Posts

தித்திக்கும் நினைவுகள்-17

Image
  அத்தியாயம்-17 சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான். சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது சொல்ல சொல்லி ஜோதி கேட்டிட ஜோதி கண்டிப்பாக சொல்வதாக கூறி இருந்தாள். அன்று வேதாவும் ஜோதியும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றான். அவனின் கார் ஓட்டும் கேப்பில் ஜோதி சனாவிற்கு செல்வதை கூறியதும் அடுத்த நொடி அவளும் கிளம்பினாள் தாமரையோடு. தங்கள் கிராமத்திற்கு வந்ததும்'' அம்மா வாசனை மூக்கை துளைக்குது '' என்று  ஜோதி கிட்சனுள் வந்தாள். '' வாங்கம்மா" என்று வேதாவையும் "வா கௌதம்" என்று தட்டில் முறுக்கையும் செம்பில் நீரையும் எடுத்து வந்து கொடுக்க பெற்று உண்ண ஆரம்பித்தான் , '' ஜோதி போய் வளருக்கு கொடுத்துவிட்டு வா '' என்று சொன்னதும் '' வந்ததும் வேலை வாங்குற அம்மா போ '' என்று அலுத்து கொண்டாலும் வளரை தேடினாள். '' அண்ணி அண்ணி.. என்று அறைக்கு வர வளரு வாமிட் செய்து களைத்து நிற்பதை கண்டா