உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14
( ௧௪) 14 விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான். அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது. மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான். விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் . ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான். அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டது. இன்று வந்திருக்கும் இளவரசர்களுக்கு அறிய வாய்ப்பு இன்று எமது மகள் ருத்திராவை மணம் புரிய அறிய வாய்ப்பு. அதாவது ஆகபட்டது ஒரே முறையில் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு மீன் சக்கர கேடயத்தையும் , வானில் புறாவின் காலில் கட்டி பறக்கவிடும் ஓலையினையும் , நீரில் காவலர்கள் போடும் ரத்தின கற