Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-13

Image
     💘  13 அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடு வந்து தயாரானாள். பாதைகள் எல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டாள். பழகிய தெருக்களாக மாறியதால் நடந்துப் போக முடிவு எடுத்தாள். ஆகாஷ் ராதையிடம் கூறுவது போல் பவித்ராவிடம் , '' அம்மா அந்த ஸ்ரீராம் நம்ம அஸ்வினோட கிளாஸ் மேட். ஆனா அஸ்வினுக்கு அவனுக்கும் ஆகாது , காலேஜில பஸ்ட் இயர் எதுக்கோ முட்டிகிச்சு , ஏன் ஒரு ஹலோ சொல்லற அளவுக்கு கூட தோழமை இல்லை. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு '' பவித்ரா இயல்பாக '' போய்விட்டு வர்றேன் அத்தை '' என்றாள். '' சரிம்மா பார்த்துப் போ '' என்ற ராதைகுள் சிறு கலக்கம். ஒரு தெரு நடந்து செல்ல அவளது அருகே ஸ்ரீராம் கார் நின்றது. '' வீட்டிற்க்கே வந்து பிக் அப் பண்ணி இருப்பேன். பட்.. ஏறு '' என புன்னகைத்தான். ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திலே '' அஸ்வினும் நீயும் சேம் கிளாஸ்ல படிச்சிங்களா ?'' '' ஆ ...ஆமாம் '' என சொல்கையில் அவன் புன்னகை மாயமானது '' '' அன்னிக்கே ஏன் சொல்லல '' என்றாள். '' இதே கேள்வியை அஸ்வின்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-12

Image
    💘  12            அடுத்த இரு தினம் கழித்து , தவசுடர் சுவாதியுடன் ஸ்கூட்டியில் வந்து நேராக பவித்ராவை பார்த்து '' ஏன் உனக்கு அஸ்வினை பிடிக்கலை ? அவனை போல பையன் கட்டிக்க கசக்குமா உனக்கு ?'' என்று சண்டைக்கு வராத குறையாக கேள்வி கேட்டு நின்றார். பவித்ராவுக்கு தலை சுற்றியது. இரு தினத்திற்கு முன் இருந்த பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. '' என்ன பார்க்குற ? என் அஸ்வின் வீட்டுக்கு வந்து உன்னை பத்தி சொன்னான். அவன் மனசைத் திருடிட்டு வந்தவளை எப்படி சும்மா விடுவான். போகப் போக அஸ்வினை உனக்கு பிடிக்கும் இந்தா ஸ்வீட் '' என கொண்டு வந்த ரசகுல்லாவை   வாயில் ஊட்டி ராதையிடம் சென்றார். '' அரசியல் கட்சி போல் பல்டி அடிக்கறாங்களா ?! அம்மாவுக்கு அஸ்வின்னா ரொம்ப பிடிக்கும் தாத்தாவோட சுபாவம் அப்படியே இருக்கறவன். அவன் விருப்பம் நிறைவேற ஆசை அதான். '' என்று சுவாதி விளக்கம் அளித்தாள். '' எனக்கு எழுத வேண்டியது நிறைய இருக்கு நான் படிக்கிறேன் '' என நழுவினாள். நாட்கள் இனிதாக நகர்ந்தன. கல்லூரியில் இருந்து உணவு நேரம்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-11

Image
    💘  11            நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்ந்தன. தவசுடர் (சுவாதியின் அம்மா விஸ்வநாதனின் தங்கை) குழி பணியாரம் செய்து , விஸ்வநாதன் வீட்டுக்குள் வந்தாள். ராதையோடு பேசிக் கொண்டு இருக்க , பவித்ரா உள்ளே நுழைத்தாள். '' யார் இந்த பொண்ணு ?'' எடை போட்டு கேட்டார். '' உங்க அண்ணாவின் நண்பர் பொண்ணு அண்ணி. பெயர் பவித்ரா , இங்க தான்   தங்கியிருக்கா. சுவாதி சொல்லலையா அண்ணி '' என்று கேட்டார். '' இல்லை '' தவசுடர் பவித்ராவை உன்னிப்பாக கவனிக்க தவறவில்லை. '' பவித்ரா... இவங்க அங்கிளோட தங்கை சுவாதிவோட அம்மா. பெயர் தவசுடர் '' '' வணக்கம் ஆன்ட்டி '' என கை எடுத்து கும்பிட , '' பொண்ணு மரியாதையை தெரிஞ்சு வைச்சு இருக்காளே , நல்லா இரு '' என ஆசிர்வதித்தாள். சற்று நேரம் கழிந்தன. தனு வந்து தவசுடரை கட்டிக் கொண்டு குழி பணியாரம் சாப்பிட்டு மகிழ்ந்தாள் , சுவாதியும் வந்து சேர்ந்தாள். சுவாதியிடம் , '' ஏண்டி ஒன்னு விடாம உளறுவ , இங்க பவித்ரானு ஒரு பொண்ணு வந்து இருக்கறது சொல்லவே இல்லையே ''