Posts

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14

Image
  ( ௧௪) 14            விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான்.            அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது.                மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான்.      விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் .                   ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான்.           அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டது.           இன்று வந்திருக்கும் இளவரசர்களுக்கு அறிய வாய்ப்பு இன்று எமது மகள் ருத்திராவை மணம் புரிய அறிய வாய்ப்பு.              அதாவது ஆகபட்டது ஒரே முறையில் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு மீன் சக்கர கேடயத்தையும் , வானில் புறாவின் காலில் கட்டி பறக்கவிடும் ஓலையினையும் , நீரில் காவலர்கள் போடும் ரத்தின கற

சிரமமில்லாமல் சில கொலைகள் -2

Image
  சிரமமில்லாமல் சில கொலைகள் 🩸-2     சர்வேஷ் காபி பருகி முடித்து கனவு அது என்று தன்னையே நம்ப வைத்து கொண்டான்.       சாந்தனு தனது காதலியை பார்க்க செல்வதாக கடற்கரைக்கு கிளம்பினான். போகும் பொழுது சர்வேஷை பார்த்து,      "மச்சி நீயும் வர்றியா டா?" என்றான்.      இருகையை மேலுயுர்த்தி "வேண்டாம்டா சாமி... நீங்க லவ் பேர்ட்ஸ்... நான் என்ன மண்ணை அள்ளி வீடு கட்டவா போடா." என்று அனுப்பி விட்டு டிவியை ஆன் செய்தான்.      நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடல் கேட்டவன் அடுத்து படத்தை மாற்றினான். 'கிங்காங்' நியூயார்க் நகரத்தை துவசம் செய்ய பத்து நிமிடம்  ஓட அனிமல் பிளனட் மாற்றினான். சிங்கமொன்று ஹைனாவை தூரத்த டிஸ்கவரி சேனல் மாற்றினான்.         பெயர் அறியா பறவை நீரில் முங்கி அழகாக நீந்தி செல்ல பார்த்து இரசித்தவன் அது முடிய நியூஸ் மாற்றினான்.     தமிழ் செய்திகளில் இருந்து டிராவல் கைய்டு என்ற ஆங்கில சேனலில் மாற்றினான். மீண்டும் பத்து நிமிடம் பார்த்து முடித்து மாற்றும் சமயம் பிபிசி செய்தி அலைவரிசை கண்ணில்பட்டது. அதில் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில், இரவு  ஒரு பதினெட்டு

தீவிகை அவள் வரையனல் அவன் -16

Image
  தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥-16 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13

Image
  ( ௧௩) 13                 ருத்திரா மயங்கி சரிய புரவியில் மித்திரன் அவளை கிடத்தி  துர்வன் இருப்பிடம் செல்ல அதனை தன் யாகத்தின் தீயில் கண்டு ஆனந்தம் கொண்டான் துர்வன்.              இங்கு மித்திரன் இக்காரிகையை கண்டால் எம் மனமெங்கும் உவகை ஊற்று பெருகின்றது. இவளோடு என் நினைவு பயணம் ஏதோ சொப்பணத்தில் காண்பதாக தெரிகின்றது ஆனால் இப்பெண்ணை இதற்கு முன் பார்த்த நினைவு இல்லையே எதனால்... ? இவளை துர்வன் திருமணம் செய்ய போகும் உறவு என்று எந்தை சொன்னாரே அப்படி என்றால் எப்படி எமக்கு இவள் மீது உவகை வரலாம் ? யான் தமையனுக்கு தீங்கிழைக்கும் கயவனா ? நற்பிறப்பு அல்லாது மாக்கன் நானோ ?           எழில் கொஞ்சும் இவளை தமையனிடம் எந்தையிடமும் ஒப்படைத்து உயிர் துறக்க வேண்டும். அவதூறான எண்ணங்கள் கொண்டு அவதினியில் இருக்க கூடாது என்று புரவிக்கு வேகம் தொடுக்க பயணித்து அந்த இடுகாட்டிற்கு வந்து சேர்ந்தான்.            அங்கிருந்து புரவி மேதினியில் ஓசையிட்டு செல்ல மனதின் எண்ணம் தறிக்கெட்டதாக எண்ணினான்.                ( துர்வன்) பரிதி முன் வந்து நிறுத்தி பணிந்து "தமையன் மணம் புரியும் காரிகையினை கொண்டு வந்தோம