முதல் முதலாய் ஒரு மெல்லிய-10
💘 10 காலை ராதை எழுந்து தினசரி பணியை மேற்கொள்ள , நேரம் ஆனபோதும் பவித்ரா எழுந்து வராததைக் கண்டு ராதை எழுப்ப , பவித்ரா உடல் காய்ச்சல் அடித்தது. அஸ்வின் மாத்திரை கொடுத்தும் வாங்க மறுத்திட , ராதை கொடுத்த பாலையும் அருந்த மறுத்தாள். தன்யா, ஆகாஷ் , விஸ்வநாதன் , அஸ்வின் என பள்ளி , அலுவலகம் சென்ற பின்னர் ராதை சாப்பிட கூப்பிட்டும் , ஸ்ரீராமை உள்ளே கூப்பிடாததை சொல்லி சாப்பிட வர மறுத்தாள். தொலைப்பேசி மணி அடிக்க ராதை எடுத்து பேசினாள் . அஸ்வின் பவித்ராவைப் பற்றிக் கேட்க , பவித்ரா சொன்னதை அஸ்வின்கிட்ட சொன்னாள் , காய்ச்சல் அதிகம் ஆனதையும் கூற , நான் அரை மணி நேரத்தில் வர்றேன் என அஸ்வின் போனை வைத்தான். அரை மணி நேரத்தில் அஸ்வின் ஸ்ரீராம் இருவரும் வந்துச் சேர்ந்தனர் . '' உள்ள வா... வாங்க '' என அஸ்வின் வரவேற்க , ஒரு வெற்றிப் புன்னகையோடு ஸ்ரீராம் உள்ளே வந்தான். அஸ்வின் , ராதையிடம் ஜூஸ் , டிபன் எடுத்து வர சொன்னான். '' பவித்ரா அடம் பிடிக்காம சாப்பிடு '' '' எனக்கு ஏதும் வேணாம் '' என திரும்ப ஸ்ரீராம் அங்கே நின்றிருந்தான். '&