பைத்தியக்காரன்
பணத்திற்கும் பகட்டிற்கும்
பரவசமில்லா பரதேசியவன்
இருக்குமிடம் தெருச் சாலை
உடுத்துமாடை கிழிசல் என்றெல்லாம்
கவலைப்படாத ஜென்மம் அவன்
சொர்க்கம் , நரகம், இன்பம், துன்பம்
உணவு, உறக்கம், உறவு
இத்யாதிகளை துச்சமென எண்ணுபவன்
பணத்தை கூட காகிதமென்பவன்
ஞானியின் சிந்தனையுடைய இவனை
ஞானியென்று கூறுவர் சிலரே
பலருக்கோ இவனொரு
பைத்தியக்காரன்
அப்படியெனில்
ஞானிக்கும் பைத்தியக்காரனுக்கும்
வித்தியாசமில்லையோ..?!
-- பிரவீணா தங்கராஜ் .
பரவசமில்லா பரதேசியவன்
இருக்குமிடம் தெருச் சாலை
உடுத்துமாடை கிழிசல் என்றெல்லாம்
கவலைப்படாத ஜென்மம் அவன்
சொர்க்கம் , நரகம், இன்பம், துன்பம்
உணவு, உறக்கம், உறவு
இத்யாதிகளை துச்சமென எண்ணுபவன்
பணத்தை கூட காகிதமென்பவன்
ஞானியின் சிந்தனையுடைய இவனை
ஞானியென்று கூறுவர் சிலரே
பலருக்கோ இவனொரு
பைத்தியக்காரன்
அப்படியெனில்
ஞானிக்கும் பைத்தியக்காரனுக்கும்
வித்தியாசமில்லையோ..?!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment