Posts

Showing posts with the label பஞ்ச தந்திரம்

பஞ்ச தந்திரம்-5

பஞ்ச தந்திரம்-5       எப்பவும் ஆண் பெண் ரசனை வித்தியாசமானது.     கல்யாணத்துக்கு முன்னயும் சரி, கல்யாணத்துக்கு பின்னயும் சரி ஆண் எப்பவும் வேற பொண்ணுங்களை பார்த்து சைட் அடிப்பாங்க. மற்ற பெண்ணோட கண், காது, மூக்கு, வாய், செஸ்ட், கழுத்து, இடுப்பு, பின்னழகு, தொடை கால், கால் விரல் நகம் வரை  முழு உடலை ரசிப்பாங்க.   முடி கர்லிங்கா இருந்தாலும் ஸ்ரெயிட்டிங் பண்ணினாலும் ஏன் எதிர்வீட்டுக்காரி கொண்டை குத்தி அழுக்கு நைட்டி போட்டுட்டு வந்தாலும் ரசிப்பாங்க சபலப்படுவாங்க.     இதே பெண் கல்யாணத்துக்கு முன்ன சைட் அடிச்சிருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு எவனையும் ஏறெடுத்து பார்க்க மாட்டா.  பையன் அழகாவே இருந்தாலும் கண்ணு இந்த பக்கம் அந்த பக்கம் போகக்கூடாது. பிகாஸ் அவ கல்யாணம் ஆனவ. இன்னொருத்தனை பார்த்தா பத்தினியா இருக்க முடியாது.     புராணமே இதை தானே சொல்லுது. ரேணுகாதேவிம்மா மண்ணை குழைத்து பானை செய்து தண்ணி பிடிச்சி வர சொல்வார் ஜமதக்கினி. ரேணுகா தேவியும் மண்ணை பானையா செய்து, பாம்பை சும்மாட்டியா வச்சி எப்பவும் நீர் எடுத்துட்டு வர்றவங்க. ஒரு முறை நீரில் தெரிந்த காந்தர்வனோட அழகுல மயங்கி ரசித்ததுக்கே கற்பு தவறி

பஞ்ச தந்திரம்-4

பஞ்ச தந்திரம்-4      திரிஷ்யா பலகனவை மனதில் தேக்கி வைத்து சுடிதார் அணிந்து கணவன் முன் நிற்க அவனும் கட்டி பிடித்து தட்டாமாலை சுற்றுவதாக கனவு கண்டாள்.    கல்லூரியில் படிக்கும் போது சுடிதார் அணிந்திருக்கின்றாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு முற்றிலும் சேலை தான் கட்டவேண்டும் என்பது நாகேஸ்வரியின் விதி.      அதனாலே சுடிதாரை என்றோ மூட்டை கட்டியிருந்தாள்.      கணவரின் விருப்பம்மாடர்ன் உடை என்று அறிந்தப்பின் சுடிதார் அணிவதில் தயக்கமின்றி வாங்கிவிட்டாள்.    குளித்து முடித்து உடையணிந்து கணவர் எழுந்திடும் முன் டீ போட சென்றிருந்தாள். லோகநாதனோ மருமகளின் உடையை கண்டு ஜாகிங் போகாமல் மனைவியிடம் கிசுகிசுக்க வந்தார்.       நாகேஸ்வரியோ ரயில் வண்டி போல அதிவேகமாய் வந்து, "என்னடி  இது?" என்று கேட்டார்.     "சுடிதார் அத்தை. அவருக்கு பிடிக்கும்னு போட்டேன்" என்று நடுங்கினாள்.     "இந்த டிரஸை என் மகன் வாங்கி தந்தானா? எங்க அவன்?" என்று கத்தினார்.      "இல்லை அத்தை... அவர் வாங்கி தரலை. இது நான் தான் வீட்டு செலவுக்கு கொடுத்ததுல வாங்கினேன். அவருக்கு சுடிதார் பிடிக்கும்னு" என்று க

பஞ்சதந்திரம்-3

பஞ்சதந்திரம்-3 முதலில் யாரை பற்றி அறிவதென மீண்டும் தலையாய பிரச்சனை எழும்பியது. நைனிகா தான் கடைசியாக கூறுவதாக தோளைக் குலுக்கினாள். ரஞ்சனாவோ "அப்போ நான் இவளுக்கு முன்ன சொல்லிக்கறேன்." என்று அவளை போலவே தோளைக் குலுக்கவும் நைனிகா எரிச்சலடைந்தாள். "என் பேரண்ட்ஸே பரவாயில்லை." என்று சலித்தபடி நைனிகா மெத்தையில் படுத்து காலாட்டி, "யார் சொல்லறிங்களோ சொல்லுங்க. விருப்பமில்லையா விடுங்க. ஐ டோண்ட் கேர். பட் தூங்கிட்டு காலையில எழுந்துப்போம். அதான் இறப்பை தள்ளி போட வச்சிட்டிங்களே." என்று ஆதங்கப்பட்டாள். "நீ வேண்டுமின்னா உன் ரூம்ல இங்கயே தூக்கு போட்டுக்கோ" என்று ரஞ்சனா ஐடியா தர, "என்ன நீ என்னை நோண்டிட்டே இருக்க?" என்று எகிற, "கொஞ்சம் நிறுத்துங்க" என்றார் மஞ்சரி பாட்டி. வயதில் பெரியவர் என்பதால் சற்று அமைதியாக இருந்தார்கள். "மூச்சு வாங்குதுடா... என்னைலையும் இப்ப பகிர முடியலை. குழந்தையும் தூங்கறா. திரிஷ்யா உன்னை பத்தி சொல்லலாமே. குழந்தை இருக்குனு சொன்ன. குழந்தை தேடாது. அப்படியென்னமா ஆச்சு." என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா அழுதாள்.

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

Image
  பஞ்ச தந்திரம் ( five knots will be untied )   5பஞ்ச -தந்திரம்👇 த(Tha)-தனுஜா (Thanuja-6) ந்(N)-நைனிகா (Nainika-18) தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27) ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35) ம்(M)- மஞ்சரி (Manjari-69) பஞ்ச தந்திரம்  கதையை வாசிக்க கீழே உள்ள அத்தியாயத்தினை சொடுக்கவும். 👇 பஞ்ச தந்திரம்-1   பஞ்ச தந்திரம்-2 பஞ்ச தந்திரம்-3 பஞ்ச தந்திரம்-4 பஞ்ச தந்திரம்-5 பஞ்ச தந்திரம்-6 பஞ்ச தந்திரம்-7 பஞ்ச தந்திரம்-8 பஞ்ச தந்திரம்-9 பஞ்ச தந்திரம்-10 பஞ்சதந்திரம்-11 பஞ்ச தந்திரம்-12 பஞ்ச தந்திரம்-13 பஞ்ச தந்திரம்-14 பஞ்ச தந்திரம்-15 பஞ்ச தந்திரம்-16 பஞ்ச தந்திரம்-17 பஞ்ச தந்திரம்-18(முடிவுற்றது)