Posts

முதல் முதலாய் ஒரு மெல்லிய-26

Image
  💘26 அஸ்வின் வீடே அமர்க்களமாக காட்சி அளித்தன. தனுவிற்கு பவித்ரா சேலைக்கட்டி விட்டாள். பின் தவசுடர் அளித்த இளஞ்சிவப்புநிற பட்டை பவித்ரா அணிந்தாள். இளஞ்சிவப்பு நிறபட்டில் ஒரு அழகிய ரோஜாவாக இருந்தவளை '' வாவ் சூப்பர் அண்ணி '' என தனுவும் , '' மகாலக்ஷ்மி மாதிரி இருக்க '' என விஸ்வநாதனும் ராதையும் கூறினார்கள்.    அதன் பின் வந்த ராமும் '' லுக்கிங் ஆவ்ஸம் '' என ரசித்து சொல்ல , அஸ்வின் மட்டும் உற்றென்று இருந்தான்.     அஸ்வினுக்கு தான் கொடுத்த சேலையை பவித்ரா அணிவாள் என்ற ஆவலே அதற்கு காரணம். அவன் தன்னை ஏதும் சொல்லாதது பவித்ராவுக்கு கஷ்டமாக   இருந்தது. ஆனால் அவளுக்கு தெரியாது இரசித்து , எப்போதும் போல் அவன் செல்லில் அவளை சிறைச் செய்தானென்று.   நந்தன் வருவதாக இருந்து பின்னர் வர இயலாமல் போனது.  சுந்தரத்திருக்கு கொஞ்சம் உடல்நிலை சறுக்கியதே காரணம் . அஸ்வின் கோட்சூட்டில் அழகாக வலம் வந்தான். வந்தவர்களின் பார்வை அவனை மொய்க்காமலில்லை.     குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க அஸ்வின் பவித்ரா அருகே நிற்க பவித்ரா மனம் சிறகடிக்க அதே மனநிலையில் தான் அஸ்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-25

Image
  💘25    ரகு பதுங்கிய புலி போல் பவித்ராவை நோட்டம் விட்டான். பவித்ரா மாடிக்கு சென்றுத் திரும்புகையில் ரகு வழிமறித்தான். '' ஹலோ பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னை கண்டா பயம் இருக்கு போல ஓடி ஒளிஞ்சிக்குற '' என சீண்டினான்.   '' உன்னை பார்த்து எனக்கு என்ன பயம். துஷ்டர்களை கண்டால் தூர விலகுனு சொல்வாங்க அதான் ஒதுங்கறேன் '' எனக் கூறி கீழே இறங்க , ரகு பவித்ராவின் கை பிடிக்க , '' பளார் '' என அறைந்தாள். இதை எதிர்பார்க்காத ரகு ஸ்தம்பித்தான்.   '' கை பிடிச்ச கொன்னுடுவேன். நான் அனாதையாவே இருந்தாலும் உனக்கு என்னடா. அத்துமீற செய்வியோ? இனி என்கிட்ட வந்த என் கையால தான் உனக்கு சாவு '' என சீறினாள்.    கயல்விழி இதையெல்லாம் கீழே படிக்கட்டில் இருந்து கேட்டுக் கொண் டி ருக்க பவித்ரா வேகமாக மங்கை அறைக்குச் சென்றாள்.    அறையில் வந்து கட்டிலில் அமர்ந்தப் போது எப்படித் தனக்கு இத்தகைய தைரியம் என வியந்தாள். பின்பு தான் அஸ்வின் தொட்ட கையை இவன் பிடிக்க வந்த ஆவேசமென உணர்ந்தாள்.    அடுத்த நாள் ஊருக்குக் கிளம்ப எடுத்து வைத்தாள். அஸ்வினுக்கு பிட

முதல் முதலாய் ஒரு மெல்லிய-24

Image
                                                                                    💘24        அறைக்கு வந்தும் அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இந்த அஸ்வினுக்கு நிஜமாவே பயம் என்பது எல்லாம் இல்லையா ? எனக்கு மட்டும் ஏன் இப்படி உதறுது. இதைத்தான் ' மூத்தது கோழை இளையது காளை ' என்கின்றனரோ ? இப்ப நான் இருக்கற டென்ஷனுக்கு பழமொழி வேற , என்று சலிக்க சுவாதியிடம் இருந்து மெசேஜ் வந்தது.    '' ஹாய் என்னடா செல்லம் பண்ற ?'' என்று கொஞ்சல் மொழியாக வந்தது.    '' சுவாதி அங்க ஏதாவது பிரச்சனையா ?'' என்று விஷயம் கூறாது கேட்டான்.    '' இல்லையே ஏன் ?''    '' நாளைக்கு லீவ் போடா சொன்னார்களா அத்தை மாமா ?''    '' போடா ட்யூப்லைட் காலேஜே லீவ்... பவித்ரா கூட லீவ்க்கு தானே ஊருக்கு போய் இருக்கா '' என்றாள் சுவாதி.    '' ஆமால. நாளைக்கு ஏதாவது ப்ரோக்ராம் சொல்லி இருக்காங்களா ?'' என்று கேட்டான்.    '' இல்லை அப்பாவுக்கு ஆபீஸ் இருக்கு. அம்மா அப்பாவோட உறவுமுறைல ஒரு விழாவுக்கு கிளம

முதல் முதலாய் ஒரு மெல்லிய-23

Image
  💘23                       பவித்ரா இன்னும் மூன்று நாள் கழித்து கிளம்பிடுவாள் . நாளை எப்படியாவது பவித்ராவிடம் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டுமென கயல்விழி நினைத்தாள்.     நந்தனோ ஒரு அட்ரஸ் தந்து அங்கே பவித்ராவையும் ஈஸ்வரமூர்த்தியையும் செல்லச் சொன்னார். அந்தவூர் பவித்ராவின் உண்மையான தாய் தந்தை ஊர் என்று அங்கு சென்றப்பின் தான் அறிந்தாள்.      பவித்ராவின் சொந்த தாத்தா பவித்ராவை பார்த்து விட்டு வந்த பின் ஒரு மாதத்தில் இறந்து விட்டாரென தெரிந்துக் கொண்டாள் .       யாரும் உறவுகள் பெரிதாக இல்லை என்றாலும் செல்வம் இருந்தன. அதற்கு அந்த வீடும் வீட்டின் அமைப்பும் பறைசாற்றின. அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மற்றும் அவளது தாய் தந்தையர் புகைப்படம் அவளின் தாத்தா புகைப்படமென எண்ணற்ற புகைப்படம் இருந்தன.   அதில் அவளது சிறு வயது குழந்தை புகைப்படம் மட்டும் எடுத்து கொண்டாள் , மற்ற தாய் தந்தை புகைப்படத்தை எடுக்க மனம் இல்லை. கயல் தன்னை மகளாக எண்ணவில்லை என்று நினைத்தாலும் கயல் , நந்தனை தன் தாய் தந்தையாக மனதில் நினைத்ததே காரணம்.     ஆனால் ஈஸ்வரமூர்த்தி அவராகவே பவித்ராவின் குடும்ப புகைப்படத்தை எடுத்த