Posts

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?       படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.      மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.     பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் இங்கே அதிக வார்டு இல்லையென கூறி சென்றனர்.    காயத்ரி அவர் கணவன் சிவகுமார் ஆஸ்பிடலில் தனிதனிப்பிரிவில் சிகிச்சை எடுத்தனர்.      காயத்ரி சிவகுமார் அருகே செல்ல முடியவில்லையே என்று கவலை தோய்ந்து இருந்தார். வளர்ந்த இரு பெண்கள் ஓசூரில் கல்லூரி படிக்க சென்றிருந்தனர். இருவரும் சேர

தீர்ப்பெழுதிய பேனா

Image
                                   தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, "இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா... பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க" என்று தழதழத்து கூறி முடித்தார்.    எதிரில் இருந்தவர்களோ "இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்கா பணத்தை எடுத்து கொடுங்க. வாங்கிட்டு போயிட்டே இருப்போம். இல்லை மொத்தமா வேண்டும் இது என் நிலம் அப்படியிப்படி வீராப்பு பேசினா ஒரு செங்கல் கூட கிடைக்காது.    இதை கட்ட செலவான கோடிகளை கணக்கு எடுத

சைராவும்🐕 சேட்டைக்காரியும்👧🏻

Image
                         சைராவும் சேட்டைக்காரியும்           ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.      தற்போது அதன் வாழிடமான ஆலமரத்தின் கீழ் பகுதியிலிருந்து வேறிடம் நோக்கி இடம் பெயர யோசித்து கொண்டிருந்தது. ஏனென்றால் அது வயிற்றில் தற்போது குட்டிநாய்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியே பிறந்து விடும் நிலைக்கு இருந்தது.     அதனால் அது தக்க பாதுக்காப்பான இடம் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது.     அவ்வூரில் சற்று நெடுஞ்சாலையை தாண்டி சென்ற போது பசி வாட்டியெடுக்க ஒரு டீக்கடையின் கீழ் நின்றது. அப்போது அங்கே வந்த பருப்பு வியாபாரி ஒருவர் அந்த நாயை கண்டு பாவம் பார்த்து பட்டர் பிஸ்கேட் வாங்கி அதற்கு போட்டார்.       நாயும் வாலாட்டி நன்றி உரைத்து பிஸ்கேட்டை சாப்பிட்டது. அந்த பருப்பு வியாபாரி அவ்விடம் விட்டு பைக்கில் அவரது வீட்டுக்கு செல்லவும் அந்த நாயும் பின் தொடர்ந்தது.     ஒரு பெரிய கேட்டின் உள் செல்ல நாயும் உள்ளே வந்தது. வீட்டுக்கு வந்தப் பின்னரே அது தன்னை தொடர்வதை அறிந்து தன் மனைவியிடம் பிஸ்கேட் வாங்க

அ-அம்மா ஆ-ஆதிரா

Image
                                               அ-அம்மா ஆ-ஆதிரா           "தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.     சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர்.     மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்..." என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை அனைத்து வைத்து தலையை தாங்கி அமர்ந்தாள் ஜானவி.       இது போன்ற செய்தி வருடத்துக்கு பல தடவை வந்து அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பெண் பிள்ளை பெற்றெடுத்தவர்களை கதிகலங்க வைத்து கவலை கொள்ள செய்கின்றது.      எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து பள்ளியிலேயே குட் டச், பேட் டச் என்று பாடம் நடத்துவதாகட்டும், வகுப்பில் இது போன்று பேசி புரியவைக்கும் முயற்சியாகட்டும், அடிக்கடி கதை நாவல், குறும்படம், சினிமா நாடகம் என்று எத்தனை விதங்கள் மூலம் விழிப்புணர்வு அடைந்தாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வருடத்தில் புள்ளிவிவரத்தில் கூடுதலாகிறது.          எத்தனை பெற்றோர்

செந்நீர் துளிகள்

Image
                                            செந்நீர் துளிகள்           பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.    பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.     தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.     "சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்... வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?" என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.      "நோ... இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை." என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார்.     மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்