தமிழ் மகளே ...!

தமிழ் மகளே ...
உனக்கு
மரபு கவிதையெனும்
சேலைக் கட்டவே
துடிக்கின்றேன்
முடியவில்லை
'சல்வார்' , 'சோளி' போல
புதுக்கவிதை , வசனக்கவிதையே
அணிவிக்கின்றேன் .
ஹைக்கூ-யெனும்
அணிகலன்களையும்
மாட்டிவிடுகின்றேன்
இதுவும் உனக்கு
அழகு சேர்க்கத் தான்
செய்கின்றது .
எதுகை, மோனை, இயைபுவென 
சில நேரத்தில் அணிகலன்களாக
மெருகேற்ற 
அணிவித்தாலும்
மாச்சீர், விளச்சீர்,
காய்ச்சீர், கனிச்சீரென
அணிகலன் புகட்டவே
ஆசையெனக்கு
என்றாவது ஒருநாள்
உனக்கு மரபு கவிதை அணிவித்து
வெண்பா அணிகலன் பூட்டி
அழகுப் பார்ப்பேன்
என் தமிழ் மகளே...
என்னுள் ஞானவொளி ஏற்று .
                 -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு