பூக்கள் கேலிப் பேசுகின்றன
பூங்காவினுள் நுழைந்ததுமே பூக்கள் கேலிப் பேசுகின்றன ஆயிரம் கதைப் பேசியதேயிடம் அயலார் போல எண்ணமிட செய்தது அதேயிருக்கையில் அமர்வு ஆனால் அன்று போல் துள்ளலில்லை மனக்குன்றல் மட்டுமே அன்று தந்தையின் கண்ணில் அகப்பட்டோம் காதலனோடு இல்லத்தில் சிறைப்பட்டேன் தற்கொலை நாடகம் வெற்றி பெற்றன கூடவே ஜாதி மதம் பணம் பகட்டு குடும்ப கௌரவமெல்லாம் கரம் பற்றினேன் தோற்று போயின ஒரு உண்மை காதலும் இரு மனமும் அன்றுயமர்ந்த அதேப் பூங்கா பூக்கள் கேலிச் செய்கின்றன அன்று பிடித்த கரம் இல்லையென்று -- பிரவீணா தங்கராஜ் .