எந்த நொடியில் என்னிதயம்
அவள் புள்ளி வைத்து போட்ட கம்பிக் கோலத்தில் என்னிதயமும் அடைப்பட்டதா ? அவள் வீட்டுப் பூவை பறித்தப் போது என்னிதயமும் பறிபோனதா ? அவள் மயிலிறகு தொலைத்து தேடிய போது என்னிதயமும் தொலைந்ததா ? அவள் எழுதுகோலை பல்லிடுக்கில் கடித்தப் போதே என்னிதயமும் கடிபட்டதோ ? அவள் காந்தப் பார்வைக்கு கூடுதல் ஒளிவீச மைதீட்டிய போது என்னிதயமும் ஒளிவீசியதோ ? எப்படி இழந்தேன் என்னிதயத்தை யாரேனும் காதலில் முனைவர் பட்டம் பெற்றிருப்பின் எந்த நொடியில் என்னிதயம் களவாடப்பட்டதென சொல்லுங்கள் அதை அவளுக்கு சொல்லவேண்டும் அவளொரு கள்வனின் காதலியென்று ஆம் நான் கள்வனே அவள் இதயத்தை திருடியதால்... -- பிரவீணா தங்கராஜ் .