🐜எறும்புகள் பேசினால்...🐜
நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார் பாதசாரியில் பணிந்தே செல்கின்றேன் பருக்கையை உதாசீனமாக தவற விட்டாய் சஞ்சீவி மலைப் போல் சுமந்துக் கொண்டு நடக்கின்றேன் எனக்கு அவை தான் தேவாமிர்தம் சேமிக்கின்றேன் உணவினை சுறுசுறுப்பாய் கடக்கின்றேன் நிமிடங்களை நேர்வரிசையில் நடக்கின்றோம் ஒருவித ஒழுங்கோடு இதெல்லாம் உன்னிடமில்லாதது தான் எறும்பாய் எனக்கு வித்திட்ட வாழ்வில் உன் பாதம் பட்டாலே மரணமென்றாலும் நான் கலங்குவதில்லை நில் நில் மனிதா ...! சற்றே கூர்ந்துச் செல் எனக்கும் ஒரு காதலியிருப்பாள் எனக்கும் குடும்பம் குழந்தையிருக்கும் உந்தன் அலட்சியம் எந்தன் வாழ்வை பலிகொள்வதா ..?! நில் நில் மனிதா ..! சற்றே கூர்ந்துப் பார்த்துச் செல் . எறும்புகளான நாங்களும் உங்கள் உலகில் தான் வாழ்கின்றோம் . -- பிரவீணா தங்கராஜ் .