முதல் முதலாய் ஒரு மெல்லிய-5
💘 5 அடுத்த நாள் கல்லூரி கிளம்பும் போதே , இன்று எப்படியாவது அஸ்வினோடு போவதை தவிர்க்க லேட்டாக செயல்பட்டாள். ஆனால் அவளுக்கு தெரியாது அஸ்வின் அவளது சிறு அசைவையும் கவனித்து அவனும் தாமதம் ஏற்படுத்திக் கொண்டான். பவித்ரா விஸ்வநாதனிடம் '' அங்கிள் எனக்கு டைமாகும் போல இருக்கு அவரை வேணும்னா கிளம்பிப் போகச் சொல்லுங்க அங்கிள் '' எனக் கூறினாள். கல்லூரி என்பதால் முதல் வகுப்பு தாமதமாக சென்றாலும் கவலையில்லை. அலுவலகம் அப்படியில்லையே. '' இதே தான் அவனும் சொன்னான். டைமாகும்னா சேர்ந்தேப் போங்க நான் கிளம்பறேன் '' என சென்றார். இது என்னடா வம்பா போச்சு , எப்பவும் போல கிளம்பி இருந்தாலும் நான் முன்னாடிப் போய் இருப்பேனென தன்னையே நொந்துக் கொண்டாள் பவித்ரா . பைக்கில் அமர்ந்தப் பின்னும் எப்பொழுதும் போலப் பேசாது வந்தனர். பவித்ராவுக்கு சற்று அச்சம் ஏற்பட இறங்கும் போது தொலைப்பேசி எடுத்து ‘’ஹலோ அப்பா” என தானாக பேசிக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள். அஸ்வின் அவளை '' பவித்ரா '' என மெதுவாக கூற கேட்டும் கேட்காது போல் நடந்தாள். வகுப்பறை வந்தும் பதட்ட