Posts

பனித்தல்

Image
     பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.      பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.      அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இடைநிலை பள்ளி. அதனால் கூட்டம் உடனே கலைந்து ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.    எதிரே சற்று தள்ளி நோட் புத்தகம் விற்கும் அண்ணாச்சி இருந்தார். பாதிக்கு மேல் சாரலடிக்க அதனை எடுத்து கடைக்கு உள்பக்கம் விரசாக அடிக்கினார். தளிர்மலர் இருக்கும் மரத்துக்கு எதிரில் கடையிருக்க அங்கே எழுதும் அட்டைகள் நனைவதை கண்டாள்.        தளிர்மலரோ, "அங்கிள் ரைட்டிங் பேட் நனையுது பாருங்க. சாக்லேட் எல்லாம் பாக்ஸில இருக்கு. அது மர அட்டையில செய்தது. நனைந்தா ஊறி உப்பிடும்" என்றதும் "தேங்க்ஸ் மா தேங்க்ஸ் மா" என்று அதை முதலில் எடு

குளம்பி வாசம் வீசுதே

Image
     குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.      அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.     இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள். அன்றைய நாட்களை இன்றும் நினைவு சாரலில் மீட்டெடுத்தாள்.    சின்னதாய் துளிதுளியாய் மழை பொழிந்திருக்க அதில் நனைந்தாள் ஸ்ரீமதி.       கூடவே தந்தை சிவம் செய்து கொடுத்த கப்பலை நீரில் வைத்து அது செல்லும் பக்கம் தானும் பார்த்துக் கொண்டே, எதிரே வருபவரையோ சுற்றி இருப்பவரையோ கூட அறியாமல் அதன் போக்கில் சென்று ஒரேயிடத்தில் ஒர் சிறுவனின் தலையில் இடித்து நிமிர்ந்தாள்.      அவனும் ஸ்ரீமதி போல கப்பலை விடும் நோக்கத்தில் அவளை பார்க்காமல் இடித்து கொண்டான். நிமிர்ந்து இருவரும் முறைத்து கொள்ள, இருவரின் கப்பலும் ஒரே நேரத்தில் அந்த மேடான தெருவிலிருந்து கீழிறங்கும் பாதையில் கப்பல் அடித்து செல்லப்பட

குலானின் கை வண்ணம்

Image
    குலானின் கை வண்ணம்    https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

ஓ... பட்டர்பிளை

Image
   ஓ... பட்டர்பிளை     அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது. அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள். ''என்ன அங்கயே நிற்கற, இங்க வா'' என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது. அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில் அவளின் அனுமதியின்றி கட்டி அணைத்தான். அவனை இதுவரை இரண்டு முறை பார்த்து இருக்கின்றாள். சில நாட்களாக போனில் பேசியிருகின்றாள். ஆனாலும் அவனின் பண்போ, குணநலனோ அறிந்திராத பேதை இவளுக்கு, இவனின் அணைப்பு பஸ்ஸில் தெரியாதவன் சீண்டும் ஒவ்வாமை தான் முன்னே வந்தது. அவள் குமட்டி கொண்டு விடுபட, அவனோ என்னாயே தள்ளி விடறியா என்றே மலரிதழில் வலிக்க வலிக்க முத்தமிட்டான். அவள் எவனோ ஒருவன் எச்சி என்ற அருவருப்பு கூடவே வர தன் ஒட்டு மொத்த பலத்தை கொண்டு அவனை தள்ளி நிறுத்தினாள். இது போதுமே... ஆண்மகன் என்ற அகம்பாவத்தை கிளர்த்து விட, பெண்ணவளினை மென்மையாக பதவிசமாக கையாளும் முதலிரவில் வேங்கையெ

செந்நீர் துளிகள்

Image
        செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.      "சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்... வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?" என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.      "நோ... இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை." என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார்.      மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்பதாக ஜானகியும் புன்னகைத்தார்.       தனிஷ்காவோ உப்ஸ்ஸ்...

ஸ்டாபெர்ரி பெண்ணே-26(முடிவு)

  🍓 26               உதய் தான் போனில் கேட்டு கொண்டு இருந்தான். வெற்றி ஆராதனா தாய்மை செய்தியை உறுதி செய்ததையும் சொன்னான். உதய் மனம் நிஜமாகவே மகிழ்ச்சி உற்றது.            உண்மையான அன்புக்கு தீங்கு செய்ய தோணாது.. நல்லதை தான் அவர்களுக்கு வழங்க தோன்றும்..அதே தான் உதய் செய்தான்.             என்ன தான் அவள் தாய்மை அடைய மாட்டாள் என்று அறிந்து விலகியது தனது காதலில் சறுக்கல் வந்தன. அதனால் தான் வெற்றி உண்மையான அன்பு காதல் எல்லாம் ஆராதனாவுக்கு எத்தகைய நிலை என்றாலும் கூடவே நின்றான். இதோ இப்பவும்...              வாழ்வில் சிலர் இவருக்காக இவர்கள் என்று கடவுள் எழுதி இருப்பதும் ஒரு வித காரணத்திற்காக தான். அதே போல வாழ்வில் எந்த காரணமும் நமக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில் நன்மைக்கு தான் முடியும் என்றே எண்ணினான்.        கடவுள் எழுதும் கதைக்கும் நல்ல முடிவை தான் எதிர்பார்ப்பார் என்றே எண்ணி அவனின் மகி கையினை பற்றி கொண்டான்.                                                      FEW YEARS LATER        ''செல்வா.... செல்வா... இன்னும் என்ன செய்யற... கிளம்ப வேண்டாமா...? நல்ல நேரத்தில் போகண

ஸ்டாபெர்ரி பெண்ணே- 25

 🍓25    பெயர் ஜெகதீஷ் வயது 29..பார்கவி வயது 44.. என்றே தொடர்ந்து பெயர் போய் கொண்டு இருந்தன.        ஆராதனா தான் ''யார் உங்களுக்கு தெரிந்தவர்களா?'' என்றே கேட்க       ''ஹ்ம்ம் ஆமா..'' என்றே வெற்றி போன் செய்து சுந்தரை அழைக்க சுந்தர் ஜெகதீஷ் மும்பை சென்ற நிலவரம் மட்டும் சொன்னான். பின்னர் வெற்றி விமான விபத்து பற்றி சொல்ல       ''சார் உங்க பிசினெஸ் பண்ண கேட்டீங்க இப்போ என்ன செய்ய சார்''        ''அது விடு வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றே வைத்தான்.        ''சார் வெற்றி சார்... அவர் தானா...?''        ''ஹ்ம்ம்...'' என்றே ஆராதனா பார்த்து இப்போ எதையும் பேசதே என்றே சொல்ல அமைதியாக மாறினான். பின்னர் கிளம்பும் நேரம்          உதய் தான் மிகவும் பயந்து போனான். என்ன இது மனிதன் கொல்ல துடித்தவன் இறந்து விட்டான். அப்பவும் கூலாக இருக்கான் என்றே இருந்தான்.           ''உதய் நீ என்ன நினைக்கிறாய் என்றே தெரியுது.. எனக்கு கடவுள் துணை இருக்கார்.. அதான் அவனை அவரே பார்த்துக்கிட்டார்'' என்றே சொல