தித்திக்கும் நினைவுகள்-1

தித்திக்கும் நினைவுகள் அத்தியாயம் - 1 முதலில் சிறுத் தூரலாய் தூறிய வானம் சட்டென சடசடவென பெருந்தூரலாய் மாறிக் கொண்டுயிருந்தன. அப்பொழுது தான் தானும் வருவதாய் கூறிய கீர்த்தி போனில் '' சாரி டி நான் வரலை. நீ இன்னிக்கு போ நான் நாளைக்கு வந்திடறேன். உனக்காக கார் அங்க வெயிட்டிங்ல இருக்கு. கார் நம்பர் மெசேஜ் பண்ணிவிடறேன். '' என்றாள் . '' என்ன கீர்த்தி இப்படி பண்ற... நானும் அப்போ நாளைக்கே கிளம்பி இருப்பேன் எதுக்கு இப்படி அவசரமா என்னை கிளம்ப சொன்ன எருமை '' என்று சாதனா பொருந்தி தள்ளினாள் '' நோ நோ இப்பவே நீ போற ப்ளீஸ் கார் வெயிட்டிங்ல இருக்கு ஏறிட்டு கால் பண்ணு '' என அவள் திட்டியும் பொருட்படுத்தாமல் வைக்க , தனது ஆட்டோவில் இருந்து அங்கிருந்த காரை கண்டு நம்பர் சரியா என்று ஒரு முறை செக் செய்து கொண்டே ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டே மழைக்கு அஞ்சி வேகமாக காரில் ஏறினாள் சாதனா. காரில் சிறு பிரச்சனையை சரிச் செய்துக் கொண்டு தூறலில் கொஞ்சம் நனைந்து அடர் கேசம் சிலுப்பி கொண்டு அப்...