித்து , தட்டிக்கொடுத்து திறமை வளர்த்து , கல்வி கடலிலே சிறு துளி நீர்த்தெளித்து , மகுடத்திற்கு வைரமாம் பணிகளிலே ஆசிரியத்துறை மட்டற்ற அளவிலே போற்றுவோம் இப்பணியை ..! -- பிரவீணா தங்கராஜ் .