நான் ஏட்டில் எழுதியதை- காதல் பிதற்றல் - 33
முந்தைய நாட்குறிப்பை யெடுத்து தூசு தட்டி நீயும் நானும் சந்தித்த இனிய நினைவுகளை படித்து ரசித்து உன் மீதுள்ள அதீத காதலில் தனிமையில் சிரிக்கின்றேன் அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற மிக பெரிய கேள்வி வட்டம் என்னுள் சூழ்ந்திட அக்கணம் வந்திட்ட உன்னை விழியிலே வினாக்கள் தொடுக்கின்றேன் என் முன் நெற்றியில் வலிக்காது முட்டி நாசியோடு நாசி உரசி அன்று நடந்த நிகழ்வுகளை அப்படியே கண் முன் அச்சு பிசகாது நக பூச்சு உட்பட அனைத்தும் ரசனையோடு விவரித்து சொல்லி அசரடிக்க வைக்கின்றாய்... நான் ஏட்டில் எழுதியதை நீ மனதில் எழுதியதை வியந்து அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற கேள்வி புள்ளியாய் மறைந்து உன் மீது உள்ள காதலை இமயத்தை விட உயர வைத்திட செய்து விட்டாய் . -- பிரவீணா தங்கராஜ் .