🩸-4 ஆண்டர்சன் தன் வீட்டில் தனித்து இருக்க, அந்த சில்லென்ற காற்று கூட ஏதோ திகிலை தந்தது. கதவுகள் ஜன்னல்கள் மூடி வைத்து தனதறையில் படுக்க முனைந்தார். எங்கிருந்தோ காற்று புயல் போல வீச கதவு ஜன்னல்கள் படபடவென அடிக்கும் ஓசை வரவும் தன் பூட்டி வைத்த கதவு ஜன்னலை தான் பார்த்தான். பூட்டியவை ஓசையெழுப்பியது எண்ணி குழம்பியவனுக்குள் ஆண்டர்சன் என்ற ஆத்மாவும் இல்லாது புகழேந்தி என்ற மானிடனின் ஆத்மா எண்ணங்களும் கலவையாக வந்து நின்றது. காற்றின் வேகமாக அடிப்பது போன்ற மாயையை தர ஆனால் கதவும் சாற்றி இருக்க, இம்முறை பொருட்கள் எல்லாம் மேலெழும்பி ஆண்டர்சனை சுற்றி சுற்றி வட்டமிட்டது. தன் மீது மோதிடுமோ என்று ஆண்டர்சன் நகர அவனை உரசாது வீட்டின் பொருட்கள் எல்லாம் மோதுவது போன்று வந்து வந்து விலகியது. அதிலும் அந்த கத்தி வந்து கழுத்தில் நிற்க ஆண்டர்சன் தொண்டைக்குழி ஏறியிறங்கி கண்கள் அச்சத்தில் திகைக்க, யாரோ காலிங் பெல் அழுத்தம் கேட்க, ஹாலுக்கு ஓடினான். கதவு வெறுமென சாற்றியிருந்திட ஆண்டர்சனை காண வந்த பாஸ்டர் ஒருவர் மாடியில் இருந்து வரும் வழியில் விலகி விலகி எதையோ மோதுவ