Posts

வினாத்தாள் (question paper)

Image
வினாத்தாள் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

சவ ஊர்வலம்

இராஜ உபசரிப்பில்            மலர்வன தூவலில்                      பல வித ஆரவாரத்துடன்                                ஆடல் , பாடல் , வெடி சத்தத்துடன்                                            இன்னிசை கச்சேரி யுடன்                                                        வீதியில் உலா வருகிறது                                                                     இடுகாட்டில் புதைந்து கொள்ள !                                                                                                            --  பிரவீணா  தங்கராஜ் .

மலரே !

Image
"பூக்களை பறிக்காதீர் " இது விளம்பரம் அல்ல என் மனதின் வேண்டுக்கோள் அது எப்படி? பறிக்கும் போது சிரிக்கின்ற மலரை கிள்ளி தலையில் சூடுவது மனித மனமே! யார் உனக்கு கற்று கொடுத்தார்? குழந்தை போல் சிரிக்கும் மலரை கிள்ளுவதற்கு  மலர் மீது படர்ந்திருக்கும் பனித்துளியை பார்  கூட்டு குடும்பமாக காட்சி தரும் மலர் தோட்டம் பார்  தொட்டு பார் மலரின் மென்மை புரியும் தன் வாழ்நாள்  ஒன்று என அறிந்த மலர் வருந்துவதில்லை பகுத்தறிவு கொண்ட மனிதனோ மலரை பறிக்கின்றான் பகுத்தறிவு அற்ற தேனியோ மலருக்கும் வலிக்காது தேனெடுக்கும் மனித மனமே ! உன் எண்ணத்தால் நாற்றம் வீசியது  உலகில் மலர் மணம் வீசியதால் உலகமே விசித்திர மயமானது . "பூக்களை பறிக்காதீர் " இது மனித மனதிற்கு மட்டும் அல்ல, கடவுளே உனக்கும் தான் வழிபடுதலுக்கும் கூட மலரை வஞ்சிக்காதே !                     -- பிரவீணா  தங்கராஜ் .

ஒன்றுபடு !

Image
ஆறுகள்  ஒன்று பட்டதால்  வற்றாத நதிகள் கிடைத்தது  பாதைகள்  ஒன்று பட்டதால்  தெளிவான வழி கிடைத்தது  பூக்கள் ஒன்று பட்டதால்  வையகமே மணம்  கமழ்ந்தது  மேகம் ஒன்று பட்டதால் பூமிக்கு மழை வந்தது  ஐவிரல் ஒன்று பட்டதால்  உழைப்பின் உன்னதம் புரிந்தது  வையகத்தின் வாழ்வு செழிக்க  மனித மனமே ஒன்று படு !                           -- பிரவீணா  தங்கராஜ் .

zoo

Image
வீட்டில் இருந்தபடியே ஒரே இனத்தை சார்ந்த பல முகம் கொண்ட பல குணம் கொண்ட மனித விலங்கை பார்க்கிறது உயிரியல் பூங்காவில் ...                 --   பிரவீணா  தங்கராஜ் .

உன் கையில் உலகம்

Image
வெற்றியை பணிந்திடு  தோல்வியை இரசித்திடு ! உன் திறமை என்ன ? உனக்குள் யோசி ! சாதனையை தேடாதே  அதனை உருவாக்கு. உலகத்தில் உன்னை காணாதே  உலகம் உன்னை காணட்டும் . காயங்களை அனுபவமாக மாற்று  அனுபவம் உன் வாழ்வில் ஒளி வீசும் .             --  பிரவீணா  தங்கராஜ் .

கல்வி

பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட  பாரில் செழிக்க வேண்டுவது கல்வி இருளில் முழுகும் இந்தியாவை இனிதாய் மாற்ற வேண்டுவது கல்வி தன்னிலை உணர்ந்த மனிதராய்  தன் காலில் நிற்க வேண்டுவது கல்வி சமுதாய இன்னலை களைந்திட சரித்திர நூலை கற்றிட வேண்டுவது கல்வி முட் போன்ற வாழ்க்கை பாதையை முழுவதும் ரோஜாவனமாக மாற்றபடுவது கல்வி                                      -- பிரவீணா  தங்கராஜ் . *ஜூன் 2009 மாத " மங்கையர் மலரில்" பிரசுரிக்கப்பட்டவை .

நாளைய உலகம்

பார்த்து சென்று வா    என்றனர் பெற்றோர் படிக்கட்டில் பயணமா?    என்றனர் நடத்துனர் பார்த்து முறைத்தான்     படிக்கட்டு இளைஞன் பாரதாமோ இன்றைய     இளைஞன் கையில்  படிக்கட்டில் தொங்கியபடி     இளைஞன் அய்யகோ! பாலகனும் படிக்கட்டில  நாளைய உலகமும்?                           -- பிரவீனா  தங்கராஜ்