முதல் முதலாய் ஒரு மெல்லிய-26
💘26 அஸ்வின் வீடே அமர்க்களமாக காட்சி அளித்தன. தனுவிற்கு பவித்ரா சேலைக்கட்டி விட்டாள். பின் தவசுடர் அளித்த இளஞ்சிவப்புநிற பட்டை பவித்ரா அணிந்தாள். இளஞ்சிவப்பு நிறபட்டில் ஒரு அழகிய ரோஜாவாக இருந்தவளை '' வாவ் சூப்பர் அண்ணி '' என தனுவும் , '' மகாலக்ஷ்மி மாதிரி இருக்க '' என விஸ்வநாதனும் ராதையும் கூறினார்கள். அதன் பின் வந்த ராமும் '' லுக்கிங் ஆவ்ஸம் '' என ரசித்து சொல்ல , அஸ்வின் மட்டும் உற்றென்று இருந்தான். அஸ்வினுக்கு தான் கொடுத்த சேலையை பவித்ரா அணிவாள் என்ற ஆவலே அதற்கு காரணம். அவன் தன்னை ஏதும் சொல்லாதது பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவளுக்கு தெரியாது இரசித்து , எப்போதும் போல் அவன் செல்லில் அவளை சிறைச் செய்தானென்று. நந்தன் வருவதாக இருந்து பின்னர் வர இயலாமல் போனது. சுந்தரத்திருக்கு கொஞ்சம் உடல்நிலை சறுக்கியதே காரணம் . அஸ்வின் கோட்சூட்டில் அழகாக வலம் வந்தான். வந்தவர்களின் பார்வை அவனை மொய்க்காமலில்லை. குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க அஸ்வின் பவித்ரா அருகே நிற்க பவித்ரா மனம் சிறகடிக்க அதே மனநிலையில் தான் அஸ்