முதல் முதலாய் ஒரு மெல்லிய- 6
💘 6 எல்லோரும் வேறு உடைக்கு மாற்றி தன்யா உறங்கும் வரைக் காத்திருந்தனர். பவித்ரா சுவாதி அருகே விசும்பலோடு அமர்ந்து இருந்தாள். அஸ்வின் கீழே வந்து , விஸ்வநாதனுக்கு எதிரே அமர்ந்து என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க என்பது போல் பார்த்திருந்தான். '' என்னடா இது ? இப்படி என்ன அவமானப்படுத்தற மாதிரி வீட்டுக்கு வந்தப் பெண்கிட்ட.. '' எனச் சொல்லி முடிக்கக் கூட வில்லை . '' பவித்ராவை எனக்கு முன்னாடியே தெரியும். அந்த விஷயம் அவளுக்கும் தெரியும். நான் ஒன்னும் நீங்கக் கூட்டிட்டு வந்த கெஸ்டை விரும்பல , நான் விரும்பினப் பெண்ணை தான் நீங்க கூட்டிட்டு வந்திங்க '' என எழுந்து உள்ளே சென்று பவித்ரா கைப்பிடித்து அழைத்து வந்தான். இப்படி ஒருவன் தாய் தந்தை முன் அழைத்து வர கைப்பிடிப்பாநென நினைத்தாள். '' என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா ? தெரியாதா ?’’ என்று அழுத்தமாய் கேட்டான். பவித்ரா '' கண்ணீர் வழிய திக்கித்திணறி '' தெரியும்... ஒரு முறை பார்த்திருக்கேன் ஆனா '' '' நான் விரும்பறேனு நேரிடைய சொன்னதில்லை சரிய