நடைபாதை கடைகள்
கூவி கூவி விற்றாலும்
கூறுக் கட்டி வைத்தாலும்
இன்று பறித்த காய்கனியை
வாங்க மறுப்பதேனோ ...?
நாட்கள் வாரங்களாகின
குளிரூட்டப்பட்ட அறையில்
வளமாக அமர்ந்துக் கொண்டு
தோள்பைக்கும் சேர்த்தே
காசை வசூலிக்கும்
இடத்தில் தான்
வாங்கத் தோன்றுமோ ?
ஏன்
விற்பவனின் கசங்கிய ஆடையும்
அழுக்குப் படிந்த முகமும் ,
குளிர்அறையில் இருப்பவனுக்கு
இல்லையென்றா...?!
இரண்டில் நமக்கு
ஆரோக்கியம் எதுவோ ?
யாமறிவேன்
யாருமறிவனரோ பரம்பொருளே !
--பிரவீணா தங்கராஜ் .
கூறுக் கட்டி வைத்தாலும்
இன்று பறித்த காய்கனியை
வாங்க மறுப்பதேனோ ...?
நாட்கள் வாரங்களாகின
குளிரூட்டப்பட்ட அறையில்
வளமாக அமர்ந்துக் கொண்டு
தோள்பைக்கும் சேர்த்தே
காசை வசூலிக்கும்
இடத்தில் தான்
வாங்கத் தோன்றுமோ ?
ஏன்
விற்பவனின் கசங்கிய ஆடையும்
அழுக்குப் படிந்த முகமும் ,
குளிர்அறையில் இருப்பவனுக்கு
இல்லையென்றா...?!
இரண்டில் நமக்கு
ஆரோக்கியம் எதுவோ ?
யாமறிவேன்
யாருமறிவனரோ பரம்பொருளே !
--பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment