Posts

பெண்ணே...!

கவிதையின் நயம் கண்டு  காகிதம் சிலிர்ப்பதில்லை சிற்பத்தின் எழில் கண்டு  உளிகள் உணர்வதில்லை ஓவியத்தில் மிளிரும் வண்ணத்தை   தூரிகைகள் கண்டதில்லை வாசமுணர்ந்து பூக்கள்  மணப்பதில்லை பெண்ணே உன் சக்தியை  நீயும் உணர்ந்ததில்லை                    --பிரவீணா தங்கராஜ் .

பூக்கள் கேலிப் பேசுகின்றன

பூங்காவினுள் நுழைந்ததுமே பூக்கள் கேலிப் பேசுகின்றன ஆயிரம் கதைப் பேசியதேயிடம் அயலார் போல எண்ணமிட செய்தது அதேயிருக்கையில் அமர்வு ஆனால் அன்று போல் துள்ளலில்லை மனக்குன்றல் மட்டுமே அன்று தந்தையின் கண்ணில் அகப்பட்டோம் காதலனோடு இல்லத்தில் சிறைப்பட்டேன் தற்கொலை நாடகம் வெற்றி பெற்றன கூடவே ஜாதி மதம் பணம் பகட்டு குடும்ப கௌரவமெல்லாம் கரம் பற்றினேன் தோற்று போயின ஒரு உண்மை காதலும் இரு மனமும் அன்றுயமர்ந்த அதேப் பூங்கா பூக்கள் கேலிச் செய்கின்றன அன்று பிடித்த கரம் இல்லையென்று                -- பிரவீணா தங்கராஜ் .

இது கணிதமல்ல வேதியல் -காதல் பிதற்றல் 35

*காதல் பிதற்றல் * கவிதை எழுதி காதலை கதைக்க தெரியாதுயென திரையிசை மென்பாடலை ஒலிக்கவிட்டு கந்தப்பார்வை வீசுகின்றாய் அப்பார்வை சொன்னதடா ஓராயிரம் காதல் கவிதைகளை எனக்காக மட்டுமே நீ எழுதியதாக .               *** வட்ட வடிவ தோசைகள் பிய்த்து ஊட்டுகையில் இதயம் வடிவம் பறக்கின்றது இது கணிதமல்ல வேதியல் ...                  -- பிரவீணா தங்கராஜ் .

துளி துளியாய் - காதல் பிதற்றல்- 34

நீ என்னுள் எப்பொழுது நுழைந்தாய் என்று யோசித்து யோசித்து களைப்பு அடைத்து விட்டேன் நீயோ துளி துளியாய் இப்படி யோசிக்க வைத்து தான் என்னுள் நுழைந்தாய் யென்பதை அறியாது              -- பிரவீணா தங்கராஜ் .

நீக்குகின்றேன் மீன் செதில்களை

அக்கடை கடக்கும் போதெல்லாம் ஒவ்வாமை தான் எனக்குள் நாசியினை கைக்குட்டையால் நுகர்ந்துகொண்ட பின்னும் ஒவ்வாமை சமிக்ஜை போகாது அத்தகைய பாவையான யென்னிடம் மீன் போன்ற கயல்விழி போன்றவளேயென்ற ஏக வெள்ளித்திரை வசனத்தை பேசியே அன்பை கொட்டிவிட்டாய் காதல்யெனும் மரத்தை வளர்த்துவிட்டாய் அதனாலோ என்னவோ எனக்கு பிடிக்காத அக்கடையின் வாடையை சகித்துக் கொண்டு வாங்கி விடுகின்றேன் உன் தாயின் கை பக்குவத்தில் பாதியாவது வரவேண்டுமென்ற ஆசையுடன் நீக்குகின்றேன் மீன் செதில்களை .                                        -- பிரவீணா தங்கராஜ் .

பருகும் தேனீர்

Image
ஒரு மிடறு பருகி முடித்தேன் தித்திக்கின்றது தேனீர் அன்றொருனாள் உன்னிடம் பேசியருந்திய அதேயினிய நினைவுகள் அடுத்த மிடறு பருகினேன் சிறிது கசந்தன அதே தேனீர் நீ விலகி சென்ற கசந்த நினைவுகள் அதே தேனீர் ருசி மாறின உன் நினைவுகள் மட்டுமே என் வாழ்வை இனிமையாக்குவதோ கசப்பாக்குவதோ முடிவெடுக்கின்றன யென்பதை அடுத்த மிடறில் உணர்ந்தேன்.         --பிரவீணா தங்கராஜ். 

நான் ஏட்டில் எழுதியதை- காதல் பிதற்றல் - 33

முந்தைய நாட்குறிப்பை யெடுத்து தூசு தட்டி நீயும் நானும் சந்தித்த இனிய நினைவுகளை படித்து ரசித்து உன் மீதுள்ள அதீத காதலில் தனிமையில் சிரிக்கின்றேன் அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற மிக பெரிய கேள்வி வட்டம் என்னுள் சூழ்ந்திட அக்கணம் வந்திட்ட உன்னை விழியிலே வினாக்கள் தொடுக்கின்றேன் என் முன் நெற்றியில் வலிக்காது முட்டி நாசியோடு நாசி உரசி அன்று நடந்த நிகழ்வுகளை அப்படியே கண் முன் அச்சு பிசகாது நக பூச்சு உட்பட அனைத்தும் ரசனையோடு விவரித்து சொல்லி அசரடிக்க வைக்கின்றாய்... நான் ஏட்டில் எழுதியதை நீ மனதில் எழுதியதை வியந்து அதே காதல் நம்மில் உள்ளதாயென்ற கேள்வி புள்ளியாய் மறைந்து உன் மீது உள்ள காதலை இமயத்தை விட உயர வைத்திட செய்து விட்டாய் .                            -- பிரவீணா தங்கராஜ் .    

அவன் யெனும் இறை

Image
சோதனைகள் வலுத்திட காயங்கள் தந்திட மனம் துவளத்தான் செல்வதுண்டு இருப்பினும் அவனது சோதனைகள் முடிந்தபாடில்லை எனக்கு வாரி வாரி வருத்தங்களை தர என்றுமே சலித்திடவில்லையவன் துன்பம் கண்டு ஒளிக்கின்றேனா கண்ணீர் விடுகின்றேனா அல்லது அவன் பாதம் பணிந்து புலம்புகின்றேனயென காண்பதில் அத்தனை சந்தோசம் அவனுக்கு வேதனை பல தந்து அவனது இறையுணர்வுக்கு பலன் உண்டாயென காத்திருக்கின்றான் அவன் இருக்கின்றானா ? இல்லையா ? இருந்தால் நன்றாகயிருக்குமா ? யென்ற கேள்விக்குள் யென்னை தள்ள பார்கின்றான் விடை கானா கேள்விகளை விதைத்து விட்டு செல்கின்றான் ... அவன் யெனும் இறை எனக்கான சோதனைகள் பாக்கி இருப்பதால் ...                                      -- பிரவீணா தங்கராஜ் .

கண்கள் சொல்லுவ தென்ன...

உன் கண்கள் சொல்லுவ தென்ன என் பார்வை புரிந்தும் பெண்னே..! உள்ளத்தில் நீ அமர்ந்து என்னையே கள்வனாய் மாற்றிய தென்ன..! பாறையாய் இடுங்கி கிடந்த யென்னை சிற்பமாய் புகுந்த மாய மென்ன...! சொற்களில் உனக்கு பிடித்தமில்லையா!? கற்கண்டு பார்வையால் கவிழ்ப்ப தென்ன...! சுடும் பார்வை கூட குளிர் நிலவாக மாறி பனிக்கூழாக உன்னில் என்னிதயம் வழிவதென்ன..! கவி பேசும் திராட்சை கண்களுக்கு காதல் சொன்னால் மட்டும் கோவமென்ன...! இரு கண்கள் சந்திப்பில் ரசவாதம் நிகழ்வதென்ன கண்ணே உன்னைக் கண்டு என் இதயம் இடம் மாறுவதென்ன ...!                               -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை--உறவாக வந்தவள் நீ

Image
            ஒரு பக்க கதை - உறவாக வந்தவள் நீ                                        இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளை மருத்துவமனை அனுப்ப முடிவு செய்தது. அவளுக்கென யாரும் வரவில்லை என்றதும் கவலையிருக்க தான் செய்தன. இருந்தாலும் இந்த இரு பெரிய பேருந்துகள் மோதி நிறைய பேர் இறந்து இருக்க, அவள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான். என்ன நினைவு ஆற்றல் தான் சுத்தமாக இல்லை.         சரி போனால் போகட்டும் என்று தான் அவளும் கிளம்பினாள். மனதில் சிறு பாரத்துடன். அப்பொழுது தான் ஒரு பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து தாய் இறந்து விட, அக்குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில் ஆசிரமம் அனுப்ப எண்ணினர் அமருத்துவ நிர்வாகம்.          உடனே நினைவு இழந்த அவள் எனக்கு இந்த குழந்தை தாருங்கள் நல்ல முறையில் வளர்க்கிறேன். இங்கேயே ஒரு சின்ன வேலை கொடுத்தால் கூட போதும் என்றாள்.                        மருத்துவ பெண் என்ன நினைத்தாளோ சரி என இசைத்திட, நினைவு இழந்த அவள் அக்குழந்தையின் தளிர் கரத்தில் முத்தமிட்