முதல் முதலாய் ஒரு மெல்லிய-13
💘 13 அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடு வந்து தயாரானாள். பாதைகள் எல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டாள். பழகிய தெருக்களாக மாறியதால் நடந்துப் போக முடிவு எடுத்தாள். ஆகாஷ் ராதையிடம் கூறுவது போல் பவித்ராவிடம் , '' அம்மா அந்த ஸ்ரீராம் நம்ம அஸ்வினோட கிளாஸ் மேட். ஆனா அஸ்வினுக்கு அவனுக்கும் ஆகாது , காலேஜில பஸ்ட் இயர் எதுக்கோ முட்டிகிச்சு , ஏன் ஒரு ஹலோ சொல்லற அளவுக்கு கூட தோழமை இல்லை. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு '' பவித்ரா இயல்பாக '' போய்விட்டு வர்றேன் அத்தை '' என்றாள். '' சரிம்மா பார்த்துப் போ '' என்ற ராதைகுள் சிறு கலக்கம். ஒரு தெரு நடந்து செல்ல அவளது அருகே ஸ்ரீராம் கார் நின்றது. '' வீட்டிற்க்கே வந்து பிக் அப் பண்ணி இருப்பேன். பட்.. ஏறு '' என புன்னகைத்தான். ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திலே '' அஸ்வினும் நீயும் சேம் கிளாஸ்ல படிச்சிங்களா ?'' '' ஆ ...ஆமாம் '' என சொல்கையில் அவன் புன்னகை மாயமானது '' '' அன்னிக்கே ஏன் சொல்லல '' என்றாள். '' இதே கேள்வியை அஸ்வின்