Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-29

Image
    💘29 வருணும் , நந்தகோபாலனும் அன்று போலவே வரவேற்க வந்தனர். கண்களை அழுத்தி துடைத்து புன்னகைக்க முயன்று தோற்று வந்தாள்.   '' அக்கா இனிமே எங்க கூடவே இருப்பல '' என்று கேட்டதும் '' ஆமாம் வருண் '' என்று தம்பி தோளில் கைபோட்டு நடந்தாள்.   '' சாப்பிட்டியா பவித்ரா ?'' என்று நந்தன் கேட்க '' சாப்பிட்டேன் பா '' என பொய்யை நன்றாகச் சொன்னாள்.       வீடு வந்ததும் அவளது பரிசினை வருணே எடுத்து அனைவரிடம் வழங்கினான்.       '' அக்கா என் டேப்( Tab) சூப்பர் இனி இதுலயே நான் கேம் , சாங் , மூவி , எல்லாம் இன்ஸ்டால் பண்ணிப்பேன். தன் தந்தை வாட்ச் பார்த்து அப்பா எனக்கு டென்த்ரிசல்ட் வந்த பிறகு இது மாதிரி வாட்ச் வேணும் என்றான் ''    மங்கை புடவை பார்த்து '' நல்லா இருக்கு , இந்த நிறம் என்கிட்ட இல்லை , கயல்கிட்டயும் இல்லை '' என்றார் மங்கை.                   பர்வதம் பாட்டி வீட்டில் இல்லை , ரகு வீட்டிற்குச் சென்று இருக்க சற்று அமைதியானாள். ரகு வீட்டிலோ அவனைப் பற்றிய புகார் வந்த வண்ணம் இருக்க , முதல் முறையாக பவித்ரா

முதல் முதலாய் ஒரு மெல்லிய-28

Image
  💘 28 அடுத்த நாள் ஐசியூவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றி இருந்தனர். அஸ்வின் கீழேயிருந்து கொள்ள பவித்ரா மட்டும் அறைக்குச் சென்றாள்.    '' இப்ப எப்படி இருக்கு ஆன்ட்டி ?'' என்று ஆதூரமாய் கேட்டாள்.   '' பரவாயில்லை மா. நீ இல்லைன்னா செத்துப் போய் இருப்பேன் '' என்றார் அவர்.      '' அப்படிச் சொல்லாதீங்க ஆன்ட்டி , எத்தனையோ பேர் இருந்தாங்க நான் வரலைனாலும்  யாராவது உதவி செய்து காப்பாற்றி இருப்பாங்க '' என்று நிதர்சனத்தை கூறினாள்.     '' உன்னை வேணாம் என்று சொன்னதுக்கு கடவுள் என்னை சரியான தண்டனை   கொடுத்து தண்டிச்சுட்டாரு ” என்று பேசினார். பவித்ராவுக்கு புரியாமல் விழிக்க நீண்ட மௌனத்திற்கு பிறகு “ அன்னிக்கு கடையில் சூர்யாவோட மனைவி அவள்   தோழியோடு தனக்கும் சூர்யாவுக்கும் டிவோர்ஸ் பற்றி பேசி கொண்டு இருப்பதை கேட்டு தனக்கு இந்த நிலைமை என்பதை கூறிட ஆறுதல் கூறயியலாது ஸ்தம்பித்தாள்.    சூரியாவின் தாயே கண்ணை துடைத்து கொண்டு '' பவித்ரா அவன் நேற்றில் இருந்து சாப்பிடலை போய் சாப்பிட சொல்லுமா '' என்றதும் இனி அவர்கள் அதிகம

முதல் முதலாய் ஔ மெல்லிய-27

Image
  💘27 அன்று ஞாயிறு என்பதால் பவித்ராவுக்கு பருப்பும் சேனை வறுவலும் , மற்றவருக்கு சிக்கன் 65 யும் செய்தார்  ராதை.         பவித்ரா பார்க்காத போது சிக்கனை பவித்ரா தட்டில் சேனையோடுக் கலந்து விட்டு அமைதியாக அமர்ந்தான் அஸ்வின். அதை அறியாது பவித்ரா சிக்கனைச் சாப்பிட்டால் தனுவும் , சுவாதியும் ஆகாஷ் மூவரும் சிரிப்பை அடக்க படாதப்பாடு பட்டனர்.            ஸ்ரீராம் உள்ளே நுழைந்தான். '' என்னப்பா என்னை விட்டுட்டு சாப்பிடுறிங்க '' என பவித்ரா அருகே அமர்ந்தான். '' ஏய் பவித்ரா நீ வெஜ்னு சொன்ன இப்ப சிக்கன் சாப்பிடற ?'' என்று கேட்டான். '' இல்லை ஸ்ரீராம் இது சேனை வறுவல் '' என்று அறியாதவள் சொல்லவும் ராம் மறுத்தான். '' சிக்கனை எப்படி செய்தாலும் கண்டு பிடிச்சுடுவேன் சிக்கன் என் பேவரேட் இது சிக்கன் தான் '' என்று அழுத்தமாய் கூறினான்.   பவித்ரா இம்முறை தட்டை உன்னிப்பாகக் கவனிக்க , தற்போது சிரிப்பை அடக்க முயன்று   இயலாது தன்யா சுவாதி சிரித்தனர்.   '' இது உங்க வேலையா ? அத்தை இங்க பாருங்க '' என துணைக்கு ராதையை அழை